Saturday, January 09, 2016

பிராமணர்கள் இப்போதே தயார்: தமிழகத் தேர்தல் 2016

பிராமணர்களது வரலாற்றைப் பார்க்கிறேன்
எனக்கு, இந்தப் படத்தைப் பார்த்துப் பிழைப்புவாதி கருணாநிதி அவர்கள்மீது எந்தக்கோபமும் வரவில்லை . அவர் அடிப்படையில் அரசியல் நாணயமற்ற ஊழற்பெருச்சாளி என்பது உலகறிந்த விடையம்.

இன்று, கருணாநிதி குடும்பம் பெரும் பண முதலைகள். பொதுச் சொத்தைக் கொள்ளையிட்ட பெரும் கிரிமனல்கள் இவர்கள். அதிகாரத்தைக் கையகப்படுத்தவும் ;மீளவும் ,பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கவும் கருணாநிதி குடும்பம் அமைக்கும் வலை மிகப் பெரியது.அரசியலில் இவ்வளவு மோசமானவொரு ஊழற் பேர்வழிகளை நாம் வரலாற்றில் பர்ப்பதானால் அங்கே, செயலலிதாவும் இந்தக் கிழ நரியுந்தாம் முன்னணியில் நிற்பவர்கள்.

ஆனால்,என் பிரச்சனையெல்லாம் தமிழகப் பிராமணக் கூட்டம் [ பார்ப்பனர்கள் ]பற்றியதே.


பிரமணர்கள் சொல்கிறார்கள் தாம் மக்களது நலனுக்காகவே பாடுபடுபவதாக.ஆனால் ,நடைமுறையில் தமது ஆதிக்கத்தையும் கோவில் வருமானங்களையும் காப்பதில் அவர்கள் ,எவர்களோடும் சமரசத்துக்குப் போகின்றார்கள்.இவர்கள் ,உண்மையில் மிக மோசமான அரசியல்வாதிகளைப் போன்ற இன்னொரு ஊழற்கூட்டம்தாம்.

பிராமணர்களது வரலாற்றைப் பார்க்கிறேன்.இவர்கள் , ஒடுக்குமுறையாளர்களோடிணைந்து தமது இருப்பையும் ; தமது ஆதிக்கத்தையும் ;கோவிற் சொத்துகளை -வருமானத்தைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக எவருடனும் சமரசஞ் செய்து பிழைக்கின்றனர்.

இதுவரை செயலலிதாவை அரவணைத்தவர்கள் இப்போது , கருணாநிதி பக்கம் வெற்றி சாத்தியமாகலாமெனவுணர்ந்தவுடன் சமரசத்துக்குப் போய்விட்டனர்.இது வரலாற்றுத் தொடர்ச்சி.

அன்று, கிழக்கிந்திய குப்பினிகளது - கொப்பனிகளது தயவை நாடியவர்கள் -காலனித்துவ வாதிகளுடன் சமரசஞ்செய்து பிழைத்தவர்கள்.இராண்டாவது மாகா யுத்தம் ஆரம்பித்த கையோடு மளமளவென்ற அவசரத்தோடு, யேர்மனிய மொழியான டொச்சைக் கற்க ஆரம்பித்தார்கள்.இது ஏனென நினைக்கின்றீர்கள்?


உலகைக் கிட்லர் ஆளும்போது இந்தியாவில் அவர்களது நிர்வாக அலகோடிணைவதற்கும் ,தமது இருப்புக்கான சமரசத்துக்கேதுவாகவும் மக்களைக் காட்டிக்கொடுத்துத் தாம் மட்டும் பிழைப்பதற்கென்றே வரலாறு நமக்குரைக்கிறது.

இப்போது ,கருணா நிதியை அண்டிக்கொண்டு தமது ஆதிக்கத்தை நிலை நாட்டப் பிராமணர்கள் இப்போதே தயார்.இது சினிமாப் பிழைப்பு வாதிகளை விட மோசமானவொரு நிலை!பிராமணர்கள் , பார்ப்பனியக் கொள்கைகளைவிட்டொதுக்கி , மக்களை அண்மித்து அவர்களோடு நின்று வேதம் ஓதினால் இவர்கள் மனிதர்கள்.ஆனால்,யதார்த்தில் இவர்கள் மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி விட்டு , பணமுள்ள எவர்களுடனும் சமரசஞ் செய்து தம்மைக் காக்கின்றனர்.பெரும் ஆபத்தான கருதியல் மனதுடையோரே இவர்களே!

என்னெவொரு அடக்குமுறைக் கூட்டம்?


சுயநலமும் ;பிழைப்புமா பிரமணர்களது சுயம்?

இவர்களைத் தனது ஊழல் அரசியலுக்கேற்பப் பிழைப்வாதி கருணாநிதி வியூகம் அமைத்துப் பயன்படுத்துவதில் இவர்களை அணைக்கும்போது சாவது மக்கள்தாம்.

அடக்குமுறையாளர்கள் -ஆதிக்கவாதிகள் எத்தனை இரூபத்திலிருக்கிறார்கள்! ; இவர்களை வெல்வதென்பது பெரும் கடினமான பணி.
ப.வி.ஶ்ரீரங்கன்
10.01.2016

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...