Saturday, April 09, 2011

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

[Ich will dein Vater sein und kein Prophet.]


"எவரொருவர் புரிவதற்கு முனைகிறாரோ
அப்போது, அதைப்பற்றிப் புரிந்துகொள்வது முடியாதுபோகிறது!"


"Wer zu verstehen beginnt, versteht nichts mehr."-Erich Kaestner.

எரிக் ஹெஸ்னர்! ஜேர்மனியக் கவிஞன்-போர் எதிர்ப்பாளன்.நாசிகளால் தனிமைப்படுத்தப்பட்டு,அவனது நூல்களையும் பாசிசம்கொளுத்தும்போது உலக மனிதனாக உருப்பெற்றவன்.அவன் குறித்தும்,அவனது கவிதாவுலகு குறித்தும் தொடராக எழுதுவதைத் தவமெனக்கொண்டு தொடராக எழுதுகிறேன்.எனக்கிருக்கும் அருகிய நேரத்துள் தமிழக்கு எரிக் ஹெஸ்னரைக் கொணர்வதென அவாக்கொண்டேன்!

தூங்க முடியவில்லை!தூக்கந் தொலைந்த பொழுதுகளாக எனக்கு முன் காலம் பொழுதுகளாக மலரும் தினமொரு விடியலில் நான் தவிக்கிறேன்-தொலைகிறேன்.எல்லாம் எத்தனை விடிவுகளில் கருக் குலையும் செயல்வினைமிக்க ஊக்கத்தோடு என்னைவிட்டபாடில்லாது வந்து குந்திக்கொள்ளும் குந்துக்கட்டாய் எனது அகம். எனக்கிருப்பது காலம் ஒன்றுதாம்.தனிமைப்படுத்தப்பட்ட மனிதன்!

ஒருவிடியலில் தனது முழு எழுத்தையும் நெருப்பிட்டுக்கொளுத்திய கிட்லரது அடாவடித்தனத்துள் தன் தேசத்தைவிட்டும் பிரியமுடியாத ஏக்கத்தின் வினையில் சுவிற்ஸெர்லாந்திலிருந்த தனது சக எழுத்தாள-புத்திஜீகளையெல்லாம் விட்டுத் தேசம் திரும்பும்போது,

„Ich bin ein Deutscher aus Dresden in Sachsen.
Mich läßt die Heimat nicht fort.
Ich bin wie ein Baum, der – in Deutschland gewachsen –
wenn’s sein muss, in Deutschland verdorrt.“

"நான்டொச்சு மொழியானவன்,
சக்ஸ்சன் மாநிலத்து டெறஸ்டன் நகரத்தவன்
என் தேசம் என்னைக் கைவிடுவதாகவில்லை.
நான் ஒரு விருட்ஷத்தைப் போன்றவன்.அது, ஜேர்மனியில் வளர்ந்தது.
அஃது உண்மையானால்,ஜேர்மனியல் பட்டுவிடப் போகிறது."



முதலாவதும்,இரண்டாவதும் மகா யுத்தத்தைப் பார்த்திருக்கிறான்.முதலாவது உலகப்போருள் இராணுவவீரானகப் பயிறுவிக்கப்பட்டும்,இரண்டாவது உலக யுத்தத்துள் மனிதங்கொண்ட உலகப் படைப்பாளியுமாக...

தேசம் தொலைத்து நீண்ட தூரம் போனவர்கள் நாம்!யுத்தம்,ஆட்கடத்தல்-கொலை,இனவாதத் தூண்டுதல்கள் எங்கேயும் நிலவுகிறதா?கருத்துக்களை எதிர்கொள்ளுதலென்பதைவிட உண்மைகளைப் பேசுவதால் உயிர் பறிப்பானது தொடர் நிகழ்வாகியது எங்கேயும்தாம்.எந்தத் திசையிலும் பாசிசம் முனைப்புறமுடியும்.பாசிசமானது படைப்பு நிலையை முறியடித்துவிடமுடிவதில்லை என்பதற்கு நாம் ஜேர்மனியப் படைப்பாளிகள் பலரிடமிருந்து கற்க முடியும்.

"Ich möchte endlich einen Jungen haben,
so klug und stark wie Kinder heute sind.
Nur etwas fehlt mir noch zu diesem Knaben.
Mir fehlt nur noch die Mutter zu dem Kind."

"எனக்கென ஒரு பையன் வேண்டும்,
இன்றைய குழந்தைகளைப்போல்
புத்திமானாகவும்,பலவானாகவும்!
இந்தப் பையனுக்காக என்னிடம் ஒரு குறைமட்டுமே இருக்க முடியும்.
இந்தப் பையனுக்கான தாய் என்னிடமில்லை."


பெண்ணின்றி மறுவுற்பத்தி இல்லை!பேசும் சங்கதிகள்,ஆசைப்படும் கருப் பொருளாக வெளிப்படினும் அததற்கான இருப்பு மறுக்கப்படும் உலகில் எதற்காவும் ஆசைப்படுதல்-கனவு காண்தலே சாத்தியமாகிறது.


எரிக் ஹெஸ்னர் மிகுந்த நெறிகளுக்குள் சீவித்தவர்.அவரது வாழ்நிலையில் இந்த நெறி பிறழ்தலை அவர் எப்போதுமே மீறிட முடியாது சிக்கல்பட்டார்.உலகம் அப்படியில்லாதபோது தனிமைப்பட்டார்-தனிமைப்படுத்தப்பட்டார்.ஒரு பொழுதேனும் தயக்கமின்றி மனிதப் பொதுத் தன்மைக்கு அப்பால் வாழ்ந்திருந்தார்.அவர் உலக மனிதராகவும்,தேசப் புதல்வனாகவும்,குழந்தைப் பிரியனாகவும்,யுத்த எதிர்ப்பாளனாகவும் அவர் மலர்ந்தே மறைந்திருப்பதை அவரது அழியாக் கவிதைகள் இன்றும் பறைசாற்றுகிறது.


"Schlaf ein, mein Kind! Sei still! Schlaf ein!
Man kann nichts Klügres machen.
Ich bin so groß. Du bist so klein.
Wer schlafen kann, darf glücklich sein.
Wer schlafen darf, kann lachen."




"தூங்கு மகனே,தூங்கு.அமைதியாய்,ஆழ்ந்து தூங்கு!
எவரையும்,எவரும் புத்தியாளர்களாக்க வேண்டியதில்லை.
நானோ பெரியவன்,நீயோ சிறியவன்.
எவரால் ஆழ்ந்து தூங்க முடிகிறதோ,அவரே மகிழ்வாய் இருக்கமுடியும்.
எவரால் ஆழ்ந்து உறக்கங் கொள்ள இயலுமோ,அவர் சிரித்திருக்க இயலுமாகும்!"


தொடரும்....

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.04.11

No comments:

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...