Tuesday, December 29, 2009

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்.

இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன்.

தேசம் நெட்தான் வசதியானால்,அங்கே மேலும் தொடர்வோம்.

ஸ்ரீரங்கன்
29.12.09

http://thesamnet.co.uk/?p=18429


சேதுரூபன் on December 29, 2009 12:23 pm

ப.வி.சிறீரங்கன்
ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு?

சேதுவிடம் ஒரு இரட்டை முகமும் இல்லை. ஒரு செய்தியாளன் சட்டபடி அனைத்து தரப்புடனும் தொடர்பில் இருக்கவேண்டும் அவனே பூரணமான செய்தியாளன். தங்கள் வாதம் மாட்டுக்கும் ஆட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆதங்கம் நண்பரே. உங்கள் பாதிப்புக்கு சட்டத்தை நாடலாம் அல்லது உளவியல் மருத்துவரை நாடலாம் அதுக்கு சேதுவிடம் பரிகாரம் இல்லை. சேது தங்கள் தாக்கத்தை செயதியாக மட்டும் வெளிவிட கூடியவன் அதுவே அவன் தொழில். சேது பாசிசக்கோட்டையில் உறுப்பினர் இல்லை என்றுதானே உரத்துக் கூறுகிறேன். சேது புலி என்றால் அவருடைய தகட்டு இலக்கம் என்ன? கண்டு அறிந்து சட்டத்தை நாடவேண்டிதுதானே? நீங்கள் புலியால் பாதிக்கபட்டால் சேதுவிடம் ஏன் சீறிப்பாய வேண்டும்? புலிகளை வக்காளத்து வாங்கியது சேது மட்டுமா? 500 இணையத்தளங்கள் 50 ஆயிரம் உலக ஊடகங்கள் 50 இலங்கை ஊடகங்கள் ஆகவே இவை அனைத்தும் பாசிசத்திற்கு பொறுப்பானவர்களா? அப்ப புலி தலைவரின் பேட்டியை ஒலிபரப்பிய உலகின் 1 இலட்சம் ஊடகமும் பொறுப்பாளிகளா? எட்டபர்.கொம் நானா நடாத்தினேன்? நிதர்சனம்.கொம் எனது இணையமா? நான் எவரிடம் இருந்தும் பாதிக்கவில்லை. நான் எழுதிய கட்டுரையில் சேந்து குடித்து என்றோ சேந்து படுத்து என்றோ எதுவும் எழுதப்படவில்லையே? அது நடந்திருந்தாலும் அதில் என்ன தவறு? அது எனது தனி மனித உரிமை இல்லையா? குடிப்பது தவறா? புலிகளை காட்டி கொடுப்பது எனது தொழில் இல்லையே? உமக்கு சட்ட உரிமை இல்லை என்று ஆர் சொன்னது? உமது சட்ட உரிமையை நான்தான் தட்டி பறிச்சனா? புலிகளால் நீங்கள் வெருட்டபட்டால் அதற்கு நானா பொறுப்பு? நண்பரே எனது தொடர்புகள் பரந்து விரிந்தவை. அவை இங்கு தேவை அற்றவை.



P.V.Sri Rangan on December 29, 2009 1:25 pm Your comment is awaiting moderation.


சேது,நீங்கள் பத்திரிகையாளன் என்பதைப் பயன்படுத்திவிடுவீர்களென நான் எண்ணியது சரி.அப்போது,நாங்கள் எல்லாம் உங்களது பாசையில் ஆடு மாடு வித்தியாசத்தில் கற்றுக் குட்டிகளா?

நீங்கள் ஊடகத்துறைக்கு வருவதற்குமுன் நானும் எழுத்தாளனாக-கட்டுரையாளனாக-பத்திரிகையாளனாகத்தாம் இருக்கிறேன்.இதுள் உங்களைமட்டும் இனம் காட்ட நீங்கள் குறித்த பத்திரிகையாளன் எனும் பதம் இப்போதைய”அரச-புலி”உறவுகள் குறித்துச் சொல்வதற்குப் பொருத்தமாக இருக்கும்.ஆனால்,வரலாற்றைத் திரும்பிப்பார்பவர்களுக்கு மிகத் தெளிவாகப் புலிகள் பக்கங்கள் தெரியும்.அதாவது, உங்களைப் போன்று பலருடன்-அரசு-அமைச்சகர்கள்,வெளியுலகமெனத் தொடர்பு வைத்த எத்தனை ஊடகவியலாளர்களைப் புலிகள் துரோகியாகக் கண்டு பொட்டுவைத்தார்கள் என்பது.ஒன்றா இரண்டா?


இப்போது,உங்கள் தரப்பு நியாயத்துக்கு இது பொருத்தமாகக் கையாளுகின்ற லொஜிக் ஏன் மற்றவர்கள் தரப்பில் பொருத்தப்பாடில்லை?

புலிகள் உங்களையும் பொட்டு வைக்கவில்லையெனக் கருதுவதாக இதைக் குறுக்காது,நமது சமுதாயத்தில் புலிகளது பாசிசப் பக்கங்களையும்,அவர்களுக்காக வக்காலத்துவேண்டிய ஊடகவியலாளர்களையும் நாம் இனங்கண்டு,அவர்களது இரட்டை வேடத்தைப் பொதுத் தளத்தில் அம்பலப்படுத்துவது ஜனநாயகப் பண்பு.உங்களது பாணியில் பத்திரிகையாளன் என்பது செய்திகள் தொகுக்கும் வேலைமட்டுமல்ல.அது,விரிந்த தளத்தில் எல்லாவகை எழுத்துக்களோடு சமுதாயத்தின் மீதான பிரச்சனைகளை முன் வைப்பவர்களுக்கும் பொருந்தும்.உங்களது பத்திரிகா தர்மத்தின்படி சமூக விரோதப் போராட்டத்தை எங்கே-எப்படி மக்கள் முன் வைத்தீர்கள்?புலிகள் குறித்து உங்கள் மதிபீடென்ன?பத்திரிகையாளன் அனைவருடனும் தொடர்பு வைப்பதுக்கும் தனிமனிதர் வைப்பதற்குமான வித்தியாசத்தைக்”காட்டிக்கொடுப்பு-செய்தி சேகரித்தல்”என்றோ அர்த்தப்படுத்தப்படும்?


P.V.Sri Rangan on December 29, 2009 2:00 pm Your comment is awaiting moderation.


சேதுவுக்கு இன்னுமொன்றையும் கூறிவிடலாம்.இப்போது நீங்கள் பத்திரிகையாளன் என்பவன் பலமட்டத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்பதும்,அவர்கள் அப்பொழுதுதாம் முழுமையான பத்திரிகையாளர் என்பதும் சரியானால்,இது இந்துப் பத்திரிகை இராமுக்கும் பொருந்திவிடுந்தானே?

நீங்கள் ஆம் என்பீர்கள் இப்போது.

ஏனென்றால், உங்களுக்கான ஒரே துரும்பு இது.ஆனால்,இத்தகைய சந்தர்ப்ப அரசியலை விட்டு,ஒரு பத்திரிகையாளன் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதும்,அதிகாரத்தை கேள்வி கேட்பதும் அவசியமானது.

"புலிகள்தானே இந்து இராமைத் துரோகி என்றனர்.நான் இல்லையே" என்றும் உங்களால் சொல்ல முடியும்.இப்போது, நீங்கள் ஒரு பத்திரிகையாளன்.சுந்தரின் வானொலியில் குமாரதுரை குறித்து நீங்கள் கட்டமைத்த கருத்துக்களம், பத்திரிகைக் காரருக்கு உள்ள தார்மீகக் கடமையில்தாம் நிகழ்ந்ததா?

எனக்கு, மக்களுக்குத் துரோகமிழைத்த புலியுஞ்சரி;குமாரதுரையுஞ்சரி;இராமும்சரி;நீங்களும்சரி மக்களை ஏமாற்ற முனையும்போது அனைவருமே சமூக விரோதிகள்தாம்.மக்களைப் போலித்தனமாக எவர் ஏமாற்றிப் பாசிசத்துக்கு-அதிகாரத்துக்கு முண்டுகொடுக்கின்றாரோ(அதுள் நான் உட்பட)அவர்கள் பரந்துபட்ட மக்களதும்-ஜனநாயகத்தினதும் எதிரிகளே.

அவ்வளவுதாம்.

நீங்கள் உங்களை நியாயவாதியாகக்காட்டும் உரிமையை நான் மறுக்கவில்லை.அது அனைவருக்கும் பொதுவானதென்பதே எனது வாதம்.

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...