Wednesday, August 30, 2006

அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி...

அரசியல் சகுனி:ஆனந்தசங்கரி-ரீ.பீ.சீ.வானொலி...

(சிறு இடைமறிப்பு.)

இன்றைய இலங்கை- புலிகள் யுத்தம் குறித்து நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.யுத்தங்கள் எப்போதும் மக்களைக் காவு கொள்வதுமட்டுமல்ல,மக்களின் அடிப்படை வசதிகளைக் கொண்ட குடிசார் கட்டமைப்புகளைச் சிதறடிப்பதாகும்.அத்தகைய வன் கொடுமை அரச பயங்கர வாதத்தை கடந்த சில கிழமைகளாக இஸ்ரேலியச் சியோனிச அரசு லெபனான் குடிமக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டதை நாம் அறிவோம்.இது குறித்துச் சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பே அறிக்கைவிட்டுக் கண்டித்தது.

*மக்கள் வாழ்விடங்களை

*நுகர்வு அங்காடிகளை

*பாடசாலைகளை


*வைத்தியசாலைகளை


*மருந்தகங்களை

*பாலங்களை

*போக்குவரத்து வீதிகளை


*நெடுஞ்சாலைகளை


*நீர்த்தேக்கங்களை


*குடிநீர் விநியோக் கட்டமைவுகளை


இப்படிப் பற்பல குடிசார் அடிப்படைக் கட்டுமானங்களை இஸ்ரேலிய அரசு லெபனானில் குண்டுபோட்டழித்தது.


இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதியில் இலங்கையரசானது- வெளிநாடுகளின் வழிகாட்டலில்- இஸ்ரேலை உதாரணமாக்கித் தமிழ்பேசும் மக்களின் குடியிருப்புகள்மீது குண்டெறிந்து, அந்த மக்களை அகதிகளாக்கி வருவதை நாம் ஊடகங்களுடாகவும்,தொலைபேசிய+டாகவும் அறிகிறோம்.இத்தகைய மனிதவிரோதப் படுகொலைகளை இலங்கையரசு "புலிகளின் பெயரால்" விய+கம் அமைத்துச் செய்து வருகிறது.


இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரைய+டாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.


இந்த விய+கத்தின் வெளிப்பாடாக "அரசியல் அலி,பொறுக்கி,பச்சைக் கள்ளன்,அரசியல் விபச்சாரன்" ஆனந்த சங்கரியை உசார் படுத்தி,இஞ்சியுண்ட குரங்காய்ச் செயற்பட வைக்கிறது.இந்த "முதிர் அரசியல் விபச்சாரகன்" தனது பதவி இலாபத்துக்காக அப்பாவித் தமிழ்பேசும் மக்களை இந்திய அரசுக்குக்கும்,அந்நிய அரசுகளுக்கும் காட்டிக்கொடுத்துப் "புலிகளின் பாணியிலேயே" நமது சுயநிர்ணயவுரிமையைக் காயடிக்கிறான்.

மக்கள் இதுவரையான யுத்தால் இலட்சத்துக்கு மேல் கொல்லப்பட்டுவிட்டார்கள்.


இன்றுவரையும் இலங்கையரசும்,அந்நிய அரசுகளும்,புலிகளும்,எலிகளுமாக மக்களைக் கொன்று குவிப்பதில் முனைப்பாக யுத்தம் செய்யும் தமிழ் நிலப்பரப்புகளில் குருதியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.


இவன் ஆனந்த சங்கரி பத்தாதற்கு...

எமது மக்களுக்கு-அதுவும் புலம் பெயரும் மக்களுக்கு அரசியல் அரிவரிப்பாடம் புகட்ட முனைவதும்,அதை ஜெயதேவன் என்ற திருட்டு முதலாளி-கோயில் கொள்ளைக்காரன் வழிமொழிந்து, எமது மக்களுக்காகக் கண்ணீர் வடிப்பதாக நாடகம்போட,அதையும் கமுக்கமாக ஆமோதிக்கும் மார்க்சியமே தெரியாத மார்க்சியர் திரு.விஸ்வலிங்கம் சிவலிங்கம் ரீ.பீ.சீ-இந்திய,இலங்கை கூட்டுச்சதிக்குப் பலிபோவதும்,தமிழ் பேசும் மக்களை இன்னும் அடிமைகளாக்கிப் பாரிய விலங்கை அவர்களுக்கு மாட்டித் தீருவோமெனச் செயற்படுவதும் இன்று வழமையாகி வருகிறது.


இன்றைய(30.08.06) ரீ.பீ.சீ.வானொலியின் உரையாடலானது இந்தியாவின் செல்லப்பிராணிகளாக இந்தப் பாவிகளை வெளிப்படுத்துகிறது.

"புலிகளைத் தோற்கடித்தவுடன் சமஷ்டிக்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கினால் அவர்கள் அதை ஏற்கமாட்டார்களென நான் ஜனாதிபதியிடம் கூறினேன்"என்கிறான் ஆனந்தசங்கிரி.

இவன் என்ன சொல்கிறான்?


மகிந்த எந்தப் பிரதேசத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்?

செவ்வாய்க்கிரகத்திலிருந்தா?

தமிழ் பேசும் மக்களுக்கு "இதை" வழங்கினால்தாம் ஏற்பார்கள் என்று ஆனந்தசங்கரித் திருடன் கூறும்போதுதாம் மகிந்த புரிந்து கொள்வாரா?


தமிழருக்கு உள்ள பிரச்சனை குறித்து எந்த அரசியல் அறிவுமற்றா மகிந்த அரசியலுக்கு வந்தவர்?


எட ஆனந்த சங்கரி!

உனது பித்தலாட்டமானது இன்னும்பலபடி உச்சிக்குச் சென்று "இந்தியவோடு ஒத்து,அவர்களின் விருப்பைத்தாம் நாம் ஏற்கவேண்டும்-அவர்களது மாநிலங்களுக்குள்ள உரிமையைவிடக் கூடிய எந்த உரிமையையும் இந்தியா தர விடாது-அப்படிக் கூடிய அதிகாரத்தை இருபது கட்டை தூரத்திலுள்ள தமிழர்கள் பெற்றால் 50 இலட்சம் தமிழர்களும்(தமிழ் நாட்டில் 50 இலட்சம் தமிழர்கள்தாம் வாழ்வதென்று புலம்பும் ஆனந்த சங்கரியின் அறிவோ அறிவு!ஐந்தரைக்கோடியில் 550 இலட்சம் மக்கள் என்று யாராவது அரிவரிப்பாடம் நடாத்தும் அளவுக்குப் பதவிப் பித்துப்பிடித்து,அறிவு மங்கிக் கிடக்கிறது ஆனந்த சங்கரிக்கு)பின் கூடிய அதிகாரத்தைக் கேட்பார்கள்.தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா.வேறுபல மாநிலங்களும் பின் உரிமைகேட்டுப் போராடும்.இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் இல்லை"...


இப்படித் தனது இந்தியக் கைக்கூலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டு,மக்களை மடையர்களாக்கும் இந்தத் திருடர்கள் எப்போது தமிழ் பேசும் மக்களின் நலனிலிருந்து இலங்கை இனப் பிரச்சனையைப் பேசப் போகிறார்கள்?.


ஆனந்த சங்கரியோ வ+ப்பெற்றால் இராமச்சந்திரனோடிணைந்து அப்பாவி அகதித் தமிழர்களை ஓட்டச் சுரண்டியவன்.


இவன் எங்கே மக்களின் நலனைப்பற்றிச் சிந்திப்பான்?

தனது அத்தாட்சிக்கடித்துக்கு 10.000. இலங்கை ரூபாயையும்,ஆட்கடத்தி இலட்சத்தையும் பெற்றவன் இவன்.


இராமச்சந்திரன் மக்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தும்,ஆரம்பத்தில் புலிகளை ஏசித்திரிந்து,பின்பு புலிகளுக்கு நிதி வழங்கித் தனது உறவைப் பகைக்காது,இன்று கொழும்பில் மாட மாளிகையோடு,பிரயாண முகவர்த் தொழில் பண்ணுவதும் இந்த ஆனந்த சங்கரியின் கூட்டுக் கொள்ளையோடுதாம்.

இதற்குப் போதிய ஆதாரங்களை நாம் வைத்திருக்கிறோம்.


இந்த மனிதர்கள்தாம் இந்தியாவுக்கு விளக்குப்பிடித்து அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு நியாயம் வழங்கி வருகிறார்கள்.
இவர்கள்தாம் ஜனநாயகத் தலைவர்களாம்! கேட்கவே சகிக்க முடியவில்லை.புலிகளுக்கும் இந்தத் திருடர்களுக்கும் எந்தத் தளத்தில் வித்தியாசமுண்டு?

காலம் இதைக் காட்டுவதற்கு ஏதாவது வித்தியாசமுண்டா?

கிடையாது!

அப்பாவிகளாக மக்களென்றும் இருக்க முடியாது.

இந்த இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்து இத்தகைய அரசியல் மாபியாக்களால் ஏமாறும் நிலைக்குப் புலிகளின் அடி முட்டாள்த்தனமான யுத்த விய+கமே காரணமாகிவருகிறது.

தொடர்ந்தும் மக்களைப் பலிக்கடாவாக்கும் பாரிய யுத்தம் வெறும் அச்சத்தையும்,அழிவையும் நிரந்தரமாக்கிக்கொள்ளும்போது அரசியல் வெறுமை இருந்துகொண்டேயிருக்கும்.இந்த வெறுமைக்குள் சதிராடும் ஆனந்த சங்கரி வகையறாக்கள் இப்படிப் பல துரோகத்தை நமது மக்களுக்குச் செய்ய முனைப்புடன் திரிவது இன்னும் தொடரத்தாம் போகிறது.

எனினும் மக்களுக்கு சுய எழிச்சிகொள்ள முடியாத சூழலில் இவர்களைத் தட்டிக்கேட்க முடியாது!
மக்களைப் பேசவிடுவதும்,போராட விடுவதும் காலத்தின் தேவை.இதைப் புலிகள் செய்யும்போது,புலிகளின் கையிலிருக்கும் தமிழர்களின் உரிமைகளை,அது சார்ந்த நியாயப் பாடுகளை எவரும் தோற்கடிக்க முடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்

30.06.2006

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...