Thursday, October 08, 2009

இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.

நோபல் பரிசு இலக்கியத்துக்கு?
 

"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது
ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
ன்று ஜேர்மனியில், "இலக்கியத்துக்கான நோபல் பரிசு" கிடைக்கப்பெற்ற கேர்த்தா முல்லருக்குத்(Herta Müller) தடாலடியான கட்டுரைகள் மற்றும் இலக்கியப் பிரமுகர்களதும்,அரச அதிபர் அங்கேலா மேர்க்கலதும் பாராட்டுக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது-இவை,சிலவேளை விண்ணை எட்டினாலும் எட்டும்.
 
 
அப்படி என்னதாம் இந்தக் கேர்த்தா முல்லர் எழுதித்தள்ளியுள்ளார்?
 
இவரது எழுத்துக்கள் எத்தகைய இலக்கியத் தரமுள்ளதோ இல்லையோ, அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததான செய்தியில், பெரும் பத்திரிகைகள் அவரது கடந்தகால மேற்குலகச் சேவகத்தை நன்றி பகிர்ந்தே பாராட்டுக்களாகக் கட்டுரைகள் எழுதுகின்றன.
 
 
செவ்செஸ்கோவினது(Ceausescu-Regimes) இருமேனியாவில் வாழ்ந்த கேர்த்தாவுக்கு, கம்யூனிசக் கொடுமை சகிக்கவில்லையாம்.செவ்செஸ்கோ கம்யூனிசத்தின்வழி பரப்பப்பட்ட பரப்புரைகளது எதார்த்தம் ஐரோப்பாவின் சதிகளோடு நிரம்பியிருந்த அன்றைய காலத்தில், இத்தகைய கேர்த்தா முல்லர்களே மிகச் சாதுரியமாகக் கடமைகள் செய்திருக்கின்றார்கள்.இதை இன்றைய பத்திரிகைகள் நன்றியோடு பகிர்கின்றன.
 
 

 
 
இவரது நீடருங்கன்("Niederungen" (1984), Erzählungen)எனும் கதைத் தொகுப்புக்குப் பரிசு எட்டியாதானது அத்தொகுப்பு வீழ்ச்சிகள் குறித்த கதையாடலாக இருப்பதால்மட்டுமல்ல என்பது,ஜேர்மனிய முன்னணிப் பத்திரிகை வாயிலாக நாம் கண்டடையமுடியும்.
 
 
கம்யூனிசத்துக்கு எதிரான பரப்புரைகளை செய்ததும்,செவ்செஸ்கோவைக் கம்யூனிச ஆட்சியாளராகப் பரப்புரை செய்ததிலும், கேர்த்தாவுக்குப் பெரும் பங்கிருக்காது போனாலும், அவர் மேற்குலகத்துக்குக் குறிப்பாக ஜேர்மனிக்கு மிக நெருக்கமாக இருமேனியாவை வேவு பார்த்துக் கொடுத்தவர்களுள் ஒருவர் என்பது சரியானதாகும்.
 
 
அன்றைய காலக்கட்டத்தில், அதிகமான கிழக்கைரோப்பியப் போலிச் சோசலிச நாடுகளைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவுக்குப் புலனாய்ந்து கொடுத்த தேசம் ஜேர்மனியாகும்.சமீபத்தில், ஈராக் குறித்தும் புலானாய்ந்து ஜேர்மனிய உளவுத்துறை அமெரிக்காவுக்குத் தகவல்கள் கொடுத்து உதவியது.இத்தகைய உறவுகளுக்கமையப்பெற்ற ஜேர்மனிய அரசின் நிபந்தனைகள்,பரிந்துரைகள் வெறுமனவேயான இலக்கியத்துக்கான தெரிவில் கேர்த்தாவுக்குப் பரிசு கிடைத்ததாகக்கொள்ள வாய்ப்பில்லை.அவரைவிட ஆளுமையான ஜேர்மனியப்படைப்பாளிகளை நான் அறிவேன்.
 
 
இன்று,மாறிவரும் பொருளாதாரச் சூழலானது பெரும் முன்னெடுப்போடு இருமேனிய மண்ணில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறது.மேற்குலகத்துக்கு அத்தேசம் அனைத்துச் சலுகைகளையும் கொடுத்துத் தமது தொழிலாளரை ஒட்டச் சுரண்டுவதுவரை ஒத்துழைக்கின்றது.எனினும்,இருமேனிய மக்கள் குறித்த ஜேர்மனியை ஆளும்,C.D.U.கட்சியின் தலைவர்களில் ஒருவரான ருட்காரது (Rütger) இனவாதக்கருத்து அத்தேசத்து மக்களை மேலும் அந்நியப்படுத்திய சூழலில்,இத்தகைய விருதுகளின்வழி இருமேனியாவின் சார்பு நிலையை-மேற்குலகுக்கு உடந்தையாக இருப்பதென்பதுக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் தேவையோடு இணக்கமுறுகிறது.
 
 
இன்னும் சொல்வதென்றால்,கேர்த்தா முல்லர் கைன்றிக் கையின(Heinrich Heine) போன்ற படைப்பாளிகளின்வழி வந்தவரென்று சையிட் ஒன்லையின்ட் எழுதுகிறது.
 
 

அதற்காகக் கையின(H.Heine) தனது புரிதலில் பிரான்சினது கம்யூனிசக்கட்சியையும்,அதன்போராட்ட முறைகளையும் குறித்து எழுதும்போது,"காலத்துக்கு முந்திய பாட்டாளிய வர்க்கச் சர்வதிகாரம் வெற்றி பெற்றிருந்தால் அது முழுமொத்த மனித இனத்துக்கும் பெரும் கெட்ட காலமாகி இருக்கும்."என லுற்ரேற்றியா(Lutetia) பதிவேட்டில் எழுதுகிறார்.
 
 
தொழிற்சாலைப் புரட்சிகளின் காலக்கட்டத்தில் வாழ்ந்த கையினே பாட்டாளிய வர்க்கத்தின் சிதைவுகண்டு வருந்தும் பாடல்களை எழுதியவர்.அவரை கம்யூனிசத்தின் விரோதியாக்க முனையும் இன்றைய காலம்,கேர்த்தா முல்லரது இன்றைய நிலைக்கு அவரது கருத்தைப் பயன்படுத்துவது மிகப்பெரும் அயோக்கியத்தனம்.
 
 
இத்தகைய அயோக்கியத்தனத்தின்வழியேதாம் இவர்கள் உலகைச் சூறையாடும்போது,கேர்த்தா முல்லர் கடந்த காலத்தில் தமது நோக்கை நிறைவேற்ற இருமேனியாவின் ஆட்சிக்கவிழ்ப்பில் ஒரு துரும்பாகவும் இருந்திருக்கிறார்.அதன் சம்பளம் இப்போது பரிசாக வருவதில் எவராவது மையல்கொண்டு, அவர் இன்னல்படும் மக்களுக்காக் குரல் கொடுத்தவராக எவரும் உணர முடியுமா?
 
 
"கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.
 
 
அந்தளவுக்கு ஏகாதிபத்தியங்களது நலனுக்கு உடந்தையான முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு நோபல் பரிசினது இன்றைய பக்கச் சார்பையும்,அது,போப்பாண்டவர்களது வேலையையே வேறொரு வடிவில் செய்வதாகவும் கொள்ளமுடியும்.
 
 
 
கேர்த்தா முல்லருக்குக் கிடைத்த இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
08.10.2009







No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...