Thursday, January 07, 2010

அதிகாரமும், ஜனநாயகமும்

இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவும்,மீண்டெழும் தேர்தல் கோசங்களும்.
 
 
நாம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.
 
ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-"ஈழப் போராட்டம்" தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.
 
இப் புதிய ஆண்டில் மேலும் அவசரகால நிலையைத் தோற்றுவித்து,அதற்கான சட்டநியாயவாதத்தையும் பாராளுமன்றத்தில் இலங்கையை ஆளும் கட்சியாதிக்கம் பெற்றுள்ளது.தொடர்ந்து அவசரகால நிலையைத் தோற்றுவிக்கும் காரணங்களை மக்களது பொது ஒத்துழைப்பின்றியே இக்கட்சியாதிக்கம் செயற்படுத்தி அதைத் தமது நலன்களின் பாதுகாப்புக்கேற்றவடிவில் தகவமைத்து, ஜனநாயகம்-தேசப் பாதுகாப்பு எனப் பேசவும் முற்படுகின்றன.மிக அழகான போலி நியாயங்களை அவர்களது நிறுவனங்களும் செய்து முடிக்கும்போது, மக்களிடம் எந்தவுரிமையும் இல்லையென்றாகிறது.மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட மக்களாண்மை ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கொண்டிருப்பதிற்கில்லை.அது, நோய்வாய்ப்பட்ட ஆரோக்கியமற்ற சூழலைத் தோற்றுவித்து, எதேச்சதிகாரமிக்க குழுக்களைக் கட்சியாதிக்கஞ்சார்ந்து மக்கள்குழாத்துள் தோற்றுவிக்கிறது.இதன் பலாபலன் இலங்கைச் சமுதாயத்திடம் மேம்போக்கான உள்ளக ஒடுக்குமுறையைக் கேள்விக்கிடமின்றி அச்சத்தின்வழி ஏற்றுக்கொள்ளும் உளவியற்போக்கைத் தோற்றுவிக்கிறது.இதுவே,இலங்கையில் நிலவும் குடுப்பத் தார்ப்பாருக்கு வழி வகை செய்கிறது.சாரம்சத்தில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நிலக்கிளார் அமைப்பு முறைக்கு ஒப்பானவொரு "மாதிரி"ச் சமுதாயமாகப்பட்டுள்ளது.
 
அதிகாரமும், ஜனநாயகமும்:
 
 
எமக்குள் பொதுவான ஜனநாயகம் குறித்தும், மேற்குலகத்தில் நிலவும் ஓரளவு ஜனநாயகத் தன்மை குறித்தும் பரவலாகப் பேசப்படுவதுண்டு.இப்போது, மேற்குலக நிதி மூலதனத்தில் ஐரோப்பியக் கண்டம் தழுவிய கூட்டமைப்பு முறைமை உள்வாங்கப்பட்டிருப்பினும் இங்கே ஜனநாயகம் என்பது மூலதனத்துக்குப் பாதுகாப்பளிக்கும் எல்லையுள் வைத்து அணுகப்படுகிறது.இதைக் குறித்து அன்றைய கிழக்கு ஜேர்மனியின் பத்திரிகையாளரும் இன்றைய முன்னணிச் சிந்தனையாளருமான டானியேல்லா டான்(Daniela Dahn)பின்வருமாறு விசனப்படுகிறார்: "Doch die Parlamente haben Macht an die Regierung abgegeben, die Regierung hat Macht an die EU-Kommission abgegeben, diese hat Macht an die Weltbank und die Welthandelsorganisation abgegeben, alle haben also Macht an die Profitwirtschaft abgegeben. Und der Wähler soll seine Stimme abgeben und sich dabei fühlen wie Hans im Glück. Er guckt in die Luft und fragt sich, welche Wahl er eigent-lich hat, wenn niemand die verborgen herrschende Macht beschränkt, die des Kapitals? "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:28 "முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகச் சட்டவாக்கம் பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை அரசிடம் கையளிக்கின்றது.ஐரோப்பிய அரசுகளோ தத்தமது அதிகாரத்தை "ஐரோப்பிய ஒன்றியக் கமிசனிடம்"கையளிக்கின்றன.அக்கமிசனானது உலக வங்கியிடமும்,உலக வர்த்தகக் கழகத்திடமும் இவ்வதிகாரத்தைத் தாரவார்த்துவிடும்போது,இத்தகைய கழகங்கள் யாவும் அதிகாரத்தை உபரிலாபப் நிதி மூலதனப்பொருளாதாரத்திடம் கையளிக்கின்றன.அத்தோடு, ஓட்டுரிமையாளர்களாகிய மக்கள் தேர்தலில் தமது ஓட்டுக்களை தாம்சார்ந்த கட்சிக்கு அளித்துவிட்டு அதன் வாயிலாகத் தமக்கு விடிவு வந்துவிடுவாதாக உணர்கின்றனர்.இதன் வாயிலாக ஆகயத்தைப் பார்த்து"இதைவிட வேறன்ன தெரிவு எமக்கு உண்டு?"என்ற கேள்விகளோடு ஓட்டளித்துவிடுகின்றனர்,மறைந்திருக்கும் மூலதன வர்க்கதின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு எவருமே முனையாதபோது. என்கின்றார்.
 



(Daniela Dahn_Demokratischer Abbruch Grunderin)
 
டானியேல்லாவின் பார்வைகள்,உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சனையாக இருக்கிறது.இது உலகு தழுவிய வர்த்தகக் கழகங்களது காலில் வீழ்ந்துவிட்ட அரசுகளதும்-கட்சிகளதும் முன் மக்கள் எங்ஙனம் ஏமாற்றி அடிமைகளாக்கப்படுகிறெதன்பதையும் அதைச் சட்டவாகத்துள் நீதியாகவும்-பரிபாலனமாகவும் இட்டுக்கட்டும் பாராளுமன்ற ஜனநாயகம் பொதுத் தளத்தில் பரந்துபட்ட மக்களது எதிரியாக இருக்கிறது.இதன்தன்மையிலான அரச பயங்கரவாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டவாக்கமாகி நியாயப்படுத்தப்படுகிறது.மக்களது உரிமைகளை மெல்ல அளிப்பதற்கு அவர்களது குடிசார் அமைப்பாண்மை முதலில் சிதைக்கப்பட வேண்டும்.இதைக் மிக இலகுவாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் வடிவில் அழித்துவிட்ட இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மக்களது குரல்வளையில் மெல்லத் தனத்து கோரக்கரத்தைப் பதிக்கிறது ஜனாதிபதித் தேர்தலாக.
 
 
மக்களாண்மை நிலைப்படுவதற்கான தெரிவில் டானியேல்லா நான்கு தெரிவுகளை ஜனநாயகத்தின் இருப்புக்கு அவசியமாக முன்மொழிகின்றார்:
 
1): Demokratie bedeutet Volkssouveränität.
 
2): Demokratie bedeutet Machtbeschränkung.
 
3): Demokratie bedeutet Wahrung der Menschenrechte.
 
4):Demokratie bedeutet Rechtsstaatlichkeit.
 
 
1):மக்களது சுயாதீனச் செயற்பாட்டின் அர்த்தம் ஜனநாயகமாகும்.
 
2):ஜனநாயகத்தின் அர்த்தம் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது.
 
3):ஜனநாயகமானது மனிதவுரிமைகளைப் பாதுகாப்பதென்று அர்த்தமாவது.
 
4):நீதியின்-சட்டத்தின் ஆட்சியாக இருப்பது ஜனநாயகத்தின் அர்த்திலானது.
 
இலங்கையில்,ஜனநாயகம்,மனிதவுரிமையென அமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி(கேர்னல் கருணா) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகள் தாம்சார்ந்த அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள் சார்பாக மொழிபெயர்கின்றனர்.இவர்களது பிரிதிநிதிகள் இவர்களைவிடப் பன்மடங்கு ஜனநாயகக் கோரிக்கைகளை மக்கள்முன் சொல்லுகின்றனர்
 
எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், இதுவரை மக்கள் விரோதமான ஆட்சியை நிலைப்படுத்தியவர்கள்-இயக்கியவர்கள் இவர்கள்தானே?பின்பு, இவர்கள் எதைக் குறித்துப் பேசுகின்றனர்?ஜனநாயகமென்பதை இவர்கள் தமக்கிசைவாக்கிச் சாகடித்போது, அதற்கு மீளவுயிர்கொடுப்பதாகச் சொல்லும்போது-இது- இவர்களால் முடியுமா?
 
இன்றைய ஐரோப்பியக் கண்டத்துத் தேசங்களது தலைவிதியே உலக வங்கி-வர்த்தகக் கழகங்களால் தீர்மானிக்கப்படும்போது,தென்னாசியப் பிராந்தியத்தில் அரைகுறைவிருத்தியுடைய தேசங்கள்,உலக வங்கியிடம்-உலக ஆதிக்கச் சக்திகளிடம்"பிச்சைப் பாத்திரம்"ஏந்திக்கொண்டும் ஜனநாயகம்-அபிவிருத்தி பேசுகின்றன.குறிப்பாக, ஊழலில் மலிந்த இலங்கைக்கு மக்கள்சார் ஜனநாயகத்தைப் பேணும் பொருளாதாரப்பலம் இருக்க முடியுமா?இலங்கையின் சிறுபான்மை இனங்களைக் கருவறுத்துக்கொண்டேதாம் தமது முரண்பாடுகளைத் திட்டமிட்டுத் திசைதிருப்பிப் பாராளுமன்ற அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஆளும் வர்க்கம், இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு அண்மையில் இருக்குமென்பது ஏமாற்றுவித்தையாகும்.
 
சமூகச் சிதைவும்,மனித சீவியத்தின் சீர் குலைவும், இலங்கைச் சமுதாயத்துள் நிலைபெற்றுவிட்ட அராஜகக் கட்சி ஆதிகத்துள் மேலும் நெருக்குதலுக்குள்ளாகும்போது ஜனநாயக விழுமியத்தைப் பேணும் எந்தத் தீர்மானகரமான அரசியல்போக்கும் அத்தேசத்துள் முகிழ்ப்பதற்கான சுயசார்புப் பொருளாதாரக் கட்டுமானமும் அதனிடமில்லை!கட்சிகளும்,அதன் தலைவர்களும்,மந்திரிகளும் தேசத்தைச் சொல்லிப் பெற்றகடன்களை உண்டு ஏப்பமிடும்போது தேசத்துள் வாழும் எந்தத் தரப்பு மக்களும் இயலுமானவரை சிறந்த தேச பரிபாலன முறைமையைக்குறித்தும் சிந்திக்க முடியாது.இத்தேசமானது பாராளுமன்ற ஜனநாயகப் பண்பை கட்சிகளது சொல்லாடற் களமாகப் பாவித்துத் தமது எஜமானர்களதும், தமதும் வளங்களைச் சட்ட பூர்வமாகக் கொள்ளையிடுவதில் ஆட்சியை-அதிகாரத்தைக் கொண்டியங்கமுனைகிறார்கள்.இவர்கள் பேசும் எந்த மக்கள்சார் கூச்சல்களும் உண்மையில் மக்களது நியாயமான கோரிக்கைகளையும்,அவர்களது அவலத்தையும்,இராணவச் சர்வதிகாரத்தையும் நிவர்த்தி செய்யப்போவதில்லை!மக்களினங்கள் மதத்தாலும்,மொழியாலும் இன்னபிற அடையாளங்களாலும் பிளவுப்படுத்தப்படும்போது அந்தக் குழு-இனவாதக் கூட்டுள் குறிப்பட்ட இயக்க-கட்சியாதிக்கம் வலுவாகத் தன்னை குழுசார் மதிப்பீடுகளுக்குள் நிலைப்படுத்திக்கொள்ளும்போது, அக் குழாத்துள் நிலவும் அனைத்துச் சமூக அசைவாடல்களையும் அதுவே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது.இதனால் இனம்-மதம்சார் மக்கள் குழாமுள் தேவையுறும் அனைத்துப் பொருளாதார வாழ்வும்-செயலும் ஆதிக்கம்பெற்ற கட்சியின்-இயக்கத்தின் தலைவர்கள்-உறுப்பினர்களது கைகளுக்கு மாற்றப்படுகிறது.அவர்களே குறிப்பிட்ட தேச-அரச சூழலில் அதிகார-ஆளும் வர்க்கமாக மாறுகிறார்கள்.இவர்கள் பரந்துபட்ட ஆளும் வர்க்கக் குணாம்சத்துக்குள் வராது போனாலும், ஒரு குழுவாக-அதிகாரத்துவமுடைய,சட்டபடியான ஆதிக்க சக்திகளாக உருவாகிறார்கள்.இதுவே,இன்றைய மூன்றாமுலக அரசியல் மற்றும்,ஜனநாயகச் சூழலின் எதார்த்தமாக இருக்கிறது.இதைக் கடந்து செல்லத்தக்க அமைப்பாண்மை-குடிசார் நிறுவனங்கள் எமது மக்களுக்கும் இலங்கையின் அனைத்துத் தரப்புக்கும் அவசியமாகிறது.இதைப் பரந்துபட்ட மக்களுக்குள் இருக்கும் தொழிற் சங்கங்கள்,சனசமூக நிலையங்கள்,உள்ளுர் ஆட்சி மன்றங்கள்,பாடசாலை-கல்லூரிகளே முன்னின்று போராடி மக்கள் ஆண்மையை முன்நிறுத்தும் குடிசார் அமைப்புகளை நிறுவிக்கொண்டு, ஜனநாயகத்தின் அதிகளவிலான மேன்மையைக் குறித்து இயங்க முடியும்.
 
இலங்கையினது இன்றைய அரசியல் சூழலின்பொருட்டு இத்தகைய குரல்களும் அதுசார்ந்த செயற்பாடும் கட்சி-இயக்க ஆதிக்கந்தாண்டி எழுந்தாகவேண்டும்.மக்களது எதிர்ப்புப் போராட்டத்தின் இருப்பு இத்தகைய முயற்சியுள் பெரிதும் தங்கியுள்ளது.எதிர்ப்போராட்டங்களைத் தமக்கு இசைவாக்க முனையும் அதிகார வர்க்கம் பலமான வழிகளில் அதைச் சிதைக்க முனைவதை நாம் காணுகிறோம்.அவற்றில் ஒன்றுதாம் பல்வேறுபட்ட பிளவுகளை வலியுறுத்தி அதனூடாகத் தமது வசதிகேற்ற அமைப்புகளை உருவாக்குதல்.இவை,தாம்சார்ந்த மக்களைச் சொல்லியே அவர்களை அடிமையாக்கும் அரசியலோடு தொடர்ப்பு கொள்கின்றன.இதுள் டக்ளசோ அன்றிக் கருணாவோ இல்லை தலித்துக் கட்சிகளோ விதிவிலக்கல்ல.
 
ஜனநாயகத்தின் பெயரால் தேர்தல்:
 
இன்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு எமக்கு ஆச்சரியமானதில்லை.
 
சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆதிக்கத்தை இலங்கையில் நிலைப்படுத்துவதென்பது என்றே அர்த்தமாவது.இதைக் குறுக்கி அவர்களது முட்டாள்த்தனமென மீராபாராதி போன்றவர்கள் பின்னூட்டமாகப் பிதற்றலாம்.ஆனால்,தமிழ்த் தேசியவாதிகளது வர்க்க நலன் என்பது எப்பவும் மேற்குலகஞ்சார்ந்த நலன்களோடு பின்னிப் பிணைந்ததுமட்டுமல்ல,அவர்கள் மேற்குலக-அமெரிக்க உளவுப்படைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் என்பது உண்மையானது.இதற்கு நாம் கடந்த காலத்துத் தமிழ்த் தலைமைகளையும்,இவர்களது அரசியல் நடாத்தையையும் புரிந்துகொள்வது.அவசியம்.இதற்கான சிறு உதாரணத்தைச் சொல்லிவிடுவது உசிதம்.
 
தமிழர்களின் தேசியத்தைச் சொல்லித் தமது மேட்டுக்குடி நலனைப் பேணியவர்களுள் முக்கியமானவர்கள்,இராமநாதன்-அருணாச்சலம் சகோதரர்கள் என்பது நாம் அறிந்ததே.இவர்களுக்கு"சேர்"பட்டத்தை நன்றிக் கடனாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கியதும் அறிவோம்.இவர்களது வழியில் வந்தவர்கள் மிகக் கறாரான மேற்குலகத்தின் நலன்களையும், ஒடுக்குமுறை வர்க்கத்தோடான நட்புப்பாராட்டியும் எழுந்தவர்கள்தாம் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,செல்வநாயகம் போன்றோர்.இவர்கள் அன்று முன்வைத்த குறுந்தேசியக் கோரிக்கையானது"தமிழர்களுக்குப் பரம வைரிகள் சிங்களவர்களே"என்பதாகும்.இவர்களே,"எந்தச் சிங்களவர்களையும் நம்பக்கூடாது" என அன்று அரசியல் பேசினார்கள்.இதன் வழி மக்களையும் நம்பச் சொன்னார்கள்.பின்பு, இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலத்தி-அல்லது நழுவிக்கொண்ட இவர்கள், 1949 ஆம் ஆண்டளவில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினது அரசில் இணைந்து மந்திரி சபைகளையும் பெற்றுக்கொண்டனர்.
 
ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரியாக இருந்தபோதுதாம் மலையகத் தமிழ்மக்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.அன்று பத்து இலட்சம் மக்கள் நாடற்வர்களாக்கப்பட்டபோது இதே தமிழ்த் தலைமைகள்தாம் மேற்குலகச் சார்புச் சிங்கள அரசைக் காத்து வந்தனர்(இதுள் செல்வநாயகம் முரண்பட்டுக்கொண்டதும் உண்டு).இவ்வண்ணமேதாம் இத் தமிழ்த் தலைமைகளைப் புரிந்தாகவேண்டும்.பின்பு,இதுவோ தொடர்கதையாகியபோது 1965 ஆம் ஆண்டும் இதே வலதுசாரியத் தமிழ்த் தலைமைகள்தாம் ஐயக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டராசாங்கத்தை அமைத்தனர்.அதுள்,மு.திருச்செல்வம் மந்தரிரயாகவும்,தமிழ்க் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் சபாநாயகராகவும் பதவி வகித்தனர்.
 
இங்கு,ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, தமிழ்த் தலைமைகளது மிகக் கெடுதியான பக்கங்கள்தாம் நமது விழிகள்முன் வருகிறது.இவர்கள் செய்தது அனைத்தும் துரோகம்-காட்டிக்கொடுப்பு.இலங்கைக்கும்,இலங்கை மக்களுக்கும்-ஏன்,முழுமொத்த மக்களுக்கும்- எதிரிகள் தமிழ்த் தலைமையும்,ஐக்கிய தேசியக் கட்சியுமே.இதைப் புரிவதற்கு நாம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை விளங்க முற்பட வேண்டும்.
 
அதாவது, 1958 ஆம் ஆண்டு அரசியலைச் சொல்லியாகவேண்டும்.
 
இலங்கையினது தேசிய முதலாளியத்தின்(வளர்கின்ற நிலையுள்)அரசியல் தலைவரும்,ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முன்றாவது உலக அணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி: பண்டாரநாயக்காவோடு மேற்குலக விசுவாசியும்,அமெரிக்க உளவுப்படையின் கூலிக்காரனுமான செல்வநாயகம் ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்தார்.அதை,பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பது சொல்லக்கடவது.
 
இது,தமிழ்பேசும் மக்களது சுயாட்சி சம்பந்தமாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம்.இவ்வொப்பந்தம் இன்றைய சர்ச்சைகளைவிட மிக முன்னேறியது.இதை ஏற்றுச் செயற்படுத்தியிருந்தால் இன்றைய அழிவுகள் எமக்கு ஏற்பட்டிருக்காது.ஆனால், இப்வொப்பந்தத்தால் நஷ்டம் அடையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே செல்நாயகம்,மற்றும் தமது அடிவருடிகளான ஐ.க்கிய தேசியக் கட்சி மூலம் இவ்வொப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்த அரசியலுக்கு முழுவுடந்தையாக இருந்தது அமிர்தலிங்கம்-செல்வநாயகம்,மற்றும் ஜே.ஆர்.கூட்டே.இவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அமெரிக்க உளவுக்காரர்கள்.களனியில் இருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்,புத்தபிக்குகளும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்று பண்டாவுக்கு நெருக்கடி கொடுத்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றியதும் இன்றும் அழியாது வரலாறு.பண்டாவுக்குப் பொட்டுவைத்ததும் இவர்களது அமெரிக்க உளவுச் சேவையே.
 
அன்று,பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியையும்,ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையையும் தூண்டியபடி, தமது முகவர்களான தமிழ்த் தலைமையின் மூலமும் சிங்களவர்களுக்கும்-தமிழர்களுக்கும் எதிரான இனவெறியைத் தூண்டிவிட்ட அதே அமெரிக்கா இப்போது பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மகிந்தாவைக் கடாசுவதற்கு முனைகிறது.
 
இங்கே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன் சேகாவை ஆதிரிப்பது அமெரிக்க நலனின்பாற்பட்டது.அதே கடந்தகாலத்து அரசியல் மீளவும் அழிவுகளின் நடுவேயும் பலாமாக நம்மை நெருங்குகிறது.அன்று பண்டா தமிழ் மக்களுக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் இன்று மகிந்தா இல்லை.சுயாட்சி ரீதியாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம் அன்று.இன்றோ புலிகளை அழித்து முழுமொத்த மக்களையும் இலங்கையர்களெனும் வாதம் மகிந்தாவிடம்.இது,சமக கால ஆசிய மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதுகுறித்து ஏலவே ஒரு கட்டுரையில் பேசியுள்ளன்.அன்று(1958),யாழ்ப்பாணத்தில் சிங்களச் சிறீ எழுத்துக்களைத் தார்பூசி அழித்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றிய அமிர்தலிங்கத்தின் வாரீசுகள் இன்று பொன்சேகாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி தமிழ் பேசும் மக்களது தலையில் மண்ணை அள்ளிப் போடுகின்றனர்.
 
இன்றைய இந்தச் சீரழிவு தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை அவசியமானது.அவர்கள், தமது வர்க்க நிலையை நன்றாகவுணர்ந்தவர்கள்.அனைத்தையும் மக்களதும்,தேசியத்தினதும் பெயரால் இவர்கள் ஆற்றும்போது,அங்கே மக்களது நலன்கள் கிஞ்சித்தும் கிடையாது.கடந்தகாலத்துத் தலைமையுஞ்சரி அவர்களது வாரீசுகளது தலைமையுஞ்சரி இல்லைப் புதிய தமிழ் அமைப்புகள்-கட்சிகளும்சரி எப்பவும் பரந்துபட்ட முழு இலங்கை மக்களுக்கு எதிரிகளாகவே இருக்கின்றனர்.
 
இந்த நிலையுள் வன்னியில் செய்யப்பட்ட இனவழிப்புக்கு எதிரான கோசங்களோடு தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக அரசியல் போராட்டஞ் செய்தே ஆகவேண்டும்.இது,பரந்துபட்ட ஜனநாயகப் பண்புக்குமையவே நடாத்தப்படவும் உரிமைகள் இருக்கிறது.தம்மிடம் ஓட்டுக் கேட்பவர்களிடம் தமது வாழ்வாதாரத்தைக்கட்டியமைப்பதற்கும்,தமது அடிமை வாழ்வை அகற்றித் தாமும் சிங்களும்பேசும் மக்களுக்கிருக்கும் அனைத்து உரிமையையும் இலங்கையில் பெறுவதற்கான முன் நிபந்தனைக் கோரிக்கைகளையும் முன்மொழிய வேண்டும்.இதை ஏற்காதவர்களுக்கு ஓட்டுப் போடுவதைவிட இல்லாதாக்குவதே மேல்.ஆனால்,வர்க்க அரசியலின் போக்கில் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் ஆளும் வர்க்கமானது இத்தகைய கட்சிகளதும்,குழுக்களதும் அரசியல் கோரிக்கைகளை மெல்லக் கண்டுகொள்ளாதிருக்கின்றன.இதன் வாயிலாகவே இவர்கள் மக்களை அண்மிக்கும்போது மக்களுக்காவே குரல் கொடுப்பதாக நாட்டிலுள்ள உண்மையான பிரச்சனைகளைப் பேசி மக்களை அண்மிக்கின்றனர்.இதன் உச்சபட்சமாக இன்று மகிந்தாவின் அரசில்-தேர்தல் கூத்துக்கள் எம்.ஜீ.ஆர் பாணி அரசியலை விஞ்சிவிட்டது.அவ்வண்ணமே,பொன்சேகா தமிழ் மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்பதும்.இதற்காக எழுத்து மூலம் அறிக்கை வழங்குவதும் சாத்தியமாகிறது.
 
இத்தகைய அரசியல்-ஜனநாயக நடாத்தையில் மகிந்தா இங்ஙனம் உரைக்கின்றார்:
 
"எதாத் மகிந்தா
அதத் மகிந்தா,
கெற்றத் மகிந்தா
!"
 
இது,"நேற்று,இன்று,நாளை",எனப் படங்காட்டிய எம்.ஜீ.ஆரை. ஞாபகப்படுத்துகிறதா?"
 
நேற்றும் மகிந்தா,இன்றும் மகிந்தா,நாளையும் மகிந்தா"வரட்டும்.ஆனால்,இலங்கை அரசினது பயங்கரவாதத்துக்குப் பலியாகும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான அரசியலும்,அவர்களது குரலும் பெருந்தேசவுருவாக்கத்துள் பலியாக்க முனைவதுதாம் பிரச்சனை.இதை அனுமதிப்பது ஜனநாயகமா?
 
நாம்,மீளவும் டானியேல்லா டானிடம் செல்வோம்.
 
 
"Wer souverän sein will, muss sachkundig sein. Wis-sen ist Macht. Wer dem angeblich alternativlosen, neoliberalen mainstream etwas entgegen-halten will, braucht Argumente. Doch während der verschuldete Staat, der seine finanzielle Souveränität längst verspielt hat, die Mittel von Schulen und Universitäten kürzt, sind die Massenmedien demokratievergessen der Quote erlegen. In der nach unten offenen Schlicht-heitsskala dominieren Verflachung und Entpolitisierung. In Kriegszeiten auch Tabuisierung und Lüge. Ein hohes Niveau des öffentlichen Diskurses ist aber Grundlage der Demokratie. Sie braucht Bürger. "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:29 "எவரொருவருக்கு முற்றுமுழுதான சதந்திரத்தைக் கொண்டியங்கும் உணர்வு அவசியமோ அவர் அனைத்தையும் அறிந்தவராக-அளந்தவராக இருக்கவேண்டும்.புத்திமான் பலவான்.மாற்றில்லையெனப் பொய்மைக்கொண்டியங்கும் சூழலில் நவலிபரால்களது ஆதிக்கத்தை கொஞ்சம் எதிர்த்து-தூரவிலத்திவைக்க விரும்புகிறாரோ அவர்கட்குத் திறந்த உரையாடல் அவசியமாகிறது.கடன்பட்ட தேசம் தனது தேசத்தின் சுயாண்மையோடு விளையாடுகிறது.இது,தனக்குக் கடனளித்த தனது எஜமானர்களுக்கேற்றபடி அனைத்துச் சமூக மானியத்தையும் வெட்டுகிறது.பாடசாலை பல்கலைக்களகமென அனைத்துக்கும் மானியக் குறைப்பு.ஊடகங்கள் இதுகுறித்தான அளவுகோலைப் புதைத்துவிட்டுக்கொள்கின்றன.இத்தகைய அளவுகோலின்கீழ் தட்டையான அரசியல் நீக்கம்பெறுகிறது.யுத்தகாலத்துள் தடைகளும் பொய்மையும் மக்கள் அரங்குக்கு மேலெழுகிறது.எனினும்,அதீதமட்டத்துக்கான உரையாடல்-விவாதமானது ஜனநாயகத்தின் அடிப்படையான மூலம்."
 
பொதுத்தளத்திலான இன்றைய அரச பயங்கரவாதத்தையும், அதுசார்ந்த நவலிபரல்களது பொருளாதார முன்னெடுப்புகளையும் நாம் பொதுத்தளத்தில் விவாதித்து உரையாடவேண்டியுள்ளது.இதிலிருந்து விலத்துபவர்கள் நடைமுறை அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதற்கு உதவுபவராக மாறுகின்றார்.இன்றைக்கு ஜேர்மனியப் பொறுத்தவரை யுர்க்கன் ஹாபர் மாஸைக்(Jürgen Habermas) கடந்து செயற்பாட்டுத்தளத்தில் மிகவேகச் செயற்படுபவர்கள் சுதந்திர பொருளாதார(Freier Wirschaft-Humane Wirschaft) வாதிகளும்,இடதுசாரிய(Die Linke)வட்டாரமும்தாம்.இதுள், சுதந்திர-நியாயவாதப் பொருளாதாரம் சில்வியோ கேசலின்(Sivio Gesell-Die Natürliche Wirschaft Ordnung) பொருளாதாரக்கொள்கையினால் அற்றாக்கிடம்(Attac_ http://www.attac.de/) தஞ்சம் புகுகிறது.இடதுசாரியவட்டமே திறந்த உரையாடல்களை ஊடகங்களிலும் பொதுத் தளத்திலும் நிகழ்த்துகின்றன.இலங்கைபோன்ற தேசத்துள் குறைந்தபட்சமாகவாவது இத்தகைய இடதுசாரிகள் பொதுத் தளத்தரில் மக்களோடு உரையாடல்களை ஆரம்பித்தாகவேண்டும்.
 
தமிழ்நாட்டில், இதைப் புதிய ஜனநாயகம்-மக்கள் கலை இலக்கிய கழகங்கள் மிக நேர்த்தியாகச் செய்கின்றன.நமது தேசத்துள் இது பெயர்ப்பலகைக் கட்சி மட்டத்தோடு நாலு நபர்களது சிண்டைப்பிடித்து அடிக்கும் விவாதமாக மாறியுள்ளது.நாம்,தமிழ்ச் சூழலுக்குள் நமது சிந்தனைகளை விரிவாக்க வேண்டும்.உலகத்துள் நடக்குள் உரையாடலின் பண்புகளை உள்வாங்கி, அனைத்தையும் அறிதல் அவசியமாகிறது.நாளைய சூழலில் பரந்துபட்ட மக்களது வெற்றி நேரடியான வெகுஜனத் திரளின் பங்குபற்றலிலேயே தங்கியுள்ளது.இதைத்தாம் டானியேலா டான் மிகக் கறாராகச் சொல்லிச் செயலில் இறங்கி நாற்பது ஆண்டுகள் போராட்டத்தோடு இயங்குகிறார்.
இவருக்கும் ஹபர் மாசுக்கு(Jürgen Habers) இடையிலான வித்தியாசம் நோய்வாய்ப்பட்ட முதலாளியக் குழந்தைக்கு மருந்துகொடுத்துக் காப்பாற்ற முனைபவருக்கும், அதை கொன்று மாற்று அமைப்பை உருவாக்குவதற்குமான வித்தியாசம்.இதுள் டானியேல்லா(Daniela Dahn) இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.எனினும்,எமது தடீர் புரட்சி-திடீர் கட்சி அவரிடம் எப்போதும் நீக்கம்பெற்றே இருக்கிறது.
 
 
மக்கள் குடிசார் அமைப்புகளை உருவாக்கிககொள்வது:
 
 
இந்த நிலையுள், ஹன்ஸ் ஹேர்பேர்ட் ஆர்மின்(Hans Herbert von Armin)கூறுகிறார்:It ultimately is only one antidote to the restoration of democracy as government by and for the people: the activation of the citizens themselves have become mature and the creation of the necessary institutions. This recognition is made by growing, and it is the deeper reason for the fast-growing popularity, the elements of direct democracy in the Federal Republic (and elsewhere) to find for some time. "-From the beautiful illusion of democracy ஆர்மின் கூற்றை உள்வாங்கும்போது,ஜனநாயகச் சூழலை மக்கள் சுயமாக அரசிலிருந்து விலத்தி உருவாக்க வேண்டியுள்ளது.இதற்காக மக்களே தம்மால் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகளை முறியடித்து முன்னேற வேண்டும்.இங்கே,சட்டம்,ஒழுங்கு-நீதி என்பது ஒடுக்குமுறை ஜந்திரமாக இருக்கும்போது மக்களைச் சுயமாக இயங்க அனுமதிக்காதிருப்பதற்கான தயாரிப்புக்களை கட்சி ஆதிக்கம் தமது தொங்குசதைக் குண்டர்களால் ஆக்கிவிடுகிறது.இதை நியாயப்படுத்த அவசரகாலச் சட்டங்கள் அதற்கு அவசியமாகிறது.இலங்கை மக்களுக்குச் சுய ஆளுமை இல்லாதவொரு சூழலில், அதே மக்கள் சுயமாகக் குடிசார் அமைப்புகளை உருவாக்குவதென்பது ஒருகட்டத்தில் அவசியமாகிறது!இஃது,அரசினது போலி ஜனநாயக் குரலை அம்பலப்படுத்தி, நேரடியான ஜனநாயகத்தைக் கொணர்வதில் அத் தேசத்தின் பரந்துபட்ட மக்களது சுய எழிச்சியை,போராட்டங்களை-அமைப்பாண்மையைத் தூண்டுவதற்கு அவசியமாகிறது. இங்கே,இதற்கு மாறாக,தமிழ்த் தலைமைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போடும் கூச்சல், நிலவும் பாசிசப்போக்கை முலாம் பூசி ஜனநாயகமாகக்காட்டுவதற்கானதென்ற உண்மையைப் பேசியாகவேண்டும்.
 
ஆனால் யுத்தத்தைக்காட்டி,அர்த்தம் அறியாது அமிழ்ந்து போகும் மக்களது நியாயமான கோரிக்கைகள்.மக்களது அவலத்தை ஏற்படுத்திய இலங்கை ஆளும்வர்க்கத்து திமிர்தனமான யுத்தம் மற்றும் இனவாத ஒதுக்குதல்-ஒடுக்குமுறைகள்.இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் மீளவும் இவற்றையே தாம் சார்ந்த மக்கள் இனத்துக்கும்,தமக்குள் இருந்த சிறுபான்மைக் குழுமங்கங்களுக்கும் ஆயுத அடக்குமுறையூடாகச் செய்து முடித்தன.
 
ஒன்று, சட்ட பூர்வ அரசாகவும்,
 
மற்றது,சட்டபூர்வமற்ற இயக்க ஆதிக்கமாகவும் இருந்துகொண்டது,
 
இவ் விரண்டுக்குப் பின்னாலும் மேட்டிமைக் குழுவே தமது நலனுக்கான தெரிவில் யுத்தத்தைத் தொடர்ந்தன.இவைகள்,இலங்கையின் பரவலான மக்கடொகுதிக்கு எதிரான சக்திகளாக இருந்தும் மக்களைத் தமது வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்குவதற்கான தெரிவுகளாக ஜனநாயகப் பண்புகளை முதலில் இல்லாதாக்கிக்கொண்டன.அரசு,சட்டபூர்வ அரசு என்னும் அங்கீகாரத்தைப் பாராளுமன்றத்துக்கூடாகப் பெற்றுவிட எப்போதும் அதையொரு கருவியாக வைத்திருக்க விரும்பியது.
 
இயக்கங்களோ தமது அதிகாரத்தை-அடக்குமுறையை அப்பாவி மக்கள்மீது ஏவுவதற்கு"தாயகம்-தமிழீழம்"எனும் கோட்பாட்டைக் கருத்தியற்றளத்தில் ஊன்றி அதையும் ஒரு ஆயுதமாக முன்னெடுத்தபோது,இலங்கையின் சிங்கள மக்களுக்கு ஒடுக்குமுறை ஜந்திரமான அரசு-பரவாலான மக்களது எதிரி என்பதையும் தாண்டி-சிங்கள மக்களது இருப்புக்கும்-அவர்களது இனஞ்சார்ந்த பாதுகாவலானகச் சிங்களத் தேசியத்தின் அடையாளமாக மாறுகிறது.இயக்க வாத முன்னெடுப்பு,இலங்கைச் சிங்களவாத அரச பயங்கரத்தினூடாக வளர்ந்தபோதும் அவ்வளர்ச்சியில் மீளவும் சிங்களப் பேரினவாதம் தழைத்தோங்கும் சிறப்பான அறுவடையைச் சிங்கள மேட்டிமைக் குடிகள் அறைவடை செய்ததுபோன்றே, தமிழ் மேட்டிமைக் குடிகளும் இயக்க வாதத்தால் செழுமையான பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிருந்தன.இவை, இலங்கைக்கு வெளியில் தமிழ் மேட்டுக்குடிகளது பரந்தபட்ட இலாப நோக்கான வர்த்தகமாகவும் இருந்து கொண்டிருக்கிறது இன்றும்.
 
இறுதியாக,ஒரு விளைவைத் தரத்தக எதிர்வழி இருக்கிறது. ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்காக,அரசானது மக்களுக்கானதென்றவகையில் வாக்களிக்கத் தகுந்த மக்கள் சுயமாகத் தமக்கு அவசியமான குடிசார் நிறுவனங்களை அமைப்பதற்கு முனைவது.இப் படிப்பனவு மிகுதியாகக் கடைப்பிடிக்கத்தக்கது,கூடவே,அதன் ஆழமான அர்த்தம் மிக வேகமாக மாற்றுக்கருத்துச் செயற்பாடு வளர்வது என்றும் எடுக்கலாம்.இந்த மூலமானது நேரடியான ஜனநாயகத்தை நாம் முழுமையாக அநுபவிப்பதாற்கு மக்கள் ஆண்மைபெறுவது அவசியமாகிறது.இதனுடாக, ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்கும், சரி செய்வதற்குமான அரசு, மக்களுக்கு அண்மையில் இருப்பதும் அவசியமாகிறது.இத்தகைய கருத்து நிலையுள் மக்கள் முழுமையாகத் தமது ஆளுமையைக் காணவேண்டுமாயின் அவர்களது வாழ்வாதாரங்களும் மீளக்கட்டியமைப்பட்டு மக்கள் சமூகமாக வாழும் நிலை உருவாக வேண்டும்.திறந்தவெளிச் சிறையுள் கொத்தடிமைகளாக இராணுவக் கண்காணிப்பின்கீழ் வாழும் மனிதர்களிடம் மகிந்தாவையும்,பொன்சேகாவையையும் நியாப்படுத்திவிடும் தமிழ்க் குழுக்கள் கட்சிகள் உண்மையில் ஜனநாயகத்தின் எதிரிகள்.இவர்களுக்கு அதன் அர்த்தம் அவசியமற்றது.ஏனெனில்,இவர்களே இன்றைய கட்சிகளது மிகப் பெரிய அடியாட் குழுவாக மக்களுக்குள் கோலாச்சுகின்றனர்.எனவே,மக்களது சுய ஆளுமை மழுங்கடிக்கப்படுவது இவர்களைப் பொறுத்தவரை இவர்களது இருப்புக்கு அவசியமாகிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி.
07.01.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...