Sunday, February 16, 2014

தலித்துத் Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு...

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்:


Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு [ அஃது முலையில்லை - "மூலை"  என்று புரியுங்க மக்காள்] தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்....




"முற்றத்து வாழை குலையீன
    முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"


இடையீடு: முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க :


"Ich glaube an die Sonne,auch wenn sie nicht scheint.
     Ich glaube an die Liebe, auch wenn ich sie nicht spüre.
Ich glaube an Gott,auch wenn ich ihn nicht sehe."


- Unbekannt [Quelle: Jüdische Inschrift im Warschauer Ghetto]


 "சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.

   அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.

   தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்."

 -யாரோ

[வார்சோவின் கெற்ரோவெனும்  போர் வலிமிகு அச்சம் -வரலாற்றுக் குறிப்புள் எழுதப்பட்ட யூதக் கவிதை ]

 பொழிப்புரைத்தலோடு பொல்லாங்குரைத்தல் இது : "Warschauer Ghetto" என்பது, இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் போலந்துத் தலைநாகரான வார்சோவில் வாழ்ந்த யூதர்களது குடியிருப்புப் பகுதி.அதை, இப்படியேதாம் யேர்மனியக் காரியாலயங்கள் அழைத்தன.இருந்தும் ,இக் குடியிருப்பை நாசிகளே உருவாக்கினர்.பரந்துபட்ட போலந்து மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் குவித்து வைத்திருந்த யூதர்களை ,இலகுவாக அடையாளம்கண்டு, கொல்லும் தந்திரமாகவிதிருந்தது.

பொல்லாங்கு : இதைத் தாம் சிங்கள அரசும் இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்காக அவர்களையும் வன்னிக்குள் தனிமைப்படுத்தி ,முள்ளி வாய்க்கால்வரை துரத்தியடித்துத் துன்படுத்தியும், வருத்தியும் கொலை செய்தது.






இந்தவகைக் கொலை செய்த  பாசிச இலங்கை அரசைத் தலித்துவ முன்னணி(புலம்) தலைவர் தேவதாசன் மெச்சிக் கூத்தாடி வரவேற்றார்.

தமிழர்களைப் பயங்கரவாதப் புலிகளெனச் சொல்லிச் சிங்கள அரசு அழித்தபோது அதை, சனநாயகத்தின் முன்னெடுப்பென்றும் தேவதாசன் டான் தொலைக்காட்சியில்[Dan Tv]  20.12.2009 ஆண்டு நேரடியாவுரைத்தார்.

யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு"தலித்து"எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், அன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் இன்றும் கேள்விகள் எழுகிறது.அவை யெனது  நியாயத்தில் ,தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்குத் தேவதாசனின் ஒவ்வொரு அரசியல் மற்றும் , கருத்துரைப்பு நகர்வுகளிலிருந்து முனைகிறது.

சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் " தலித்து"  எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ் - இனம் -என்றவொன்றில்லையோ?).
 
இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் "இலங்கையர்" என்ற பதத்தின் மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறை கூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து "இலங்கையர்கள்" என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).

நல்லது!
 
இதன்வழி,"சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை"  என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் "காணப்படுவதற்குள் காணாததை"த் தேடிப் பார்க்கின்றோம்.

அங்கே: -

இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் , உங்களால் முடிகிறது.

இந்த நன்றி, "புலிப் பாசிசத்தை" அழித்ததென்பதற்கெனவும் சொன்னீர்கள்.அதுவும் ,பறுவாயில்லை. நீங்கள் ஜனநாயத்தின்மீது கொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.
 
ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள், தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகியது -உங்களுக்குத் தேவதாசன்?; இஃது, பிணந்தின்னும் மனத்துள் அடங்கதோ?
 
இலங்கை அரசினது சிங்கள இனவாதமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் , சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் -பிணந்தின்னும் "Cannibalist Manifesto" வரைஞராகவும் உங்களை ,நமக்குள் அன்றுமின்றுமென்றும் அறிமுகஞ் செய்கிறது- இன்னுஞ் செய்யும்?

பல்லாயிரக்கணக்கான மக்களைக்கொன்று குவித்த சிங்களப்பாசிச அரசையும் -மகிந்தாவையும் பாராட்டி,"சனநாயகத்தை"மீட்ட புரவலரென நீங்களுரைத்தபோது இல்லாத இந்தப் பிணந்தின்னும் மனநிலை, உங்களைத் தவிர்த்த மற்றவர்களுக்கு  இருக்கென்பதில் எனக்குக் குழப்பமாகவிருக்கிறது.

//  Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்....//

முள்ளிவாய்க்காற் குருதி சிவந்த மண்ணுலர்வதற்குள் நீங்கள் வாசுதேவ நாணயக்காராவின் முதுகைச் சொறிந்தபடி மகிந்தாவுக்கானவுங்கள் கரச் சேவையைக் குறித்து,"நாம் இலங்கையர்கள் என்று உணர்ந்துகொண்டு இலங்கையை உயர்த்தவேண்டும் " என்றீர்கள்.

தமிழர்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லையுமென்றீர்கள்.

வேளாளரால் ஒடுக்கப்படும் "தீண்டத்தகாதவர்கள்" என்றுரைக்கப் படும் "தாழ்தப்பட்டவர்களை" விடுவிப்பதற்கு அவர்கள் ,தம்மைத் தலித்தென்று பிரகடனப்படுத்த வேண்டும் என்றீர்கள்.

ஆனால் ,சிங்களப் பாசிச அரசால் தமிழர்கள் என்பதற்காகவொடுக்கப்படும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் "தமிழர்கள்"என்று அடையாளப்படுத்தித் தமிழ் பேசுபவர்கள் தம்மைத்தாம் விடுதலை செய்வது  நியாயமற்றதென மறுத்து ,"இலங்கையர்கள்"என்றுரைக்கும்படி சிங்கள அரசாகவே நீங்கள் உரைத்து, அவர்களை உதைக்கும்போது இல்லாதவிந்தப் பிணந்தின்னும் பிழைப்பு, எப்படிச் சீமானுக்கும் -காசி ஆனந்தனுக்கும் வந்ததென்று ஒரே குழப்பமாகவிருக்கிறது தேவதாசன்!

"சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.
   அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்புகிறேன்.
   தெய்வத்தை நான் தரிசிக்காத[காணாத] போதிலும் தெய்வமொன்றுண்டென்று நான்  நம்புகிறேன்."

உண்மையில்,எனக்குத் தேவதாசனது"பிணந்தின்னி"த் தத்துவமானது 1930 களில் நாசிகளது பாலர் பாடசாலையில் பாடப்பட்டவொரு பாடலை ஞாபகப்படுத்துகிறது.

„Händchen falten-
 Köpfchen senken
 immer an den Führer denken.
Er gibt euch euer täglich Brot
und rettet euch aus aller Not.“ 

"கைகளைக் கட்டுங்கள்
தலைகளைத் தாழ்த்துங்கள்
எந்நேரமும் தலைவனையே நினைத்திருங்கள்
அவரே உங்களுக்கான நாளாந்த உணவைத் தருகின்றார்
அத்தோடு உங்களை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தும் வருகின்றார். "

இதைத்தாம் எல்லாப்பாசிசவாதிகளுமே கட்டளையாகவிடுகின்றனர்.அது நாசிகளாகட்டும் இல்லைச் சிங்கள இனவாதிகளாகட்டும் இவைகளும் தேவையில்லை -ஏன் நம் "தமிழ்த் தேசிய வாதிகளாகட்டும்" எல்லோருமே ஒரு திசையிற்றாம் காரியமாற்றுகின்றர்.

எனது கேள்வியெல்லாம்,இதுள் :


"எந்தப் பாசிசவாதிகளுக்காக நீங்கள் ,தலை தாழ்த்திக் கைகட்டி அவர்தம் நாமம் நினைத்து ,நாளாந்தவுணவுக்காகப் "பிணந்தின்னும் " தத்துவம் உரைக்கின்றீர்கள் -தேவதாசன்?





-ப.வி.ஶ்ரீரங்கன்
16.02.2014

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...