Saturday, November 19, 2011

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பை...

பெயரிலிக்கும் எனக்குமான உரையாடலாக...

// அதேநேரத்திலே இரு விடயங்களை நான் தெளிவாக நீங்கள் சொல்லவேண்டுமெனக் கேட்கிறேன்; இயக்கங்கள் எதுவானாலும் உண்மையாக உயிர்களையும் நிகழ்காலவாழ்க்கையையும் இழந்த எத்தனையோ இளைஞர் (இளைஞன் + இளைஞி), மத்தியவயதினர், சார்பான முதியவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்; அதனாலே புலிப்பினாமி புளொட்பினாமி என்று திட்டும்போது, உயிரைக் கொடுத்தவரையும் தேரைக்கொளுத்துகிறவரையும் வகை பிரித்துக் கொஞ்சம் வரையறை செய்வதுதான் நியாயமாகுமா? இல்லையா? இரண்டாவது, /எனது குறிப்புகள்.

வரலாற்றில் ,"கட்டிப்போட்ட " சிந்தனைக்குட்பட்டு வளர்ந்த இன்றைய இளைஞர்கள்-இளைஞிகள் இந்தச் சிக்கலைப் புரிந்து மேலெழுவேண்டிய தேவைக்கானவொரு புள்ளியை நான் அண்மிக்க விரும்புகிறேன்./ என்கின்றீர்கள். இதிலே கருத்தார்ந்த தத்துவப்படுத்தலுக்கப்பால், நடைமுறைக்கு என்ன பயன்? ஆற்றுவெள்ளத்திலே ஓடம் கவிழ்கையிலே நீந்தத்தெரியாவிட்டால், பண்டிதரே, அர்த்தசாஸ்திரமும் ஆவிக்குதவாது; தண்டியலங்காரமும் தலைகாக்காது. பின், யாருக்காக, இந்த நோட்டுகளை நாம் வரைந்துகொண்டேபோகிறோம்! "யாருக்காக! இது யாருக்காக! இந்த நோட்டுகள் மார்க்சிய நோட்டுகள்! எம்மிஞளைஞர்க்காய் எழுதிய நோட்டுகள்" என்ற சின்னக்கோட்டுக்குள்ளேயே அவை பயன் அற்றுப்போமே! :-( // -இரமணிதரன் கந்தையா
http://www.facebook.com/jbharane/posts/2590248437521?cmntid=2599466427965

ன்றிருந்து இன்றுவரையும் இந்தச் சிக்கலைத் தெளிவோடுதானே பேசுகிறேன்!போலித்தனமாக எமது சிறார்களது உயித்தியாகத்தையும்,சிங்கள இனவொடுக்குமுறைக்கெரான அவர்களது வீரஞ் செறிந்த எதிர்ப்புப் போராட்டத்தையும் தேசியவிடுதலை"என்ற ஒற்ற்றைப் பரிணாமத்துள் அடக்கி அதைக் காசாக்கும் புலிகளது மேல் நிலை அரசியற்றலைமையைத்தானே இதுவரை விமர்சிக்கின்றேன்.

புலிகளது அடிமட்டப் போராளிகளைத் தேசபக்தர்கள் என்ற எனது பிடிவாதமான கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது.இன்றுவரை, இந்த இளைஞர்கூட்டம்(புலம்பெயர்ந்த)இந்த மேல்நிலைப் புலிப்பினாமிகளையும், அந்த தேச பக்தர்களது தியாகத்தையும் இருவேறலகாகப் பார்க்கவேயில்லை!

நமது போராட்டம் தோல்விற் சென்றபோதும், அதை திசைதிருப்பிச் செல்நெறியில் மாற்றத்தைக் கோரியபோதெல்லாம் அதை எதிர்த்துத்"துரோகி"சொல்லி அடிமட்டப் புலித் தேசபக்த இளைஞர்களைக் களப் பலி கொடுப்பதுவரை இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கட்டிப்போட்ட கயவர்கள்தாம் மீளவும், நமது போராட்டத்தை(இனவாதச் சிங்கள அரசினது நிறுவனப்பட்ட தமிழ்பேசும் இனத்துக்கெதிரான ஒடுக்குமுறையை)த் தொடரப் போவதாகவும்,புலம்பெயர்ந்த இளைஞர்கள் தம்மை அவற்றோடு இணைத்துத் தார்மீக ஆதரவைத் தரவேண்டுமெனக் காசு பறிப்பதில் இந்த இளைஞர்களைக் கட்டிப்போடுவதில் யாருடைய நலன்கள் காக்கப்படுகிறது?

இந்நிலையுள்,ஆளும் இலங்கை அரசசினது ஆளும் வர்க்கத்துக்கிசைவாக மீளவும் தகவமைக்கப்படும் இந்தச் சதி வலையை அறுத்து நாம் சரியான பாதையோடுதாம் கருத்தியலைப் பரப்பவுதிலிருந்து புதிய நடைமுறைகளை நோக்கிய சாத்தியத்தை எதிர்பார்க்க முடியும்.

அந்தச் சாத்தியமானது நிலத்தில் நிலைகொண்டுள்ள சிங்களவொடுக்குமுறை வன்ஜந்திரத்துக்கெதிராகத் திடமாக மக்கள் எதிர்த்தெழுவதில் புதிய நம்பிக்கைகொண்டிருக்கிறதென்பதால்,அதை நிலைப்படுத்தித் தகவமைப்பதில் நமது இளைஞர்களது புதிய பரிமாணமே அவசியமானது.

இந்தப் புலத்துப் புலிப் பினாமிகள்பின்னால் கொடி பிடிப்பதைவிட நாம் வாழும் தேசத்து முற்போக்குச் சக்திகளை அண்மிப்பதும்,நமது தேசத்தின் இன்றைய நிலையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்கான புதிய திசைவழிகளைக் கண்டடையவும்,அதைத் தொடர்ந்து வெகுஜனமட்டுத்துக்கு நகர்த்துவதிலும் இந்த இளைஞர்கள் செயற்பட முடியாதிருப்பது எதனால்?

தொடர்ந்தும் ஏகாதிபத்தியத் திசைவழியில் நமது விடுதலைகுறித்துக் கனவுகொள்வதில் நாம் இவர்களால் பழிவாங்கப்படும் சுயாதீனத் தேசத்து மக்களது சமீபகால அவலத்தையும்,பாலஸ்தீன-குர்தீஸ் மற்றும் நேபாள மக்களதும் விடுதலைiயும் அவமதிக்கின்றோம்.

நாம் தோழமைகொள்ளும் நட்புத் தேசியவினங்களையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டுத் "தேசங்கடந்த தமிழீழ அரசு"-பிரதமருக்குப் பின்னால் வழிப்பாட்டுத் தனமானகக் கும்பிடு போடுவதில் எந்த மார்க்சியத்தைகொண்டு நாம் நோட்டுக்களைச் சொருகுவது?

என்னைப் பொறுத்தவரையும், நான் மார்க்சியத்தை ஒரு வாய்பாட்டுரீதியாகவொப்பிப்பவன் அல்ல!அதன் சமீபத்திய புதிய பரிணாமங்களைக்கூடச் சேர்த்தே நகர்த்தவதில் இந்த இளைஞர்களை நிராகரிக்வேண்டியவர்களை நிராகரித்துவிட்டு, மக்களது எதிர்ப்புப் போராட்டங்களை அரசியற்படுத்தும் சர்வதேச உரையாடல்களையும் செயற்பாட்டையுமே கோரச் சொல்கிறேன்.


பிரபாகரனைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானவர் என்று எங்கும் சொல்லவில்லை!அவர்,விதேசிய வாதச் சக்திகளைப் பின் தொடர்ந்ததையும்,அவரது நம்பிக்கையையும் தான் அவரது பெயர் கொண்டு உரையாடுகிறேன்!

அவரது போதாமையால் முழுமொத்த மக்களது தியாகமும் அவரது முடிவோடு அழிக்கப்பட்டத்தன் குறியீட்டையே அவரைச் சொல்லி இனங்காட்டுகிறேன்.

இங்கே,எந்த இயக்கவாத மாயையும் நான் விரும்பி ஏற்கவும் இல்லை,அல்லது, தம்மைத்தாம் மார்க்சியர்கள் எனப் பசப்பும் இரயாகரன் கூட்டத்தைப்போல் மார்க்சியமே தெரியாமல் கிளிப் பேச்சையும் பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை!

புதிய திசைவழியும்-செல்நெறியும்நாடி(அவசியத்தின்பொருட்டு),இந்தப் புலம்பெயர் முன்னேறிய-பின்னேறிய(இயக்கவாத மாயைக்குட்பட்டவர்கள்) இளைஞர்கூட்டம் ஒரு தெரிவுக்கு வந்தாகவேண்டும்.அஃது,இன்றிருக்கும் புதிய உலகவொழுங்கில் அதற்கெதிரான எதிர்ப்புப் போராட்டங்களைச் சளையாது செய்யும் போராட்டத்தோடு, தம்மையும் இனங்கண்டாக வேண்டுமென்பதே எனது அவா!

இதைவிட்டுத் " தலைவர் வருவார்!என்றோ அவர் விடுதலைக்கான போரை மீளத் தகவமைத்துத் தமிழ் தேசத்தை விடுவிப்பார்" என்பதில், நமது ஆற்றல்களைச் சிதைக்கும் கருத்தாடலைத் தொடர்ந்து அநுமதிக்க முடியாதாதன் காலத் தேவையிலேதாம் பிரபாகரனது மரணத்தை மறைப்பது தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்யும் துரோகமெனச் சொல்கிறேன்.

வரலாற்றுவெள்ளத்தில்,நீங்கள் உரைத்தபடி, பிரபாகரனது அனைத்து தவறுகளோடும் அவர், தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரசின் இனப்படுகொலைக்கெதிரான தனது சக்திக்குட்பட்ட வகையிற் போராடிய ஒரு குறியீடென்றுஞ் சொன்னேன்.

விக்கிப்பீடியாவில் பிரபாகரனது வாழ்க்கைக் குறிப்பைச் சரி செய்து"பிரபாகரன் தமிழ்த் தேசியவிடுதலையின் குறியீடு" என்றும்,தமிழ்மக்கள்மீது சிங்கள இனவொடுக்குமுறை நிகழும்வரை அவர் தமிழ்மக்களது விடுதலையின்மீட்பர் என்றும் நானே திருத்தி எழுதினேன்.

இதுவரையானது அனைத்து இயக்கவாத அமைப்புகளுக்குட்பட்ட சிந்தனைத் தடங்களும், இருக்கும் மக்களது அரசயில் வாழ்வை அந்நியர்களுக்கு ஏலமிடும் அரசியற் போக்கிலிருந்து விடுபட வேண்டிய வகையிற்றாம் ஒரு உரையாடலது தேவையை இப்படியாகவும் உரையாடுவதென நானும் பல இடங்களில் செய்து, கல்லடிபட்டும் தொடர்வது செயற்போக்கில் வந்தடையும் நடைமுறைக்கு இறங்கும் ஒரு முன் நிபந்தனையெனக் காண்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2011

Sunday, November 06, 2011

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள்...

ஊடக வலுவும்,மக்கள் தோல்வியும்.

ற்போதைய இலிபிய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.இவற்றையெல்லாம் மக்களுக்கான ஜனநாயகப்படுத்தலெனப் பெரும் ஊடகங்கள் தினமும் சொல்கின்றன.

என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற் கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது. இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய,புதிய யுத்தக் களங்களைத் திறக்கிறது.இந்த யுத்தக் களங்களை நியாப்படுத்தும் துறைசார் கல்வியாளர்களும்,பெரும் ஊடக நிறுவனங்களும் அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளது லொபிகளாக மாற்றப்பட்டுக் கல்வி துறையே பெரும் ஊழற்கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரும் அரபுலக மற்றும் ஆபிரிக்கக் கண்ட யுத்த முகாம் அனைத்தும் மூன்றாவது உலக யுத்த வடிவமாகும்.வடிவத்தில் புதிய வகை உலக யுத்தமாகும்.இவ் யுத்தமானது கடந்த முதலாவது,இரண்டாவது யுத்த வடிவதைத் தகர்த்து இன்றைய நிதி மூலதனத்துக்குத் தலைமைதாங்கும் பெரு வங்கிகளது தலைவர்களது புதிய வடிவமாகும்.இதைப் பழைய பாணியில் புரிந்து கொள்ளவே முடியாது.

இங்கே புதிய வகை யுத்தக் கூட்டணியானது நேட்டோ தலைமையில் இயங்கும்போது அது உலகு தழுவிய யுத்தக் கூட்டணியை மேற்குலகத்துக்கு வழங்கியுள்ளபோது,சுயாதீனமான சிறிய தேசிய அரசுகள் இத்தகைய கூட்டணியால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொள்ளை யிடப்படுகிறது.இந்த யுத்தங்களுக்குப் பின்னால் மேற்கு மூலதனத்தின் இன்றைய சரிவுகளைத் திட்டமிட்டுச் சரி செய்வதற்கான உலகக் கொள்ளையில் அடுத்துப் பலியாகப்போகும் ஈரான் தேசத்தை அம்போவெனக் கைவிடப்போகும் சீன-இருஷ்சிய வியூகம் ,மேலும் வலுவான பொருளாதார ஒப்பந்தகங்களை மேற்கிடமிருந்தும், அமெரிக்காவிடம் இருந்தும் எதிர்பார்க்கும்போது,இருவேறு துருவமாக இருந்த மூலதன வர்க்கமானது கூட்டாகக் கொள்ளையிடும் குவிப்புறுதியீனூடாகச் சிறிய தேசங்களைப் பலியிட்டுத் தமது நலன்களை அடைவதாகவே நான் கணித்துக் கொள்கிறேன்.


இன்றைய பொருட் குவிப்பின் தொடர்ச்சியில் ,உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.ஒரு புறம் வளர்ச்சியடையும் தேசங்களை யுத்த்தால் கொள்ளையிட்டுச் சிதைப்பதும்,அதேபோன்றல்லாது தமது தேசத்து மக்களை நிதி மூலதனதிரட்சியின் வழியாக எழும் சட்டங்களால் கட்டுப்படுத்தி, அனைத்து வகைகளிலும் மூலதனத்துக்கீழ் அடிமையாக்குவதாகும்.அதன் தொடர்ச்சியே கிரேக்க அரசுக்கு உதவி-ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும், யுரோ நாணயத்துக்கும் அமைக்கப்பட்ட நிதிக்காப்பு[Euro-Stabilitätspakt ] குடையாகும்.

உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.

இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் [அரபுத் தேசங்களிலும்,ஆபிரிக்காவிலும் ] மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.

அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது, உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த இலியக் கொள்ளையால் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.

இனிவரும் காலங்களில் அமெரிகத்தலைமையில் இஸ்ரேலிய அரசின்வழி நடை பெறப்போகும் ஈரான்மீது நடாத்தப்படும் யுத்தமானது,பிறிதொரு தடைவையில் அணுயுத்தமாகச் சீனாவை அண்டும்போது, இந்த உலகத்தின் இறுதிக்கட்டம் நெருங்கி விடுவதற்கான புள்ளிகளே தென்படுகின்றன.

இதைத் தடுக்கும் எந்த அரசியல் ஆற்றலும் பொருளாதாரக் கூட்டு ஒத்துழைப்பால் வல்லரசென இருக்கும் மாற்று முகாம்(சீனா-இருஷ்சியா)போன்ற தேசங்களுக்கு இல்லாதாகப்பட்டு, கடந்த இலிபிய யுத்தத்தில் இது உறுதிப்பட்டுள்ளது.


இத்தகைய புள்ளியை உள்வாங்குவதே கஷ்டமாக இருக்கும்போது இந்தப் பலாத்தகார யுத்தக் கூட்டணிக்கு எதிராக உலக மக்கள் அணி திரள்வதைத் தவிர வேறெந்தத் தேச அரசும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாதென்பதற்கு இலிபியாவே ஒரு சாட்சியாக இருக்கிறது.


ஆனால்,உலக மக்களைக் கட்டிப் போடும் மாபெரும் ஊடக வலுவைக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் மூலதனக் கும்பலிடம் தோல்வியுற்றது உலக மக்களைத் தவிர வேறெந்தத் தேசமும் இல்லை!

மக்களே தோல்வியில் நிற்கிறார்கள்.அவர்களை மீட்பதென்பது இன்றைய நவீன ஊடக வலுவை எவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அவ் வர்க்கமே இறுதியில் வென்றவர்கள் ஆவர்.

வர்க்கங்களைக் கடந்து, உலக மக்கள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.உலகப் பெரும் மூலதனமானது ஒரு சில பெருவங்கித் தலைவர்களது கட்டுப்பாட்டில் ஒரு சிறிய சேவைத் துறையைக்கொண்டு இயக்கப்படுகிறது.இங்கே, வர்க்கப் போராட்டம் என்பது மீள் பார்வைக்குட்படுத்தப்பட்டு,மூலதனத்தாற் பலாத்தகாரப்படுத்தப்படும் தேசிய மூலதனமுடையவர்களும் [ இன்று கிரேக்கத்தில் பழிவாங்கப்பட்ட உடமை வர்க்கத்தைக் கவனிக்க ] பழிவாங்கப்பட்ட உழைப்பாளருடம் கை கோற்பதைத்தவிர வேறு வழியில்லை. வங்கிகளைச் சோவியற்றாக்க வேண்டும்.இல்லையேல் அவை முழுமொத்த மக்களையும் வேட்டையாடிவிடும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.11.2011

Thursday, November 03, 2011

தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

யாழ் மையவாதக் குறுந்தேசியம்: வென்றிருந்தால்அஃது, தலித்து மக்களுக்குத் தூக்குக் கயிறு!

புலிகளது கால் நூற்றாண்டுப் பாசிசச் சேட்டைகளுக்குப் பின்பான இன்றைய இலங்கை அரசியலில், பற்பல சக்திகளின்,வர்க்கங்களின் நலன்கள் முட்டிமோதுகின்றன.இங்கே பிராந்தியத் தரகு முதலாளித்துவ நலன்கள் ஒவ்வொரு வழிகளில் தத்தமது நலனின் பொருட்டுப் புதிய புதிய கூட்டைப் பெறுகின்றன.அவை தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சனையைத் தமக்குச் சாதகமான முறைகளில் பயன் படுத்தித் தமது நலனைப் பெற்றுக்கொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதாகக்கொள்ள முடியுமா?


புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது.இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கச் சரணாகதியும்,புலம் பெயர் புலிப் பாசிஸ்டுக்களது வெட்டுக்கொத்தும்-கொலையும்இதைப் பலமாக உறுதிப்படுத்துகிறது.


இன்றைய இளந் தலைமுறையினர்,பாசிசப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை-ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலித் தேசியவாதமும் தமிழரின் சுயநிர்ணய வுரிமையைக் களைந்தெறிவதற்கான வொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக் கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்கருத்தாளர்களை(புலி இசத்துக்கு மாற்றான கருத்து),தலித்துவ மக்களை-இஸ்லாமிய மக்களை "தமிழ்த் தேசியத்துக்கு" எதிரிகளாகச் சுட்ட முனைவது,சதியுடைய மொழிவாகும்.


இன்றிந்தச் சதியானது புலிகளது அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் "தமிழ் தேசியத்தின்-விடுதலையின்" பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது.

தமிழ்பேசும் தரப்பினருக்கு வெளிப்படையான அரசியலை பொதுவெளியில் வைத்து உரையாடுவதன் பண்புக்கு இலக்கணப்படுத்தல் புரிந்தபாடாக இல்லை!காலதாமதமானாலும்,உண்மைகளை வரலாற்று வெளிச்சத்தில் வைத்துக் கற்றுக்கொள்ளும் மனம் உருவாகாதவரை,தமிழ் பேசும் மக்களது பரந்த பொதுவயப்பட்ட கூட்டுணர்வை ஒரு தெரிவான இலக்கு நோக்கிச் செலுத்த முடியுமா? மக்களாண்மை என்பதை இன்றைய ஜனநாயகமெனச் சுருக்கி வாசிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.மேற்கு வழிப்பட்ட கிரேக்க "டெமோக்கரட்டி" [Demokratie ]ஒரு குழுவது திறன்சார் அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் ஒரு பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை அவர்களுக்காக்குவதில் இந்த "Demos"(மக்கள்) kratía (அதிகாரம்) வெளிப்படுத்தியது.அதுவே,இன்னொரு வாசிப்பில் Aristoteleskratie [...]ஆகவும் இப்போது புரிவதில் மேற்கைக் தள்ளி இருக்கிறது.நமக்குப் புலிவழியான தீவிர தமிழ்த் தேசியத்தின்பாலான அகவிருப்பு அதிகமாகிக்கொண்டிருக்கின்றதில் உலகக் கண்ணோட்டத்தைச் சில அதிகார முனைகளில் வைத்து ஒருவரைச் சார்ந்து"நலன்"களை அடைதல் என்ற "அதி புத்திசாலித்தனம்" பெருக்கெடுக்கிறது.


மக்கள் வலுவுற்றிருந்தபோது அனைத்து இயக்கங்களும் வலுப்பெற்றுத் தமது படைவலுவைத் தேடிக்கொள்ளும் மனித ஒத்துழைப்பு நிலவியது.அவ்வண்ணமே அவைகள் ஓரளவு உறுதியுடைய அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தன!இன்று, மக்கள் பற்பல அரச ஜந்திரங்களுக்குள்,அதன் ஆதிக்கத்துக்குள் பிளவுண்டு கிடக்கின்றார்கள்.இத்தகைய பிளவுகளும் சர்ச்சைகளும் பல்வகைக் கட்சிகளுக்குள்ளும்,அவைகளது அமைப்பாண்மைக்குள்ளும், அதன் அகப் புறச்சூழலிலும் இன்று வலுவுற்றிருக்கிறது.இது ஒருவகைப் புலி இயக்கக் கண்ணியம் பேசி,மக்களை முட்டாளாக்கியபின், தமிழ் மக்களின்(கவனிக்க: மக்களது இழப்புகள்) இது வரையான இழப்புகளைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி வருகிறதும்,கூடவே தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களை அழித்தொழிப்பதற்கான இலங்கையரசின் நகர்வுகளைச் சட்டவாதத்துக்குள் காப்பதற்கும் முனைகிறது.நாடுகடந்த தமிழீழ அரசு என்ற மாய மான் இந்தப் புள்ளியின் தொடக்கக்கமென்பது பலருக்குப் புரிந்தும் இருக்கலாம்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகமென்ற கோட்பாட்டை எப்போதோ நிராகரித்த விட்ட கிழக்கு மாகாண மக்களது அரசியல் இலக்கு, தமிழ் மக்களைப் பிரதேசவாரியகப் பிரித்தெடுத்துவிட்டது.இந்தப் பிரிப்புக்குப் பின்பான தலித்து மக்களது வரலாற்று நியாய வாதமானது இன்னும் அதிகமாக யாழ் மையவாதத்துக்குச் சாவு மணியடிப்பதில் ஓரளவு வெற்றி பெறுமானால் புலிகளது கருத்தியலானது வரலாற்றில் அழிந்து காணாமற் போகும்.இத்தகையவொரு சூழலை எதிர்பார்த்திருப்பதல்ல மக்கள்-குடிசார் அமைப்புகளது இலக்கு.பரந்துபட்ட மக்களுக்கு எதிரான மையவாதச் சிந்தனைகளது நிறுவனத் தகர்வுக்குக் கட்டியம்கூறிய புலி அழிப்பானது,பெருமளவில் தமிழ்பேசும் தாழ்த்தப்பட்ட மக்களது வெற்றி என்பதிலும் பார்க்க,அவர்களது கழுத்துக்கு வரவேண்டிய தூக்குக் கயிறு, இற்றுப்போய் அறுந்தழிந்ததெனக் கருதிக்கொள்ளலாம்.

இதைப் புரிந்துகொள்வதாயின்,தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவான அரசியலுக்கு அப்பாற்பட்டுக்கிடக்கும் சங்கதிகளை மனமுவந்து பார்த்தாகவேண்டும்.

இறுதியாகச் சொல்வதானால்,தமிழ்ச் சமுதாயத்தினது பாரிய பிளவுகள் சாதியாகவும்,பிரதேச ரீதியாகவும்,பெண்ணொடுக்குமுறை மற்றும் இனவாதமாகவும் நிலவுகிறது.அதைப் பெரும்பாலும் சரிவரப் பயன்படுத்தும் இலங்கையின் இராஜதந்திரமானது புலிகளின் படையணியைப் பலியெடுத்து இதை வலுவாகச் சாதித்துள்ளது.இந்த வெற்றியானது புலிகளின் இயக்க நலனை பாரிய முறையில் சிதைத்து அவர்களை வரலாற்றிலிருந்து தொடைத்தெறிந்திருப்பினும் இந்தச் செயலூக்கத்தின் பின்னே நிலவும் வரலாற்றுணர்வானது கடந்த சிங்களப் பொற்காலக் கனவுகளின்வழி இயக்கமுறும் இன்றைய அரசியல் இலக்குக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறதென்பதையும் சுட்டிக் காட்டலாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.11.2011

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...