Saturday, October 29, 2011

அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம்

மக்களைக் காத்தல்: ஜனநாயகம்.

இதுவரைகாலமாக...


உலகம், "சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;" (dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!

கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden." என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தருணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

இன்றைய இலிபியா யுத்தம் வரையான மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.இதைக் கார்ல் போப்பரது உரையாடல்கள் பலதில்,அவரது தாய் மொழியில் நான் புரிந்துகொண்டவை.




சில விதிமுனைப் பயன்களில் மிக நெருக்கமானது பிரிடிறிக் காய்க்கினது[Friedrich A.Hayaek : Der Weg zur Knechtschaft ] எழுத்துவழியான நவலிபிரலது தாரளமயக் கோட்பாடு.(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".

கார்ல் போப்பர்,திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.
மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் - கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் -நம்மவரும் கேட்பதற்கானவொரு ,போப்பரது ஏகாதிபத்தியச் சார்பு மொழியாடலைத் தரமுடியும்:"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.

இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker)புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போக்கு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம எமக்கும் அரிக்கத் தொடங்கிவிடுகிறது.


இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.

இஃதின்று, முக நூல் வரைவாளர்களுக்குச் சாலப் பொருந்தும். குறிப்பாகத் தேசியவிடுதலைப் பொழிப்பாளர்களுக்கு.-பெரிதும் பொருந்தும்-ஏனெனில், கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது :

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)

இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம்.

இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடுவதுபோன்று, உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.

இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அவசியமொன்றுண்டு.

அது எப்பவும்போலவல்ல.

இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் ;


உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?

உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது.

(Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை நோக்கி நீ பாடுபட்டால்-போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"

"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் .இதுவே,இன்றைய இலிபியா யுத்தம் வரையான "மக்களைக் காத்தல்-சர்வதிகாரத்தை " ஒழித்தல் என்பதிலிருந்து பண்டுதொட்டுப் புரியும் அரசியல் அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் எதுவுமில்லையென்றாகிறது.

By ப.வி.ஸ்ரீரங்கன்

Sunday, October 23, 2011

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது.

இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றில், புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது இறுதியில் இந்த நலன்களை வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட ஒரு அரசால் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பக்கச் சார்பிலிருந்து முடித்து வைக்கப்பட்டது.இந்த முகாங்களது பூடகமான முகாங்கள் மகிந்தாவை ஆதரித்தபோது அங்கே,இலங்கை முழுமொத்த மக்களது நலன்களைத்தாம் அவை தமக்குள் உட்கொண்டனவேயொழிய , தமிழ்பேசும் மக்களை மட்டும் மொட்டையடிக்கவில்லையென்பதை எவருணருவார்?


இங்ஙனம் புரிய மறுக்கும் புரிதலேதாம்,கியூப நாட்டுக் காஸ்ரோவையும், கடாபியையும் தமிழர்களது எதிரியாக இனம் காணுகிறது. இந்தப் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பிரிவின் ஒரு தரப்புக்குத் தலைமைதாங்கும்சீனாவும்,ருஷ்யாவும் இலங்கை இராணுவத்தளபதிக்குக் கேடயம் வழங்கியதும்,புலிகளை அழிக்க உதவியதும்,புலிகள் இன்றைய அரேபிய அமெரிக்க அடியாட்படையாகச் செயற்படும் தருணங்களை ஏலவே இனங்கண்டதன் விளைவே!

அதாவது,புலிகள்,விடுதலை அமைப்பு அல்ல.அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது.அது,இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியத்தின் தயவிலிருந்து விடுபட்ட தருணமானது மேற்குலகச் சார்புகொண்ட யாழ்பாணியத்தின் கருத்தோட்டத் திசையூக்கத்தின் வெற்றியாகவே புரிந்துகொள்ளத் தக்கது.இந்த வெற்றியைத் தோற்கடித்தபோது,புலிகள் வரலாற்றிலிருந்து தொடைத்தெறியப்பட்டனர் என்பதையும் வரலாற்று வெளிச்சத்தில் வைத்து ஆய்ந்துணரவேண்டும்.

இன்றைய இலங்கையில்,புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்துவைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து ஜனநாயகக் குறுக்கல் நிகழ்த்தப் படுகின்றன.எனினும்,இலங்கையில் வெளிப்படையான அரசியலைக் கோருவதற்கும்,அதை நிலைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள்,சுயாதீனச் சமூகக் கட்டமைப்புகள் இப்போதும் வலுவாக இருக்கின்றன.இது,புலிகளது அரச கட்டமைப்பிலோ அல்லது அவர்களது அமைப்பு மட்டத்திலேயோ இருந்திருக்கவில்லை!தம்மைத் தவிர வேறு அமைப்புகளோ,மக்கள் மன்றங்களோ இருக்க அவர்கள் அனுமதித்ததே கிடையாது.இதனூடாகத் தம்மைத்தாமே"ஏகத் தலைமை"என்றும் அழைத்து இதை உறுதிப்படுத்தினார்கள். சகோதரப்படுகொலையூடாக,மாற்று இயக்ககங்களை அவர்கள் அழித்தபோது,இந்தியாவின் நலன்களுக்கிசைவான பக்கத்தில்நின்று, தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காட்டிக்கொடுத்தனர். அநுராதபுரத்தில் சிங்களக்கிராமத்தை; தாக்கி,பலவுயிர்களைக் கொன்று குவித்ததும்,முஸ்லீம் மக்களைக் கருவறுத்ததும்,இதன் தொடர்ச்சிகளாகும்.புலிகள் இந்தமட்டத்தில் ஒரு அடியாட்படைக் குரிய அனைத்துக் குணாம்சங்களையும் கொண்டிருந்தார்கள்.


வெளிப்படையான அரசியலைப் புலிகள் மறுத்ததன்விளைவே புலித் தலைவன் பிரபாகரனது சரணடைவும்,சாவும் இதுவரை மறைக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, எவரிடம்,எத்தனை கோடி மக்கள் சொத்துக்கள் முடங்கின,இறுதி வன்னி யுத்தக்கட்டத்தில் என்ன-எப்படி நிகழ்ந்தனவென்பதெல்லாம் இதுவரை எவருக்குமே தெரியாது.புலிப்பினாமிகள் அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு,மக்கள் சொத்தைத் தமதாக்கித் தலைமறைவாகி விட்டனர்.இத்தோடு ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போது இலங்கையின் அரச வடிவத்தின்மீதான விசாரணைகள் வெளிப்படையாக மேலெழும் தருணங்கள் அதிகமானவை.ஆனால்,புலிகளது வரலாறு,அவர்களது உறவுகள்,தவறுகள்,விடுதலையைக் கருவறுத்த சர்வதேசத் தொடர்புகள்,செல்வம் குறித்தெல்லாம் எப்போதும் எந்தத் தடயமும் கிடைக்காது.இது,பாசிசத் தகவமைப்பின்றி வேறென்ன?-மாபியாக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இதிலிருந்து வேறுபாடுண்டா?

ஜனநாயகக் குறுக்கலது பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.புலிகள் ஏலவே ஜனநாயக விழுமியங்களை நசுக்கியபடித் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கிக் காயடித்த வரலாற்றிலிருந்து அவற்றைக் கற்றுணர்ந்த இலங்கை அரசானது புலிப் பாணியிலேயே இலங்கை மக்களை ஒடுக்கும்சட்டவாக்கத்தை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்தின்வழி கண்டடைகிறது.

சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்தியத் துணைக்கண்ட மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.

இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே தப்பானது.எனினும்,இன்றைய மகிந்தா குடும்பத்து ஆட்சியின் பரிணாமமானது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவைவிட அதிகாரத்தில் இருத்திவைக்கப்பட்ட அந்த வர்க்கத்தின் ஆட்சி-கட்சி,கட்சித் தலைமையின் அதீத சுயநலப் போக்குகளுக்கும் இசைந்தபோவதான நலன்களை வெளிப்படுத்துகிறது.இதனால்,இலங்கையின் ஆளும்வர்க்கத்துக்கு நிகராக அதிகாரத்திலுள்ள தலைவனின் நலன்களும் மேலெளும்போது இரட்டிப்பான ஒடுக்குமுறைச் சூழலொன்று வன்முறை ஜந்திரத்துக்குள் எந்த விழுமியத்தையும் கோரிக்கொள்ள முடியாது.

தேசங்கடந்த நிதிமூலதனமானது, இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.என்றபோதும்,இலங்கை அரச வடிவத்துள் நிலைமைகளுக்கொப்ப மாற்றங்கள் நிகழ்ந்து வெளிப்படையான அரசியலைக் கோரக்கூடிய சூழல்கள் நெருங்கி வரமுடியும்.

ஆனால்,அந்த வெளிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை இன்றைய புலம் பெயர் மக்கள் மத்தியில் செயல்படும் புலிப் பினாமிகளிடம் கோர முடியாது.அவர்கள் வெளிப்படையான பிரபாகரனது மரணத்தையே மறைக்கும்போது,திரை மறைவில் நிகழ்த அரசியல் சதுரங்கத்தை-உறவை,அடியாட் தனத்தையெல்லாம் விபரிப்பார்களா?ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இத்தகைய பண்புகளை இனம் காணமுடியாதென்பதற்குப் புலிகள் அமைப்பே உதாரணமாக இருக்கிறது.புலிகள்ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனாற்றாம், இலங்கை அரச வடிவம்,அதன் ஜனநாயகப் பண்புகளிலிருந்து எதையுமே செரிக்காத சர்வதிகாரத்தன்மையை இலங்கைக்கே பாடமாகக் கற்பித்தவர்கள்.இதன் தாக்கத்திலிருந்து இலங்கைக் கட்சியாதிக்கம் விடுதலை பெறுவதற்கு நீண்ட காலமெடுக் குமாயினும்,அஃது, எப்படியும் மாறிய தீரவேண்டிய பொருளாதார நகர்வுகள் இலங்கையில் முகிழ்ப்பதானது இலங்கை மக்களது குடிசார் அமைப்புகளது மீள் வரவுக்கு ஏதுவாகவே இருக்கிறது.

இந்தவகையில்,புலிகள் அமைப்பு என்பது தமிழ்பேசும் மக்களது தொங்குசதை பிண்டங்களே.அதை அறுத்து எறியும் சத்திரச் சிகிச்சை செய்யவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களது கடமைதாம். அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.இதிலிருந்துதாம் புலிகளது பயங்கரவாதச் சேட்டைகளையும்,பண மோசடிகளையும்,கொலையையும்,கொள்ளைகளையும் தடுக்க முடியும்.அவர்கள் பேசும் போலித் "தமிழர் தாயகம்" எனும் வியாபார விளம்பரத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல.ஏனெனில்,புலிகள் பயங்கரவாத அமைப்பென்பது இன்றைய வரலாறக நிற்பதே நிசமான அரசியலது வெளிப்படை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2011

Thursday, October 20, 2011

கடாபி : சர்வதிகாரி !

கடாபி : சர்வதிகாரி

லிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்"கவுன்சில்"தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன.அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன.

நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen]கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார்.

இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறடிக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச பரபாலனத்துக்கு இசைந்தவை.இத்தகைய காலத்திருந்து இன்றைய இலிபியாவரையும் இந்த மண் அந்நியப் படையெடுப்பு-காலனித்துவத்துக்கு உட்பட்டிருக்கிறது.கார்த்தாக்கோ[Karthagos](இன்றைய இருனிசியா)அரச ஆதிக்கத்துக்கு (கி.மு.6 ஆம் நூற்றாண்டு) உட்பட்டபோது, அதன் தலைவிதியை ரோம இராச்சியம் விழுங்குவது நிர்ணயமானது.கி.பி.395 வரையில் ரோமிய இராச்சியத்துக்குள் வீழ்ந்துவிட்ட வட ஆபிரிக்க வலையமானது தனது முழு ஆளுமையையும் இன்றுவரை மீளப் பெறமுடியாமலே போய்விட்டது.


நவ காலத்தில் தேசங்கள் உருவாகி,சுயாதீனமுடையவைகளெனப் பீத்திக்கொண்ட"தேசிய அரசு"வடிவமானது மாற்று இனங்களை ஒட்ட மொட்டையடித்தபோது அவை காலனித்துவம் என அழைக்கப்பட்டது.1934 ஆம் ஆண்டில் இந்த இலிபியா இத்தாலிய இலிபியாவென இத்தாலிய ஏகாதிபத்தியத்தால் அழைக்கப்பட்டது. இப்போது இஃது "நேட்டோ இலிபியாவாக" மாறிவிட்டதை நான் உணர்கிறேன்.

மன்னன் செனுசி ஐடிறிஸ்[ Senussi, Idris I.] கீழ்-1951 வாக்கில், பேருக்குச் சுதந்திர இலிபியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த இலிபியா 1959 இல் எண்ணை வளக் கண்டுபிடிப்புகளால் மேற்குலகத்தின் பிடிக்குள் முழுமையாகவே கொணரப் பல கெடுபிடிக்குள் வீழ்ந்தது. என்றபோதும், 1.செப்டெம்பர் 1969 ஆம் ஆண்டு இலிபியா, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவேண்டிய "புரட்சியின்" விளைவு, மன்னன் ஐடிறிஸ்,அவன் மனைவி பாத்திமாவையும் [Fatima ]கூட்டிக்கொண்டு கைரோவோக்கு[ Kairo] புகலிடம் புகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.அதை செய்த "புரட்சிகர தளபதி" மௌமார் அல் கடாபி என்பது இன்று என் சிந்தையில் நிழலாக விரிகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு,இராணுவ-எண்ணை விற்பனை உறவுகளென [ vom 1975 schloss Libyen ein Abkommen über wirtschaftlich-technische und militärische Zusammenarbeit mit der UdSSR]இருஸ்சியாவோடு கூட்டுறவு வளர்ந்த 1975 ஆம் வருடக் காலப்பகுதியில் இருஸ்சியா இலிபியாவின் சுயாதீனத்துக்கு ஓரளவு உடந்தையாகவே இருந்திருக்கிறது.

இன்றைய இருஸ்சியாவானது சோசலிசத்தகர்வுக்குப் பின்பான முதலாளியத் தேசிமாகியபின் பலவகைகளில் இலிபியாவைக் கைவிட்டது.அதன் காரணங்கள் பல.குறிப்பாக,இருஸ்சியாவானது மேற்குலகத் தேசங்களுக்குத் தனது சொந்த எண்ணை-எரிவாயு வியாபாரத்தில் அதிக இலாபமும்,முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால் கடாபியைக் கைவிடவேண்டுமென்று ஜேர்மனியும் வற்புறுத்தியது.இதற்காக ஜேர்மனிய அரசு, இருஸ்சியாவுக்குக் கொடுத்த வெகுமதி "நோர்த் ஸ்றீம்"எரிவாயுக் குழாய்[ Nord-Stream-Pipeline] ஒப்பந்தம்.

இந்தக் குழாய்த் திட்டமானது, எரிவாயுவுக்காக ஜேர்மனிய மக்கள் இருஸ்சியாவில் தங்கி இருப்பதைச் சாத்தியமாக்கி விட்டது.

கஸ்பியின்வலய எண்ணை வளமானது இருஸ்யாவிடமே இருக்கிறது.இதைக் கைப்பற்றும் மகா சதுரங்க ஆட்டத்தை அமெரிக்கா ஜோர்சியா மூலம் ஒக்டோபர் 2008 இல்செய்து பார்த்து(ஜோர்ச்சிய-இருஸ்சிய யுத்தம்) மூக்கு உடைந்துபோனதைத் தற்காலிகமாகத் தேற்றிக்கொள்ளவே இலியாவைப் பலியெடுக்க, ஜேர்மனிய அரசுமூலம் இருஸ்சியாவைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இலிபியாவின் கூட்டணி-நட்பு நாடுகளாகவும்,எண்ணை வள உற்பதி-ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்த சீன,இருஸ்சிய அரசுகள் தமது சங்காய் ஒப்பந்தக் கூட்டணியையே [Shanghai Cooperation Organisation] ஒரு வியாபாரக் கூட்டணியாக மாற்றிக்கொண்டுள்ளது.

கடாபியை நோட்டோ அணி படுகொலை செய்துவிட்டதானது,கடந்த நாற்பது ஆண்டுகால மேற்குலகத்தின் வட ஆபிரிக்கா மீதான ஆதிக்க ஊசாலாட்டத்துக்குக் கிடைத்த பலமான வெற்றிதாம்.



கடாபியை நரபலி செய்ததன்மூலம், இனி ஸ்த்திரமான ஆதிக்கத்தை வட ஆபிரிக்காவில் மேற்குலகஞ் செலுத்த முடியும்.கடாபி இல்லாத இலிபியாவானது கி.மு.700 ஆண்டளவில் ஏகிப்திய சாம்பிராஜ்யத்தினது வல்லாதிகத்துக்கு உட்பட்ட மண்ணைப்போன்றே இருக்கும்.

1977 மட்டில் கடாபியால் உருவாக்கப்பட்ட சோசலிச அரேபிய மக்கள் குடியரசு இன்று சர்வதிகாரத்துக்குள் கிடந்த இலிபியாவாக மேற்குலகங்களால் சொல்லப்படினும்,இலிபியாவானது கடாபியால் சிறந்தே இருந்தது.

தேசத்தின் சொத்தாக எண்ணை வளம்,6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி ,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் குறைவாகச் சம்பளம் கொடுப்பது தடுக்கும் சட்டம் கொணரப்பட்டதும்,இலிபியாவிலிருந்து வட-தென் சூடான்வரை சென்ற நீர் பாசனத் திட்டத்துக்கெல்லாம் [ Great-Man-Made-River-Projekt ]படுகொலை செய்யப்பட்ட கடாபியே ஸ்த்தாபகர்.

மேற்குலகஞ் சொல்லும் "சர்வதிகாரி" என்பது, மேற்குலகத்துக்கும்,தமிழ்ச் சூழலில் புலிப் பயங்கரவாதிகளுக்குமே பொருந்தும்.

மக்களது உரிமை,சுதந்திரம்,ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எங்ஙனஞ் சிதைக்கப்பட முடியுமென்பதற்கு இன்னும் எத்தனை தேசங்கள் சூறையாடபபட்டு வராலாற்றில் உதாரணமானாலும் புலிவால்களுக்கு இந்த சூத்திரம் புரியவே புரியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2011

Tuesday, October 18, 2011

நடுகல்: பிரபாகரன்!

தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பம் !


புலிகளது தலைவர் வே.பிரபாகரனை இந்த [27.11.2011] மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் தரிசிக்கமுடியும்!


" சுழன்றடிக்கும் சூறாவளியாக,
குமுறும் எரிமலையாக,
ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக
ஓயாது வீசும் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கைகளில் விடுதலைப் புயல் வீசியபடி மையம்கொண்டு நிற்கிறது. "


இங்கே, தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பமும் உருப்பெறுகிறது...

னித சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.


தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?; மாவீரர் பட்டியலுள் இருந்து இருந்து வெளிவருவதாக...

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி : பிரபாகரன் மாவீரர் பட்டியலுள் இருந்து வெளிவருவதாக.

ப.வி.ஸ்ரீரங்கன்

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...