Tuesday, August 16, 2011

"கம்யூனிசப் பொறுக்கிகள்"

புதிய ஜனநாயக மார்க்சிய-லெனியக் கட்சியினது அஜந்தாவை இனியொரு தளம் மீளப் பிரசுரித்தது.அதுள், எனது கருத்துக்களைக் கூறியதிலிருந்து பிடுங்கி எனும் வாசகரது கருத்துக்கள் மேலும் மனித சமூகத்தைக் குறித்த பால்யப் பாடத்தைப் புகட்டுவதான தோரணையில் எழும்போது,அதையிட்டுச் சிலவற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் கூறியாக வேண்டும்.நாம்,மனிதர்கள் கடந்த பாதைகளை நிலவுகின்ற வாழ் நிலைகளிலிருந்து புரியாது வேடிக்கைத் தனமாகப் புரிவது ஒருவகை அபத்தம்.

தமிழுக்கு மேலும் வலிமை சேர்க்கும் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை"கூட இன்றைய வாசகர்களுக்குத் துணையில்லாது போய்விட்டபோது,நமது வாசிப்பு-கற்கையின் நிலைமை புரிகிறது. இது குறித்துச் சில குறிப்புகளை எழுவதென்பது கருத்து முதல்வாத்தின்மீதான பொருள்முதல்வாதப் பாச்சிலென்பதில்லை! " சமூக வாழ்வே சமூகவுணர்வைத் தீர்மானிப்பதென்ற உண்மையை" உரைத்துப் பாருங்களேன் என்ற அறை கூவலாக...


"பிரச்சனையின் உண்மையான தீர்விலிருந்து தானும் விலகி,மற்றவர்களையும் வேறு திசையில் இட்டுச் செல்வதன் மூலமாகக் கருத்துமுதல்வாதம்,இச் சுரண்டல் அமைப்புத் தொடர்ந்து நிலைபெற உதவுகிறது"


பிடுங்கி,கருத்தாடவதுதெனும் தோரணையில் நீங்கள் கட்டும் அனைத்துக் கருத்தும் "விடுதலைபெற வேண்டிய வர்க்கத்துக்குத் தேவ தூதனை அழைக்கும் மதத் தூய்மை வாதிகளைத் தேடுவது " போலத்தாம் இதுவும்.

ஏதோ கம்யூனிஸ்டென்பவர்கள் வானத்திலிருந்து பிறந்தவர்கள் போலவும்,அவர்கள் இந்த முதலாளிச் சமூகத்தின் கெடுதியான பகுதிகளை உள்வாங்காதவர்களெனும் போக்கில் உரையாட முடியாது.

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.

சூதும் வாதும்,தவறும்-தப்பும்,எமக்குள்ளே முகிழ்த்திருப்பினும் அவையே இந்தச் சமூகத்தின் வாழ்நிலையாக இருக்கும்போது இதற்கு வெளியில் எந்த உணர்வும் நிலைக்க-முகிழ்க்க முடியாது.


சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதென்பது 5000 ஆண்டுகால இதுவரையான சமூகத்தைப் புரட்டிப் போடுவதென்ற முறையில் அதுள் பலவிதப் போக்குகள் நிலவும்.எதிரி வர்க்கமானது சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்க்கும் வர்க்கமெனக் கருதிக்கொண்டும்,அதுள் இடதுசாரிகள் தமது சூதுவாதுகளால் சமூகத்துக்கு நன்மை செய்வதென்ற தோரணையில் தமது நலன்களைப் பார்ப்பதாகவும் அழுவதில் வரலாற்றுப் பொருள்முதல்வாத அறிவைக் காணவில்லை!

தினமும் பொழுதும் எதிரி வர்க்கமானது உழைக்கும் மனிதர்களைப் பல கோணத்தில் வேட்டையாடும்போது,இதுள் எத்தனையோ இடதுசாரிக் கொம்பர்கள் காணாமற்போயுள்ளனர்.எனினும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் வர்கத்தின் விடுதலையை அந்த வர்க்கஞ் சாதிப்பதற்கான அனைத்து முகிழ்ப்பையும் ஆளும் வர்க்கஞ் சிதைத்தே வருகிறது.

இராகுல சாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை"படித்துப் புரிந்துகொண்ட நீங்கள் இப்படி உரையாடுவது வியப்பாக இருக்கிறது.

ஆரம்பக் கதையான நிஷாவிலிருந்து திவாச் சமூகம் உருவாகுவதற்குள்ளேயே தாய் நிஷா தனது மகள் லேக்காவை வால்க்கா நதியில் கொல்லும் வரலாற்றைப் புரியாதுபோனதாற்றாம் நீங்கள் எல்லோரும் பெரிய"தூய்மை"வாதிகளாக்கப் புரட்டு விடுகிறீர்கள்.முதலாவதாக மனித சமூகத்தை அதன் வில்லங்கமான அனைத்துப் பக்கங்களுடனும் கற்றுவிட்டுக் கருத்தாடலாம். இதைவிட்டு முட்டுச் சந்தி விமர்சனத்தைக் குறித்து அதற்குப் பதிலெழுதுவதை நான் விரும்பவே இல்லை.

இந்த அறிக்கைமீது சரியான விவாதங்களை வரலாற்றுப் பொருள்முதல்வாதப் புரிவுடன் வைக்க முடியாத வாசகர்களையிட்டு நான் மனம் வருந்தவே இல்லை.

இவர்களிடமிருந்து கற்பதும்,கற்றதை மீள மக்கள் மத்தியில் வெளிப்படுத்துவதெனும் சிறிய புரிதலுடன்தாம் இங்கே எழுதுகிறோம்.

இன்றைய சமூதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்தின் மேற் கட்டுமானுத்துக்கு அன்றைய பிரவாஹானின் பிர்மவாதம்(இன்றைய மரூவு: பிரமம்-உபநிஷதத்தின் மூலம்) அதிக மாகக் கேள்வி கேட்டால் தலை வெடிக்குமென கார்க்கிப் பெண்ணுக்கு மட்டும் சொல்லவில்லை.அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலப் புலிகள்வரை(நம்ம புலியைக் கருது வேண்டாம்) இதே கதைத்தாம்.

இங்கே,போகத்துக்கும்-சூதுக்கும்,சதிக்கும் அனைத்துமே உட்பட்டுக் கிடக்கிறது.இதைவிட்டு-அகற்றிப் புரட்சிகரமாக அணி திரள்வதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

என்றபோதும், சரியானதைத் தேடவும்-கதைக்கவும்,அதன்வழியில் தொழிலாள வர்க்கம் தன்னைப் புனரமைக்கவும் காலம்தாம் தீர்மானிக்கும்.அதுவரையும் புரட்சிகரக் கட்சியை நோக்கி முகிழ்ப்புகள் எல்லோர் வடிவிலும் எழும்.அதைச் சேறடிப்பதில் பிடுங்கி,இடுக்கி-மடக்கி வடிவிலும் உருவாகும்.இதையெல்லாம் சொல்வதென்பது கம்யூனிஸ்டுக்கள் "புனையப்பட்ட பூடகம்"இல்லை என்பதற்கே!
மீளவும் ஒருக்கால்,"வால்க்காவிலிருந்து கங்கைவரை"யையும் படியுங்கோ.இதைவிட வேறு மருந்து உங்கட்குத் தேவையில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
16.08.2011

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...