Friday, April 29, 2011

ஐ.நா. அறிக்கையைவிட...

ஐ.நா. அறிக்கையைவிட
இக் கேள்களுக்கு விடையே முக்கியமானது.



முள்ளி வாய்க்காலது பாடத்துக்கு முன்பிருந்தே (இதுவரையான) நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன?


சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இவை கேள்கள் மட்டுமல்ல.வரலாற்று முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான தேடுதலுமாகிறது! ஐ.நா.அறிக்கைக்குப் பின்பான தமிழ்ச் சிந்தனை முறையானது மீளத் திட்டித்தீர்ப்பதிலும்,ஒருவரையொருவர் தாக்குவதிலும் காலத்தைக் கடத்திட முடியாது.புலிகளது இயக்கவாதக் கருத்தியலை மீளத் தகவமைக்கும் "புரட்சி"க்காரர்களிடையே நிலவுகின்ற இனஞ்சார் குறுகிய அரசியற் பார்வைகளை இனிமேலும் விருத்தியாக்கி மக்களைக் குறித்து அரசியல் செய்வது இயலாது காரியமெனும் ஆரம்பப் புரிதல்கூட விசும்பு நிலையிலேகூட புலம் பெயர் தளத்தில உருவாக முடியாது கருகிவிடுகிறது-இஃது,ஆபத்தானது!


நமது "தேசிய"விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இன்றும் இருந்தே வருகிறது.இஃது, நம்மை அந்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தியும், நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டியும், நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டிருந்தது.இந்தச் சூழலுக்கு அடிநாதமான போராட்டத் தளத்தையும் கருத்தியற்றளத்தையும் போட்டுக் கொடுத்தவர்கள் எந்தெந்து இரூபத்தில் இப்போதும் நமது மக்களுக்குள் இருக்கின்றார்கள்-இறந்தார்கள் என்பதைத் துல்லியமாகப் புரிந்தாலேயொழிய மறுவாழ்வு, தமிழ் மக்களது உரிமைசார் கோரிக்கைகளுக்கு இனிமெற்கொண்டிருக்க முடியாது.


இன்றைய புலம்பெயர் தமிழ் குழுமத்திடம் நிலவும் பாரிய பலவீனமானது இவர்களது பார்வையின் மையப் புரிதலைக்கொண்டே அளவிடக்கூடியதாகவும் இருக்கிறது. ஐ.நா. அறிக்கையிலிருந்து மீளத் தொடரும் "பட்டாசு கொளுத்தும் மனோபாவம்" ஆசிய மூலதனத்துக்கு இசைவாக நகரும் இலங்கையினது அரசியலைப் புரிவதிலும்,காலந் தாழ்த்திய வியூகச் சிக்கலைக்கொணருகிறது.


நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்கவாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தத் தமிழ் உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாதிருக்கிறது!புலிகள் குறித்த சரியான புரிதலும்,அவர்களது போராட்டத்தின் திசைவழியில் தமிழ் மக்கள் இன்று படும் வரலாறறியா வேதனைக்கும் சரியான ஆய்வுகள் எதையும் எவரும் இதுவரை முன்வைக்கவில்லை!


முன் வைக்கத் தக்க தகமையோடு முன்னெழும் எழுத்துக்களும் இலங்கை அரசினது எல்லைக்குட்பட்ட வியூகங்களுக்கிசைவாகச் சரிகின்றன.அது,நாடுகடந்த அரசினது பொறிமுறைமைகளானலுஞ்சரி அல்லது மிதவாதத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினது "கோரிக்கைகள்"ஆனாலுஞ்சரி, இவைகளுக்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்த சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு ஐ.நா. அறிக்கைமீது நம்பிக்கிடக்கும் கனவோ மேற்குலக அரசுகளது பித்தலாட்டத்துக்கு நேரடியாக மொழியாக்கஞ்செய்யும்"தமிழ் மக்களுக்கு நியாயம்" கேட்பது,என்பதை எப்படித்தாம் புரிய வைப்பது?


ஈராக்,அவ்கான்,லிபியா கண்முன்ன தொடரும் மேற்குலகப் பயங்கரவாத யுத்தங்கள் கொட்டிச் சிந்தும் குருதியும்,உடலங்களும் நமக்கு "நியாயம்"கேட்கும் நிலைமைகளுக்கு ஏதுவாக இருக்கின்றதா?


தமிழ் மக்களது உரிமைகள்-நியாயங்கள் ஐ.நா.வுக்குள்ளோ அல்லது பாராளுமன்றங்களுக்குள்ளோ இல்லை என்பதை மேற்குத் தேசங்களால் உதைபடும் குர்தீஸ் மக்கள்-பாலஸ்த்தீன மக்களது பாடத்திலிருந்து பெற முடியாதோ? பலம்பெற்று,நிலைபெறும்எதிர்ப்புப் போராட்டங்களது திசைவழியில் அந்த மக்களோடும்-போராட்டங்களோடும் தோழமை பேணிச் சென்று "நியாயம்"கோரவேண்டிய நாமோ, நடுத்தெருவில் ஐ.நா. அறிக்கை வாசித்து வருவதில் திருப்பதி அடைகிறோம்.


குறைந்த பட்சமாவது நாம் மேற்கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் கண்டாக வேண்டும்.


அதாவது,


1: நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணிகள் என்ன?


2: சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??


3: இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது???


இந்தக் கேள்விகளுக்குச் சரியான முறைகளில் விடை தேடாதவரை நாம் இழந்த இரண்டு இலட்சம் மக்களதும் உயிருக்கும் எந்த மரியாதையுஞ் செய்யத் தகமையற்றவர்கள்நாம்.அவர்களது அழிவுக்கு இலங்கை அரசே காரணமென்பதைக்கூடச் சொல்ல முடியாதளவுக்கு நமது நியாயங்கள் வலுவிழந்தே கிடக்க முடியும்.இந்தப் புள்ளிற்றாம் கீரன்களோ அல்லது எந்த வீரன்களோ இலங்கை அரசுக்கு புதிய ஜனநாயக வரைவிலக்கணஞ் சொல்ல முடிகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.11

Saturday, April 09, 2011

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

[Ich will dein Vater sein und kein Prophet.]


"எவரொருவர் புரிவதற்கு முனைகிறாரோ
அப்போது, அதைப்பற்றிப் புரிந்துகொள்வது முடியாதுபோகிறது!"


"Wer zu verstehen beginnt, versteht nichts mehr."-Erich Kaestner.

எரிக் ஹெஸ்னர்! ஜேர்மனியக் கவிஞன்-போர் எதிர்ப்பாளன்.நாசிகளால் தனிமைப்படுத்தப்பட்டு,அவனது நூல்களையும் பாசிசம்கொளுத்தும்போது உலக மனிதனாக உருப்பெற்றவன்.அவன் குறித்தும்,அவனது கவிதாவுலகு குறித்தும் தொடராக எழுதுவதைத் தவமெனக்கொண்டு தொடராக எழுதுகிறேன்.எனக்கிருக்கும் அருகிய நேரத்துள் தமிழக்கு எரிக் ஹெஸ்னரைக் கொணர்வதென அவாக்கொண்டேன்!

தூங்க முடியவில்லை!தூக்கந் தொலைந்த பொழுதுகளாக எனக்கு முன் காலம் பொழுதுகளாக மலரும் தினமொரு விடியலில் நான் தவிக்கிறேன்-தொலைகிறேன்.எல்லாம் எத்தனை விடிவுகளில் கருக் குலையும் செயல்வினைமிக்க ஊக்கத்தோடு என்னைவிட்டபாடில்லாது வந்து குந்திக்கொள்ளும் குந்துக்கட்டாய் எனது அகம். எனக்கிருப்பது காலம் ஒன்றுதாம்.தனிமைப்படுத்தப்பட்ட மனிதன்!

ஒருவிடியலில் தனது முழு எழுத்தையும் நெருப்பிட்டுக்கொளுத்திய கிட்லரது அடாவடித்தனத்துள் தன் தேசத்தைவிட்டும் பிரியமுடியாத ஏக்கத்தின் வினையில் சுவிற்ஸெர்லாந்திலிருந்த தனது சக எழுத்தாள-புத்திஜீகளையெல்லாம் விட்டுத் தேசம் திரும்பும்போது,

„Ich bin ein Deutscher aus Dresden in Sachsen.
Mich läßt die Heimat nicht fort.
Ich bin wie ein Baum, der – in Deutschland gewachsen –
wenn’s sein muss, in Deutschland verdorrt.“

"நான்டொச்சு மொழியானவன்,
சக்ஸ்சன் மாநிலத்து டெறஸ்டன் நகரத்தவன்
என் தேசம் என்னைக் கைவிடுவதாகவில்லை.
நான் ஒரு விருட்ஷத்தைப் போன்றவன்.அது, ஜேர்மனியில் வளர்ந்தது.
அஃது உண்மையானால்,ஜேர்மனியல் பட்டுவிடப் போகிறது."



முதலாவதும்,இரண்டாவதும் மகா யுத்தத்தைப் பார்த்திருக்கிறான்.முதலாவது உலகப்போருள் இராணுவவீரானகப் பயிறுவிக்கப்பட்டும்,இரண்டாவது உலக யுத்தத்துள் மனிதங்கொண்ட உலகப் படைப்பாளியுமாக...

தேசம் தொலைத்து நீண்ட தூரம் போனவர்கள் நாம்!யுத்தம்,ஆட்கடத்தல்-கொலை,இனவாதத் தூண்டுதல்கள் எங்கேயும் நிலவுகிறதா?கருத்துக்களை எதிர்கொள்ளுதலென்பதைவிட உண்மைகளைப் பேசுவதால் உயிர் பறிப்பானது தொடர் நிகழ்வாகியது எங்கேயும்தாம்.எந்தத் திசையிலும் பாசிசம் முனைப்புறமுடியும்.பாசிசமானது படைப்பு நிலையை முறியடித்துவிடமுடிவதில்லை என்பதற்கு நாம் ஜேர்மனியப் படைப்பாளிகள் பலரிடமிருந்து கற்க முடியும்.

"Ich möchte endlich einen Jungen haben,
so klug und stark wie Kinder heute sind.
Nur etwas fehlt mir noch zu diesem Knaben.
Mir fehlt nur noch die Mutter zu dem Kind."

"எனக்கென ஒரு பையன் வேண்டும்,
இன்றைய குழந்தைகளைப்போல்
புத்திமானாகவும்,பலவானாகவும்!
இந்தப் பையனுக்காக என்னிடம் ஒரு குறைமட்டுமே இருக்க முடியும்.
இந்தப் பையனுக்கான தாய் என்னிடமில்லை."


பெண்ணின்றி மறுவுற்பத்தி இல்லை!பேசும் சங்கதிகள்,ஆசைப்படும் கருப் பொருளாக வெளிப்படினும் அததற்கான இருப்பு மறுக்கப்படும் உலகில் எதற்காவும் ஆசைப்படுதல்-கனவு காண்தலே சாத்தியமாகிறது.


எரிக் ஹெஸ்னர் மிகுந்த நெறிகளுக்குள் சீவித்தவர்.அவரது வாழ்நிலையில் இந்த நெறி பிறழ்தலை அவர் எப்போதுமே மீறிட முடியாது சிக்கல்பட்டார்.உலகம் அப்படியில்லாதபோது தனிமைப்பட்டார்-தனிமைப்படுத்தப்பட்டார்.ஒரு பொழுதேனும் தயக்கமின்றி மனிதப் பொதுத் தன்மைக்கு அப்பால் வாழ்ந்திருந்தார்.அவர் உலக மனிதராகவும்,தேசப் புதல்வனாகவும்,குழந்தைப் பிரியனாகவும்,யுத்த எதிர்ப்பாளனாகவும் அவர் மலர்ந்தே மறைந்திருப்பதை அவரது அழியாக் கவிதைகள் இன்றும் பறைசாற்றுகிறது.


"Schlaf ein, mein Kind! Sei still! Schlaf ein!
Man kann nichts Klügres machen.
Ich bin so groß. Du bist so klein.
Wer schlafen kann, darf glücklich sein.
Wer schlafen darf, kann lachen."




"தூங்கு மகனே,தூங்கு.அமைதியாய்,ஆழ்ந்து தூங்கு!
எவரையும்,எவரும் புத்தியாளர்களாக்க வேண்டியதில்லை.
நானோ பெரியவன்,நீயோ சிறியவன்.
எவரால் ஆழ்ந்து தூங்க முடிகிறதோ,அவரே மகிழ்வாய் இருக்கமுடியும்.
எவரால் ஆழ்ந்து உறக்கங் கொள்ள இயலுமோ,அவர் சிரித்திருக்க இயலுமாகும்!"


தொடரும்....

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.04.11

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...