Thursday, February 17, 2011

அன்பன் சோபாசக்தி

ஷோபா சக்தி: பாலியில் நிந்தனைச் சொல்லைலையே அநுமதியான்-செயலை அல்ல!



"உஙகளுடைய பின்னூட்டத்தை மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பெயரின் பின்னூட்டுகளை நான் மட்டுறுத்தியுள்ளேன். வெறும் வசைகளை நான் பின்னூட்டமாகக் கருதுவதில்லை. சற்று முன்கூட எனது 15 வருடகால நண்...பர் சிறீரங்கன் அண்ணன் பாலியல் நிந்தனைச் சொல் ஒன்றுடன் எனது முகப் புத்தகத்தில் ஒரு பின்னூட்டமிட்டார். பின்னூட்டத்தை மட்டுமல்ல அவரையும் முகப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அவர் தனது ஆணாதிக்க வசைகளை எழுதுவதற்கு எனது முகப்புத்தகம் இடம் கொடுக்காது. அதுவே உங்களுக்கும்"
-சோபாசக்தி


மேலேயுள்ள பின்னூட்டை அன்பன் சோபாசக்தி எழுதியுள்ளான்.ரொம்பவும்"நேர்மையான"ஜனநாயகவாதி அவர்,"பாலியல் நிந்தனைச் சொல்லை-ஆணாதிக்க வசைவுகளை" அவர் ஒருபோதும் தனது முகப் புத்தகத்தில் அனுமதிக்கமாட்டாராம்!



ஏனெனில்,



அவை பெண்ணொடுக்குமுறையின் வடிவங்கள்,பண்டுதொட்டுப் பெண்ணைப் பாலியற் சுரண்டலுக்கும்,அவமதிப்பும்,அடக்குதலுக்கும் உட்படுத்தும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் சொற்கள்-கருத்தியற் பலாத்தகாரம் அவை!வார்த்தைகளுக்குள் கண்டுண்டிருக்கும் இத்தகைய சமூகவொடுக்குமுறை உளவியலானது ஆ(ணி)ணாதி(தா)க்கத்தின் அதிகாரபூர்வமான ஒடுக்குமுறையின் எதேச்சதிகாரமானதும்,அரூபமானதுமான விலங்கு, இந்தப் பாலியல் நிந்தனைச் சொல்.



நிச்சியமாக?



உண்மையாகச் சோபாசக்தி?



அடடா,இந்த ஸ்ரீரங்கனுக்குப் பழையதொடர் இன்னும் விட்டுத்தொலைக்கவில்லைதாம்.சுட்டிக் காட்டிய என் தோழனே,துரும்பைவிட்டு நாசியிற் தும்முவதைப் பார்த்திருப்பாய்தானே? அந்தத் தும்மலுக்குள் எத்தனை மில்லியன்கள் கிருமிகள் வெளிறேம் தெரியுமோ?அப்படித்தான் உங்கள் கிருமித்தனமான செயற்களும் வெளியேறுகிறது.



பாலியல் நிந்தனைச்சொல்லுக்கும்-செயலுக்கும் என்ன வித்தியாசம்?



கூறுங்கள் கண்ணா!



முகப்புத்தகத்திலேயே பாலியல் நிந்தனைச் சொல்லை அநுமதிக்காத நீங்கள்பாலியல் நிந்தனையை-செயலை மற்ற மனிதர்கள்மீது ஏவும்போது, அதை அவர்கள் அனுமதித்தும்-அவதிப்பட்டும் இருக்கும்போது,அதைப் பொதுவெளியில் புகட்டிய செம்மலே சோர்ந்தா போகும் உன் நட்பு(ஆண்குறியெனக் கற்பனை பண்ணப்படாது)?



உடல்சார் உறவென்பது எதுவரை உறவாகவும்-உபத்திரமாகவும்,பாலியற்பலாத்தகாரமாகவும் இருக்கும் என்பதை தத்துவங்கள் ஏதும் எனக்குத் தெரியவில்லை-உரைக்கவில்லையோ?அப்படியான தத்துவங்களை அருமைத்"தோழர்"உமா சானிகாவிடமாவது கேட்டுப் புரியலாந்தாம்...


மூன்றாவது சந்திப்பில் படுகைக்குத் தயாராகும்,பெண்விடுதலைப் புரிதலானது மிக நேர்த்தியானதெனக்கொள்வதில் அவரவர் சுதந்திரமென்பதும்,பாலியற்றேவைக்காகப் படம்போடும் பிழைப்பில் மனம்சார் உறவும்,உடல்சார்வுறவும்(கவனிக்க: இங்கே, ஓழுக்கு என பாலியல் நிந்தனையைப் பயன்படுத்தவில்லை-உடல்சார் உறவு-அதுவே சரியானது!) இணைக்கப்படும் புள்ளிதாம் பாலியற் சுரண்டல் என்று சொல்லேன்!அப்படிச் சொன்னால், அது பெண்ணியத்தையும்,ஆணியத்தையும் எதிரெதிர் நிலையில் நிறுத்துவதைவிட்டு நட்பாக்கி மீளவும் ஒடுக்குமுறைக்குள் பெண்களைத் தள்ளிவிடும்.எனவே,பார்க்கும்-பழகும் பெண்களோடும்-ஆண்களோடும் நான் படுக்க(ச்சீ உடல்சார்வுறவுக்கு)த் தந்திரமாக-உள்நோக்கும் அகவிருப்பை அது கொச்சைப்படுத்திவிடும்.



ஓழ்த்தல் பாலியல் நிந்தனைச் சொல்!-சரி,ஏனெனில்,நான் ஊரிலேயே கூட்டுக் கலவியின் நாயகன்(இந்த நான்-நான் மட்டுமே!)ஆதலால், மிகவிரைவாகப் புரிந்துபோச்சு-"சொல் நிந்தனை-செயல் தோழமை"-அடஅட...)



குடும்பம்-கல்யாணம் ஒடுக்குமுறை நிறுவனம்!-இதுவுஞ்சரி.



ஆனால்,காணும்-பழகும் அனைவரையும் எனது கலவிவிருப்பு மனதுக்குக் கட்டிலுக்குக் கூப்பிடுவது-போவது மனிதநிலைக் கடன்.காலைக்கடன்கள்போல் இதுவும் ஒன்றுதாம்.இது குறித்துப் பேசுவது தப்பு-செயல் முடிந்து,நான்"உடல்சார்"உறவுகொண்டேன் என்பது நிந்தனையல்ல-நேர்மையான நிகழ்வூக்கப் பெறுமானம்.ஏனெனில்,இது சம்பந்தப்பட்ட இருவரதும் "தனிப்பட்ட" சுதந்திரமல்லவா?



இங்கே,புனைவுக்கும்,அ-புனைவுக்கும் என்ன வித்தியாசமோ,அதுவே,பாலியல் நிந்தனைச் சொல்லுக்கும்-பாலியலுறவுச் செயலுக்கும்"உள்ள வித்தியாசம்.எனது பாலியல் பலாத்தகாரமெல்லாம் பாவாடை(பயில்)போட்டு மூடியபோது,சொல் மட்டுமே நிந்தனையாகவும்,செயல் வெறும் துய்ப்பாகவும்-அன்புப் பரிமாற்றமாகவம்,உடல்சார் அதியுன்னத தேவையாகவும், மாறிவிடுகிறது!



எனது பாலியற்றேவைக்காக நான் அணுகும் போக்கில்-தூண்டிலில் மாட்டியவர்களுக்கு மேற் சொன்னவையை விரிவாகப் பகுக்கத் தெரியும்-நிலவும் சமூகக் கட்டுள் ஏற்பது"ஒழுக்க"ப் பிறழ்வு-" பாலியற் சேட்டையை-சுரண்டலை"இருவரது சுதந்திரமெனக் கொண்டு மென்மைச் சுட்டலுடன் ஒழுகுவது(ஓழ்ப்பதல்ல) சமூகத்தில் அடையாள நெருக்கடியிலிருந்து விடுதலைபெறும் தற்காலிக நிவாரணி எனச் சொல்லேன்.அப்படிச் சொல்லும் உரிமை எனக்கில்லை-பெண்ணியம்சார்ந்து இயங்குபவர்கள்(முப்பாலரும்)தாம் அதைப் புலத்தில் வைத்துப் புரிய வைக்க வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்

17.02.2011

Saturday, February 12, 2011

இன்ஷா அல்லா !

"அடடா புரட்சி அடை மழைடா,
அது அரபுப் புரட்சி
அடை மழைடா!"


எகிப்த்திய,துனேசியப் போராட்டங்களும் தொடரப் போகும் அரபு உலக"எழிச்சிகளும்"புதிய வகைமாதிரியான ஆயுதம்.இது,அணுக்குண்டைவிட அதிக சக்தியானது.இந்த ஆயுதம் இப்போதும்,மேற்குலக ஆதிக்கத்தாலேயேதாம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன் பாட்டுக்கு வந்திருக்கிறது.


இந்தப் பயன்பாடும் அவர்களது நலன்களைக் காப்பதற்காகவே பயன்படுகிறது.எகிப்த்திய அதிபர்,எங்கேயும் ஓடித் "தப்பி"விடவும் இல்லை.எகிப்த்திலேயே சிறிய குட்டித் தேசமாக-அரசாக நிலவும் எகிப்திய உல்லாச-டிப்பிளோமற்றிக் நகரமான [ Diplomatic City _ Trade] சாமல் சைக்கில் [ Scharm El-Scheich ]மிகப் பாதுகாப்பாக முபராக் இருக்கிறார்.எகித்தியர்களோ,அல்லது எந்த அரபியர்களோ அங்கு செல்வதற்கு தகுந்த விசாவிருந்தாலும் முடியாத காரியம்.ஆனால்,நாம் விடுமுறைக்குப் போய்வரலாம்.இத்தகைய எகிப்த்தில் மக்கள் ஆரவாரம் முபராக்கைச் சுற்றிய எதிர்ப்பில் அவரது இராஜினாமா "மக்கள்"புரட்சியென வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் அதிபர்கள்,தலைவர்கள் தாம் பிழையானவர்கள்.நிலவும் அமைப்பு அல்ல என்பதையும் சொல்லியபடி, ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தப்படுகின்றன.


மக்களையும்,அவர்களது நலனையும் முடக்கியவர்கள்,வறுமையை-வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஆளும் அதிபர்கள்-கட்சிகளே செய்வதாகக் கருத்தியற் பரப்பைச் செய்தபடி,அதே அமைப்பைக் காப்பதென்பது எவ்வளவு புத்திசாலித்தனமானது.


மேற்குலகத்திடம் இருக்கும் இதுவரைகாலக் கொடும்-வன்மையான ஆயுதம் என்பதெது ? "கருதியலே" என்பதுதாம் எனது பதில்!



முபாராக் போனால் இன்னொரு எல்பாரடேய் வரலாம்.ஆனால்,அமைப்புச் சிதைந்தால் அதில் மக்கள் அதிகாரம் வந்துவிடும். இதை முன்கூட்டியே தீர்மானித்த அமெரிக்க-மேற்குலக ஏகாதிபத்தியங்கள் அரேபியச் சர்வதிகாரிகளை ஊட்டி வளர்த்தபடி நிலவும்அமைப்புக்கெதிரான மக்களது எதிர்ப்பை ஆளும் தலைமைக்கெதிராக வளர்த்தெடுத்தது.அதையே, இப்போது அறுவடைசெய்து, புதிய தரகர்களை நிலவும் அமைக்குள் புகுத்தி மக்களை மீளக் கட்டிப்போடும் புதிய வியூகங்களை நாம் சந்திக்கிறோம்.


அரபுலகப் போராட்டங்கள்,அவர்களது வளர்ச்சியடையாத சமூக நிலையை ஒட்டியே மேற்குலகத்தாற் தகவமைக்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தப் போராட்டமானது மக்களை ஏய்த்துப் பலியாக்கிப் புரட்சியெனப் பேசுவதில் முதன்மையானவர்கள் இன்றைய வெள்ளையினப் பிசாசு(வெள்ளையின ஏகாதிபத்திய அரசுகள்,அதன் ஆளும் வர்க்கம்)க் கூட்டமே.

பெரும்பாலும் இச் செய்தியே பரவலாகச் சரியானதாகவிருக்கும்.ஆனால்,அரபுலகத்துப் போராட்டங்கள் மக்களது தன்னெழிச்சியானதென ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்.


ஏலவே,"இப்போராட்டமானது ஐரோப்பிய-அமெரிக்கப் புதிய வியூகமெனவும்,கடந்த நூற்றாண்டுள் கணிசமாகக் கிடைக்கப் பெற்ற எண்ணை வருமானங்கள் அனைத்தும் அந்தத்தேசத்து மாபியாத் தலைமைகள்மூலம் வெளிநாட்டு(மேற்கு-அமெரிக்க)வங்கிகளில் பல ரில்லியன்கள் குவிந்திருப்பதும்,அதுவே பெற்றோ டொலரெனப் பரவலாகப் பேசப்படுவதும் ஒரு கொள்ளைக்கானது" எனக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்!


இதுவரையான எண்ணையை முழுமையாகக் கொள்ளையடிப்பதாக இந்த ஆட்சி மாற்றங்கள் காட்டி நிற்கிறது.



புதிய தலைமைகள் யாவும், நிலவும் அமைப்பை அங்ஙனமே இயங்க அநுமதித்துப் புதிய மேற்குலக எடுபிடிகள் இத்தேசங்களது ஆட்சிகளுக்கு வருகிறார்கள். இதுவொரு பழையபாணியுள் புதிய பரிசோதனை.


இவ்வளவு பெரிய தொகையாக மக்களைப் பயன்படுத்தி(இதற்கு முதல் நிலவும் ஆட்சியின் மூலம் மக்களுக்குத் தீராத ஒடுக்குமுறை வழங்கி-சமூகப் பதட்டைத்தையும்,கொந்தளிப்பையும் உருவாக்கியபடி புதிய பினாமிகளை உருவாக்குதல்) சதிப் புரட்சிகளை நடாத்தும் புதிய வியூகம் இது!


அரபுத் தேச மக்களது வாழ்வுப் போராட்டம் இப்படி உபயோகமாவது மேற்குலகத்தின் அடுத்த வடிவிலான ஆயுதம்.இந்த ஆயுதம் மிக வலிமையானதெனக் கடந்த 80 களின் மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் உணர்ந்த ஏகாதிபத்தியம் அதே, பாணியில் அரபு உலகத்துள் இதை மிகவும் தந்திரமாகச்(மண்ணுக்கேற்ற தந்திரம்) செய்து முடிகிறது.


இப்போராட்டம் ஈரன்வரை பாயும்.

அரேபிய மக்களது வளங்களைக் கொள்ளையடித்துச் சேர்க்கப்பட்ட அரேபிய மாப்பியாக்களது வெளிநாட்டு வைப்புகள்,சொத்துகள் பகற்கொள்ளையாக மேற்குலக அரசுகள்-நிறுவனங்கள் எடுத்துவிடும்.ஒரு கல்லில் பல மாங்காய்கள் பறிக்கப்படும்போது, இதைப் புரட்சியெனவும்,மக்கள்போராட்டமெனவும் மேற்குலக ஏகாதிபத்திய ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதில் எவருடைய நலன்கள் அறுவடையாகிறதென்பதை அனைவரும் உணரவில்லையா?


எல்லாவற்றையும் சிவப்புக்கு எதிராகவே செய்து முடிக்கும் ஏகாதிபத்தியம்,முதலாளியம் இருக்கும்வரை,நாமும் எல்லாவற்றையுமே அதிலிருந்து பிரித்தெடுத்து விளங்குவது கேனைத்தனமானது.எனவே,ஏகாதிபத்தியம் எப்படிப் புகுந்து விழையாடுகிறதென்பதைப்புரிந்தால்" புரட்சிகர முகமூடியும் ஏலவே இருக்கும் ஜனநாயக முகமூடியுடன் சிறந்த ஆயுதமாச்சு!" என்பதைத்தவிர அரபு உலகப் போராட்டங்களுக்கு வேறென்ன சிறப்பு இருக்க முடியும்?


ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல்: "இன்றைய தினமானது மகிழ்சியின் தினமாகும்,எகிப்த்திய மக்கள் தம்மை விடுவித்த தினமானது எமக்கு மகிழ்சியான தினம்" என்கிறார்.இப்படி அவர் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது இராணுவம் அவ்கானில்,கொங்கோவில் குண்டுகள் போட்டு மக்களை வேட்டையாடுவதை எந்தவூடகமும் சொல்லவுமில்லை-மக்களும் அதை எண்ணவும் இல்லை!

பிறகென்ன ,எல்லாம்"இன்ஷா அல்லா" என்பதைத் தவிர எதுதாம் சொல் முடியும் எம்மால்?


எல்லாவற்றையுமே இழந்தவிட்ட தொழிலாள வர்க்கம் இனி இழப்பதற்கு என்னதாம் இருக்கு?


புரட்சி,
புரட்சிகரக் கட்சி,
மக்கள் எழிச்சி,
தொழிற்சங்கம்,
மக்கள் குரல்


எல்லாமே அவர்களுக்கானதாக மாற்றப்பட்டு, அவர்களே நமக்குள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது எவனோவொருவன் தெருவில் குந்தியிருந்து-முகப் புத்தகத்தில் எழுதி,உறவாடிப் புரட்சியை அவிட்டு விட்டானாம். ஆதலால், " எந்தப் புடுங்கியும் இனிப் புரட்சிக்கு தேவையில்லை-ஒருவன்,நினைத்தால் புரட்சி வெடிக்கும்!" என்ற அறிவுப்பரப்பு தமிழர்களிடம் வந்துவிட்டதாலும் இனித் தமிழருக்கு அழிவேயில்லை!-வாழ்க, தமிழர்கள்தம் பெரும் "அறிவு"ப் பரப்பு!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2011

Thursday, February 10, 2011

சுய மாட்சிப் போ(க்)கி(ரி)த் தனம்:

சிலவுதிர்வுகளும்-துளிர்த்தல்களும் எப்போதும் போலவே நடந்தவைகள்தாமெனும் புரிதலுக்கு அவை சார்பு நிலைக்கப்பால் உண்மையென்பதை, உறுதிப்படுத்த"நான்"இருத்தல் அவசியமென்பதில் "மாயமானும்-வனவாழ்வும்"வாய்க்கப் பெற்றவர்கள் நாம்.வெறுப்பேற்றும் பொழுதொன்றின் பின்னையவுணர்வில் வானம் நோக்கிய "கேள்விகளை"கொட்டி வைக்க இன்றைய மனிதர்களுக்கு அவகாசம் இருக்குமென எனக்குத் தோன்றவில்லை!

அழுகின்ற பிள்ளையைச் சகிக்க முடியாத மனவூழ் தொடர்ந்து தன் அழுகைமீதான நியாயவாதத்தை அடுக்கி வைக்கவே போராடிக்கொள்கிறது.நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களை உருவாக்கி வைத்த தடங்களைத் தொடர்வதில்எவருக்கு வேணும் இன்னொரு "இழவு-இழப்பு"க் கோலம்?


அதீத தொழில் வளர்ச்சிக்குப் பின்னான காலத்துள் உருவகப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மறுவினையான பின் காலனிய-மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க, அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து, அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்னுமின்னும் அதிகமாகிறது.தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும், கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருக்கிறது!இந்த முகநூற் பொருங் குடிகளது பொன்னான பொருதற்"பெருங் கதை வெளியில்"போக்கிடங் காண்பதற்குமுன் சஞ்சலம்கொள்வதென்பதற்கான எந்தப் பீடிகையும் இல்லை.

"சுயமாட்சி"


இதன் ஆரம்பம் "தூய்மை-உண்மை"என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகவுமே சுழல்கின்றனர்.கடந்தவினைத் தவறா அன்றிச் சரியாவென்பதையுந்தாண்டி,நாம் "மனிதர்கள்"என்ற தளத்தை உதிர்த்துவிட்டு இந்த இயற்கையைப் பொருத்திப் பார்க்க முடியாதிருக்கும் வினையே பல தளங்களில் முனைப்பிடும் மனிதவுருவை நமக்கு முன் கொணர்கிறது.அகங்காரமும்-அதி விரக்திப் புத்தியும் துருவ நிலைக்குப் புரிதலையும்-உணர்வையும் நகர்த்திவிடுகிறது.அத்தகைய நகர்தலைப் புரியாதிருப்பவர்களே இன்றைய புரிதலுக்குப் பொழிப்பையும் உரைப்பதில் தம்மை முன் நிறுத்திப் பார்க்கின்றனர்."அங்கீகரீப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் தினமும் இந்த முக நூலில் பார்த்துவருகிறேன்.எத்தனை முறைதானும் ஒருவர் தனது மனவுளைச்சலைக் கொட்டலாம்.அது சபிக்கப்பட்ட காலத்தை உணர்த்திவருவதென்று அகவிருப்பில் ஒருவர்மீதான மிகையான நம்பிக்கை பிறழ்ந்துபோகும்போது, அதுவரையான தளத்துக்கு நேரெதிராகச் செல்ல முனையும் ஊக்கமோ ஏலவே கொண்டிருந்த போலி "நட்பு-உறவுக்கு"விசுவாமான ஊக்கத்தை வெகு சீக்கரமே வெளியிற் தள்ளிச் செல்கிறது.இதை எந்த வெங்காயத் தத்துவமும் விளக்குவதாக நான் சொல்லேன்!


இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் அதிகமாகத் தனது குடும்பத்தோடுகூடவோ அன்றி அயலட்டத்தோடுதானேனும்"சகிப்பு"த் தன்மையைக் கட்டி உருவாக்க முடியாது.

இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.

இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்று முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய மனிதப் புனித நடாத்தையிலும்-பொருள் வாழ்விலும் "நட்பு-இரத்தவுறவு" என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம்.அதற்கான தேவையும் இனி அவசியமே இல்லை!இந்தத் புள்ளிமீதான சகல எதிர்பார்ப்பும் கொச்சைத்தனமான புரிதலுக்கு வெளியில் மிக அபத்தமானவை என்பதே எனது நிலை!ஊக்கமான நிகழ்வாக்கம் எப்போதுமே இருப்பதில்லை.தனக்கும்,தன்மீதான இருப்பின் உடைவுக்குமான புரிதற் தடுமாறாட்டமே ஊசாலாட்டமான தனது நிலைக்கு ஏதுவான சொற்களைச் சதா தேடுகிறது.அதையே,தனது பெரும் பகுதியான பொழுதைத் தற்கொலைக்கு நேரான நிலைக்கு மாற்றிவைத்தபடி அதன் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிப் பார்க்கிறது.

ஈடேற்றம் என்பதிலேயேதாம் நமக்குள் பெரும் பகுதியான நேரம் விரையமாகிறது.ஒன்றில்லாத வினையென்பது சாரம்சத்தில் தப்பானதெனுங் கோரிக்கைள், உருவகத்துக்கும் வடிவத்துக்குமான புரிதலில் இதையே உட்புறமாக நகர்த்துவதில் ஆர்வமாகிறது.நிமிடத்துக்கு நிமிடம் தும்மிக்கொள்வது அலர்ச்சிக்குட்பட்ட ஏதோவொரு எதிர்வினைப் பயனென முடிவு கூறுவதுபோல, எதையுங் குறித்து எதிர்வு சொல்வதில் நம்பகமாக எமது அநுபவங்களையே மீளச் சொல்கிறோம்.அந்த அநுபவங்களது முன்னைய இயலாமைகள் இன்றைய இயலுமானவையோடு நேரடியாகப் புரிதலுக்குள்ளும்-வாழ்நிலைக்குள்ளும் எட்டித் தலைகாட்டும்போது அதை அங்கீகரிக்க மறுப்பதிலேயேதாம் நாம் "எழ" முனைகிறோம். இந்தத் தன்னிலைப்படுத்தல்-சுயமாட்சிப் படுத்தல்களின் உயிர்த்திருப்பை அங்கீகரித்து விடுவோமானால் சொல்வதற்கும்-செய்வதற்கும் எதுவுமே இல்லை!

இங்கே, ஊசலாட்த்துக்கும்"நான்"தொடர் நெருக்கடிக்குள்ளாவதும் இல்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.02.2011

Saturday, February 05, 2011

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி :

ஒரு நோயாளியது குறிப்பை "இங்ஙனம் " புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது , திருட்டுத் தனமானது.


மிழ்ச் சூழலில்வேற்று மொழியிலிருந்து எதை எடுத்து,எவர் போட்டாலும்,அது மனிதவாழ்வில் கருத்தியல்சார் நிலைக்குமேற்றாண்டி,மனித அகவயங்களை ஜந்திரமாக்குவதாகினும்,அதன் தெரிவில் அனைத்தையுமே பொருள் நிலைக்குக் கீழ்க் குறுக்குவதில் சிந்தனைத்"தெளிவு"பெற்றதெனப் படியெடுக்க, நமக்குள் பலர் இருக்கின்றனர்.அவர்களின் , ஏதோவொரு புரிதல்"விருப்பு ஜந்திரங்கள் விருப்ப உற்பத்தி"என டெலோய்ஸ்-பேலேக்ஸ் குவற்ராறி [Gilles Deleuze and Félix Guattari ]எழுதியதன் தமிழ் மொழிப் பெயர்ப்பை நிஜந்தன் தனது தளத்தில் இட்டதும், ஒரு பெருவாரியான புரிதலின் வினை அதைக்கொண்ட பயனென...

சரி.நாம் பார்ப்போம்,[ கட்டுரையது ]இலக்கும்,உள்ளடக்கமும் எந்தத் தளத்திலிருந்து முழுமொத்த மக்கட் பிரிவுக்கும் எட்டுவதென.

ஜேர்மனிய செனற் அதிகாரியும்,நீதிபதியுமான டானில் பவுல்ஸ்றேபர் [Dr. jur. Daniel Paul Schreber, Senatspräsident beim Kgl. Oberlandesgericht Dresden a. D.]உடைய கருத்திலிருந்தும் அவர்கொண்ட புரிதலிலிருந்தும் கருத்தியல் கட்டுமானம் இன்னொரு திசையின் விருத்தியாக(மனித இருத்தல் X பொருள் நிலை X ஜந்திரம்) மேலெழுந்தபோது, அதன் கடந்தகாலப் பரிணாமங்கள் இன்றைய பொழுதில் பொருத்தப்பாடான புரிதலெனுங் குவியத்துள்.



நல்லது.

இந்தப் புரிதலுள் அதிதீத செல்வாக்குச் செலுத்தும் டானிளல் பவுல் ஸ்றேபரது [Daniel Paul Schreber ]சிந்தனைக்கு ( DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN) வருவோம்.அவரது, கருத்தைக் குறித்தான புரிதலுக்கு -2 -தளங்கள் இருக்கிறது.

1: பிரஞ்சியச் சிந்தனையாளர்களது ஐரோப்பிய நவீனத்துக்குப் பின்பான புரிதல்கள்,

2: நவீனத்துக்கூடாக நகர்த்தப்பட்டு அந்த நவீனத்துவச் சமுதாயத்தின் அழுத்தமான காற்தடத்தின் கீழே நசுக்கப்பட்ட குரல்கள்-உணர்வுகளது குறிப்புகள்.

இதைப் புரிவதற்கு டானியல் பவுல் ஸ்றேபருக்குத் தொடர்ந்த வாழ்நிலைப் புரிதல்கள்,அநுபவங்கள்,அவர்மீது செலுத்தப்பட்ட அதிகாரச் செயலுகை[ Schwarzen Pädagogik] இவை குறித்தான தேடுதலை தொடர்ந்த வில்லியம் நீடர்லான்ட் (William G. Niederland (1904–1993) ஐம்பதுகளின் ஆரம்பத்தில் டானியல் பவுல் ஸ் றேபரது வாழ்வின் "கருப்பு வளர்பு"(இது பின்னாளில் சோடிசமாக_Sadismus/வழக்கங் கொள்வது)நிலைக்களன் [gesunder Haltung]அவரது தந்தை--சகோதரர்களெனக் கண்டடைந்தபோதும் அதன் தாக்கத்துள் உந்தப்பட்டு அதிக வருடங்கள் வைத்தியசாலையிலிருந்து கொண்டதும்; மனோரீதியான பாதிப்புள்[ Paranoia_Bezeichnung für eine psychische Störung ] அவர் எழுதிய நூலானது "ஒரு நரப்ம்புத் தளற்ச்சி நோயாளின் ஞாபகங்கள்"(DENKWÜRDIGKEITEN EINES NERVENKRANKEN).கவனமாகக் கொள்ளுங்கள், டொச்சில்[Auf Deutsch ]அதை ஆய்வென்றோ-அறிதல் முறையென்றோ சொல்லாது "ஞாபகங்கள்"என்றே கூறப்படுவதை.

அதாவாது> DENKWÜRDIGKEITEN <என்பது ஞாபகத்துள் வைக்கவேண்டிய,சிந்தனைக்குள் வைக்கத்தக்தென்பதாக... நீடர்லேன்டர் தனது அதீதமான தேடலில், "ஸ்றேபர் அசம்பாவிதம்"[ Fall Schreber]எனும்பொருட்டே ஆய்வினத்தொடர்ந்தார்.குடும்பத்துள் பாலியற் துஷ்ப்பிரயோகத்துக்குட்பட்ட அவரது(ஸ்றேபர்)மனப் பிறழ்வு ,தொடர்ந்த உறவு நிலைப் புரிதலுள் எந்திரமான நிலைகளை மனித நடாத்தைக்கும்,மனித உறுப்புகளுக்குமான அனைத்து பரிவர்த்தனைக்கும் "தன் _வதையின் " தொடர்ச்சியில் , உறுதியானவொரு புரிதலுக்கு அவரையிட்டுச் செல்வதாகவிருக்கிறது ; இந்தப் புரிதலில் அவர், தான் குறித்தவை மனோவியற் புகுப்புக்கு உதவுமென "அன்று" அறியவே இல்லை!மனப் பிறழ்வது போக்குக்கேற்ப தன்னை உருவாக்கியவருக்கு இறுதியில் , மனித இருத்தலென்பது குற்றமாகவும்,எந்திரத் தனவியக்கவுமாகவே புரிந்துபோகும் வாழ்நிலை. தந்தை-தாய்,உறவு,அனைத்தையும் வதைத்தெடுக்கும் பாலியல்வதையின் வடூ,மிகக் கீழான நிலைக்குள் உந்தும் மனித இருப்பாக மனிதப் பெறுமானஞ் செயலிழக்க ,அதன் தொடரில் வெறும்"விருப்பு-இயக்கம்"ஜந்திரமெனத்தொடரும் புள்ளியை வந்தடைகிறார். இத்தகைய நிலைக்கு, இட்ட சூழற்றொடர்ச்சிக்கு நீடர்லான்டர் வராதபோதும் ,அவரது இந்த நூல்(Three Notes on the Schreber Case) பரவலாகச் சில விளக்கத்தைத் தரும். பெரும்பாலும் டானியல் பவுல் மீதான புரிதலது எல்லையில், அவரைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியர் பல்கேரிய எழுத்தாளர் எலியாஸ் கானற்றி[Elias Canetti]. பரந்துபட்ட மக்கள்-அதிகாரம் எனும் நூலோடு(Masse und Macht) அவர் ஒரு விவாதத்தை நகர்த்துவதை அறிய முடியும். இவர்களை, உள்வாங்காது அல்லது மறைத்துத் தமது கருத்தியலுலகுக்கு வலுவாகச் சோடித்த செயல் ,பின் முதலாளியச் சூழலது தெரிவு.

ஒரு நோயாளியது குறிப்பை இங்ஙனம் புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது திருட்டுத் தனமானது.டானியல் பவுல் இரு தாசப்பதமாக நோய்கு உட்பட்ட மனிதர்.அவர் எழுதியது, "நோய்க்கும்/தனக்குமான" புரிதல்சார்ந்த எண்ணங்கள்-மனப்போராட்டங்களையே[klassische Fallstudie aus Sicht eines Psychosekranken].அது, அவரது சொந்த வாழ்வின் வடூ.

அவர் ,தனது நோய்குச் சிகிச்சை பெற்றபோது, அதன் தளத்திலிருந்து புரிந்துகொண்டவையும்,தனக்கும் /தந்தைக்குமிடையிலான எதேச்சை-அதிகாரமிக்க பாலியற் துஷ்ப்பிரயோகங்கள் [Der das geistige Klima des gehobenen Bürgertums bestimmende positivistische wissenschaftliche Mainstream und die vorherrschenden protestantischen und leibfeindlichen Diskurse] குறித்த வடூவின் உந்துதலால், பிறழ்வுற்ற பல புரிதல்களைத் தொடர்ந்து குறிப்பெடுத்து வைத்தார்.அதைப் பின் தொடர்ந்த சிக்மன் பொறைட் [Sigmund Freud], அவரது குறிப்புகளைத் தனது தேவைக்கேற்றபடி[ Basierend auf dieser Fallstudie schrieb Sigmund Freud 1910/11 den Aufsatz Psychoanalytische Bemerkungen zu einem autobiographisch beschriebenen Fall von Paranoia (Dementia Paranoides), der 1911 erschien.] வெட்டியும் ,நிமித்துயும் பார்த்த போது , அதைப் பிரஞ்சிய விண்ணர்களும் [Gilles Deleuze and Félix Guattari] தமக்கேற்ற புரிதலுள் முடுக்கினர்.

நமக்கோ,மனிதவுறுப்புகள் X ஜந்திரம்.விருப்ப எந்திரம் Xவிருப்ப உறுப்பென்றதும் ,புதுமையான புரிதல்.அடடா,மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம் என்றதை மனித இருத்தலுக்குப் பொருத்தும் அகவயக் குறையின் தொடர்ச்சியோ இது?[ Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« ]– Lothane: Seelenmord und Psychiatrie.டானியல் பவுல் ஸ்றேபர் , மூன்று விதமான கொலைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறித்த புரிதல்களை நாம் கொள்ளத்தக்கதாக அவரது வைத்தியர்கள்-Paul Flechsig-அவர்குறித்த ஆய்வாளர்கள் [William G. Niederland- Lothane-Elias Canetti]சொல்லக் கேட்கிறோம்:"ஆன்மக்கொலை,நீதிக்கொலை,புகழ்க்கொலை"[Schreber war, so Lothane, einem dreifachen »Mord« unterworfen: dem »Seelenmord«, begangen von seinem Psychiater Paul Flechsig, der seinen Patienten einfach in die Irrenanstalt verbannte anstatt ihn angemessen zu behandeln; dem »Justizmord«, begangen vom Anstaltsdirektor Weber, welcher die definitive Entmündigung Schreber veranlasste und dem »Rufmord« Elias Canettis, der in Schrebers vermeintlicher Paranoia ein Modell für Hitlers psychische Disposition sah.« Lothane: Seelenmord und Psychiatrie. ] என ,அவரது மனதில்-நியாத்தின் தரப்பானது எங்கோ பறிகொடுக்கப்பட்டாதான திசையிலேயேதாம் அவர் தனது குறிப்பை வடித்தெடுத்தார்.

அது,உலகத்தில் தன்னையும்,தன்னைச் சுற்றிய மனிதர்களையும் வெறும் பண்டாமாக பார்த்தது-குறுக்கியது.இதன் வழி தனக்குள்ளானவொரு "நியாயத்தை" [Offenen Brief ] " த் தக்க வைத்துக்கொள்ளும் பொருளோடு அனைத்தையும் அனத்து உடலுக்குள் திணித்து, புறவுலகை மறுத்தொதுக்க முனைதல்கூட ஒரு வகையில் அவரது சுதந்திரத்தின்மீதான அத்துமீறிய கொலைதாம்.

புறநிலைக்கும்,சிந்தனைக்குமான சார்பு நிலையுள் இந்த ஜந்திரத்துக்கான எடுகோள் எப்படியுருவாகியது? விருப்பு ஜந்திரத்துக்கு விருப்பைத் திணிப்பதற்கான தொடர் நரப்பு மண்டலத்திலிருந்து உருவாகுவதாக[ "Unter welchen Voraussetzungen darf eine für geisteskrank erachtete Person gegen ihren erklärten Willen in einer Heilanstalt festgehalten werden?] " ச் சொல்கிறார் டானியல் பவுல் ஸ்றேபர். அப்போது, இமானுவேல் கான்டும்,பிறிடிறிக் பொய்யர்பக்கும் செத்துப்போயிருந்தனர்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
5.02.11

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...