Sunday, June 27, 2010

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்

கட்டுரைத்தொடர் (2):
புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"

குழுவாதம் தரும் புதிய நெருக்கடிகள்:


ற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள்"தமிழீழப் போராட்டம்"குறித்தும்,தமிழ் மக்களது அரசியல் எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.

புலம்பெயர் தமிழர்கள் தமது அடையாளங்களை இதுவரை புலிவழிப் போருக்குள் இனங்காண முனைந்தபோது,புலிகளால் கட்டியமைக்கப்பட்ட போலிக் கோசமான தமிழீழம் அவர்களை வலுவாகப் புலிகளோடும்"தமிழீழ"த்தோடும் பிணைத்துக்கொண்டது ஒரு தற்செயல் நிகழ்வாகும்.இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் யுத்தம்-கொலை அரசியலிலிருந்து தப்பவே முயன்றுகொண்டனர்.இதுள்,அந்நியத் தேசங்களது அகதிகளுக்கான நெருக்குவாரங்கள் சந்தர்ப்ப வாதமாகத் "தேசம்-தேசியம்" எனும் கருத்து நிலைகளுக்கு முக்கியமளிக்கும் அக நெருக்கடிளைத் தமிழ்பேசும் புலம்பெயர் மக்களுக்கு ஏற்படுத்தியபோது அதைப் பலமாகப் பயன்படுத்தியவர்கள் பிழைப்புவாதப் புலிப் பினாமிகளும் அவர்களது பின்னாலிருந்த மேற்குலக-இந்திய எஜமானர்களுமே.

இலங்கையில் தமது அடையாளங்களைத் தேடும்புலம்பெயர் இளைய அகதிகள்தமது பெற்றோர்களது புரிதலிலிருந்து மேல் நோக்கிய புரிதலை மேற்குலகக் கருத்தியற் படிமத்திலிருந்தே பெறுகிறார்கள்.வளர்ச்சியடைந்த சமுதாயங்களது கருத்தியற் படிமத்தில் வந்தமர்ந்த "தமிழீழம்"மேலும் வலுவான அக நெருக்கடியை இளைய தலைமுறைக்கு வழங்கும் பல சந்தர்ப்பங்களை அவர்கள் தமது புற அடையாளங்களை வெள்ளையினத்தவர்கள் எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது வேர்கள்"தமிழீழத்தில்"பதியமிடத்தான் முடியுமென எதிர்பார்த்தார்கள்.ஆனால்,அந்தத்"தமிழீழம்"சாத்தியமானதா என்ற ஒரு கேள்வியை அவர்கள் புலி வழியிலேயே புரிந்து கொண்டனர்.

இவர்களை நோக்கியதான இன்றைய அணிச்சேர்க்கைகள்-கட்சி கட்டும் இயக்கவாதக் குறுகல் பார்வைகள் எடுத்தாளும் அரசியலை அம்பலப்படுத்தப்படவேண்டும்! இக்கட்டுரையது உள்ளடக்கம் இந்த நோக்கு நிலையிலிருந்தே எடுத்தாளப்படுகிறது,நிலத்தில் வாழும்மக்கள் இதுவரையான அனைத்துக் கொலைகளுக்கும்,அழிவுகளுக்கும் முகங்கொடுத்தவர்கள்.அவர்களது தலைமுறைசார்ந்த அரசியல் தலைமைகள் இதுவரையான அனைத்துக் கொலைகளிலும் ,அழிவுகளிலும் தமது கரங்களை ஏதோவொரு வகையில் திணித்திருக்கின்றார்கள். இவர்களே,இன்று தமது இருப்பினது தெரிவாகப் புலம்பெயர்ந்த மக்களது குழந்தைகளையும்,அவர்தம் அறிவையும் மேற்குலகத் தேசங்களுக்கேற்ற வகையில் தகவமைக்கின்றனர்.இது,ஆபத்தானது!மீளவும்,தமிழீழஞ் சொல்லி இளைய தலைமுறையின்அக வளர்ச்சியை குறுந்தேசிய இனவாதப் பண்புக்கொப்ப மாற்ற முனையும்.இது,புரட்சிகரமாக சமூகத்தைப் புரிவதற்குக் குறுக்கில் நிற்கும் கருத்தியற்றடையை மேலும் இருப்புகுட்படுத்தும்.இத்தகையவொரு சூழல் வலுத்திருந்தபோதுதாம் புலிகளது பாசிசக்கட்டமைப்பு இலங்கையிலும்,புலத்திலும் தொடர்ந்து நீடித்தது.அதைத் தக்கவைக்க முனையும் இன்றைய அணிச் சேர்கைகளது"புரட்சிகர"வாதங்களும்,தெரிவுகளும் இத்தகைய புலவழிக் கட்டமைப்பைத் தொடர்ந்து தமக்குள் உள்வாங்கிப் புலிகளது அதே பாணித் "தமிழீழம்"சார்ந்த பிரமைகளது அரசியல் பிரகடனங்களது வழியில், மேற்குலகத்தின் இலங்கைக்கான அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.

வரலாற்றுப் பேரிடி:

புலிகளின் தோல்வி-புலிகளின் அழிவுதரும் வலி, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை குழுக்கள்-கட்சிகள்,இயக்கங்கள் "புரட்சி-விடுதலை,சுயநிர்ணயவுரிமை" எனும்பெயர்களால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி,அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் "புரட்சி" பேசுவார்கள். இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச்சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.எனவே,திடீரென முளைவிடும் கூட்டுக்கள்-கழகங்கள்,பொது அமைப்புகளெனும் முகமூடிகளை விலத்தி அவர்தம் உண்மை முகங்களைக் கண்டடையவேண்டும்.

தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்தவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை. ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் இன்று நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது.இதை மேலும் தொடர்வதற்கான பல் முனைப் போராட்டம் தமிழ்மக்கள் பேரால் நடந்தேறுகிறது.

தமிழ்த் (வி)தேசிய "விடுதலை"ப் போராட்டத்தில் புலித் தலைமை வன்னியில் மக்களது குழந்தைகளைத் துடைத்து அள்ளிப் போருக்குள் திணித்துக் கொன்றதில் இன்றெவர் குற்றவுணர்வோடு இருக்கிறார்?

இது,வரலாற்றுப் பேரிடி அல்லவா?

இந்த அழிவுயுத்தம் செய்த வரலாற்றுத் தவறு ஒரு இனத்தையே அழித்து ஏப்பம் விட்டதல்லவா?

இதைக் குறித்துத் தேடுதலைச் செய்து நமது மக்களை சமூக நெருக்கடியிலிருந்து காப்பதற்கு முனையாத கபோதிகள் கட்சி கட்டுவதில் முனைப்புறும்போது,இந்தச் சொறி அரசியலை"புரட்சி"யின் பெயரால் ஆதரிப்பதென்பது அடி முட்டாள்த் தனமானது.இதைப் புரட்சி என்பவர்கள் மனிதசமுதாயத்தின் அசைவியக்கத்தையே புரியாது, அந்நியச் சதிகளுக்கு உடன்படும் பிழைப்பு வாதிகளென்பதில் எவரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.

அது,புகலிடச் சிந்தனை மையத்தின்"புதிய ஜனநாக மக்கள் முன்னணி"ஆகவிருந்தாலென்ன அன்றி மே 18 இயக்கமாக இருந்தாலுஞ்சரி அனைவரதும் தெரிவும் இதிலிருந்து மாறுபடவில்லை.

பம்மாத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழருக்கான அரசியலைச் சொல்லியே கால் நூற்றாண்டாக எத்தனை ஆயிரம் தமிழர்களைப் பலிகொடுத்துள்ளது-எத்தனை ஆயிரம் தமிழர்களைத் துரோகி சொல்லிக் கொன்றிருக்கிறது?இது,வரலாற்று நெருக்கடி.ஒரு இனத்தின் வாழ்வோடு களமாடிய வலாற்றுக் குற்றம் இன்னும் குற்றமாகக்கூட புரிய வைக்கப்படவில்லை!அது,தேச நிர்மாணத்துக்கான-இனவொடுக்குமுறைக்கெதிரானவொரு போராட்டமாகவும்,அதுள் சில தவறுகள் நேர்ந்ததாகவும் கற்பிக்கப்படும் வரலாற்று மோசடிக்கு எதிராகப் புதிய புரிதல்கள் வாசிக்கப்பட வேண்டும்.

தொடரும் இயக்கவாத மாயையின்வழி அந்நியச் சேவை:

படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.எனினும், புலிகளது வரலாறு ஏதோவொரு முனையில் பாமரத்தனமாகச் சொல்லப்படுகிறது.அதுவும் வரலாற்றுக் குறிப்பெனப் பதியப்படும் அபத்தம்வேறு.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் "புரட்சிக்கரர்" என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின்மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.

இது,அரசியல் மோசடி!

எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலியழிப்புக்குப்பின் புலிகளது உபக் கூறுகளைப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தில் நோர்வே முதல் பிரித்தானியவரை தனது வலையை விரிக்கிறது.அங்கே,புலிகளது தனிப்பேட்டை ரவுடிசத்துக்கு "தேசயவிடுதலை-சுயநிர்ணயவுரிமை"போராடமெனப் பரப்புரை செய்த சண்முகரெத்தினம் முதல் "புரட்சிகர"க் கட்சி கட்டும் மர்ம மனிதர்கள்வரை ஏதோவொரு வழியில் தத்தமக்கேற்ற திசைவழியில் அந்நியச் சக்திகளோடு இணக்கமுறுகிறார்கள்.

புலிகளது நிறுவனப்பட்ட பாசிச அடக்குமுறையினது தகர்வுக்குப் பின்பான அரசியலில், தமிழ் பேசும்மக்களோ உயிர் வாழ்வுக்கான தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தம் வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக விருத்தியாகும் (தமிழீழ)போராட்டத்துக்கு எதிரான எதிர்ப்பு உளவியல் தோன்றுவது இலங்கையின் இன்றைய குறை ஜனநாயகச் சூழலில்தவிர்க்கமுடியாதவொரு சமூக அசைவியக்கமாகும். இதைத் தடுத்து அவர்களை மீளத் தகவமைக்கும் குழுக்கள், தமது நம்பிக்கைக் குரிய திசைவழியில் புரட்சியோ அன்றித் "தேசிய விடுதலை"யோ பேசி மக்களை அடிமையாக்குவது அந்நிய நலனினது தெரிவின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த விய+கங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான குழுக்கள், தமது இருப்புக்கும்-அங்கீகரப்புக்கும் அந்நியச் சேவையைத் தொடர்வதே தெரிவாகக்கொண்டியங்குகின்றன.இதன் உச்சபட்ச விருத்தியாக முகிழ்க்கும் தொடர் சந்திப்புகள்-ஆய்வு வட்டம்,கற்கைப் பட்டறைகள் யாவும் ஏதோவொரு அந்நிய தேசத்தின் அனுசாரணையுடன் அதன் நலன்களுக்கமையத் தமிழ்பேசும் மக்களது உரிமையின்-விடுதலையின் பெயரால் நடந்தேறுகிறது.இங்கே,தம்மைப் பேராசிரியர்களாகவும்,புரட்சிகரர்களாகவும் இனங்காட்டிவரும் நபர்கள்-குழுக்கள் தமது எஜமானர்களிடம் தம்மை நிலைப்படுத்த அடிக்கும் குத்துக்கருணங்கள் கட்சி-அமைப்புள்,அரசுசாரா அமைப்பகளெனக் கட்டிடத் துடிப்பதில் முடிகிறது.

எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான "அதிகாரப் போட்டி அரசியலை",புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச்சூழலில் "எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே நமது மக்களது வாழ்நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங்கடந்து,கண்டங்கடந்து நடந்தேறிகிறது.அங்கே,"பேராசிரியர்கள் முதல் புரட்சிக்காரர்கள்"வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது. கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள்புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன. இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்"புரட்சி-விடுதலை"குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

தகர்க்கப்பட வேண்டிய இயக்கவாதம்:

இனவொடுக்குமுறைக்கெதிரான தேசிய விடுதலைப் போரை பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு சாத்தியமானது. எனினும்,புலிகளது வெற்றிடத்தைக் குறித்துக்கொண்டிருந்த அந்நிய மூலதனம் தனது தேவைக்கேற்ற குழுக்களை அதன் இடத்தில் இருத்துவதே அதன் முதற்பணியாக இப்போதிருப்பதென்பது உண்மையானது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தரங்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதார ஒத்துழைப்புகளையும் குறித்து வகுப்பெடுக்கச் சந்திப்புகளைச் செய்கிறது.இந்தத் திடீர் அரசியற் கருத்தரங்கங்கள்-பட்டறைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது உயிரைக்குடித்த இயக்கங்களது முன்னாள்-இன்னாள் உறுப்பினர்கள்-அரசியல் ஆலோசகர்களை வைத்தே நடைபெறுவதைக்கவனித்தால் இதன் உள்ளடக்கம் புரியத் தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த இலங்கைத் தேசத்துக்கு-அதன் பொருளாதார நகர்வுக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.

தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும். இந்தத் தெரிவானது ஆசிய மூலதனத்துக்கான வெற்றியாக இருப்பதால் இதையுடைத்து ஆசிய மூலதனத்துக்கான நெருக்கடிகளை தமிழ் மக்களது விடுதலையின் பெயரால்கொடுப்பதற்குத் தயாராகும் இன்னொரு இயக்கவாத போராட்டமுறைச் சுற்று களத்துக்கு வருவதில் பல நலன்களது தெரிவு இயக்கமுறுகிறது.இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி இலங்கையினது சுய வளர்ச்சியை மட்டுப்படுத்தித் தமது நோக்கங்களுக்கான தொங்கு நிலைத் தேசமாக்குவதில் அதிக அக்கறையுடைய தேசம் இப்போது நோர்வே என்பது தெரியவருகிறது.

அண்மைக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கான இராணுவ அடியாள் இஸ்ரேல் என்பதுபோல ஐரோப்பாவில் நோர்வே அமெரிக்காவினது அரசியல் அடியாள்.இதன்வழி ஆசியாவில் இழந்த தனது வல்லமையைத் தக்கவைக்க நோர்வேயூடாக இலங்கையில் பற்பல நெருக்கடிகளை புதிய குழுக்களின்வழி நோர்வே ஏற்படுத்தும் தெரிவாகவே இந்தப் புதிய கட்சிகள்-குழுக்கள் அணியுறுவதும் புரட்சி பேசுவதும் சாத்தியமாகிறது.

இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளது வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை. கணிசமான பொருளுற்பத்தியானது, இன்று மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன. இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும். இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது. இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இதன் பாரிய நெருக்கடியே இன்றைய தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகிறது.இதைக் குறித்து அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்க முந்தும் அவசரமே கட்சிகள் கட்டுவதன் அவசரத்தில் பற்பல புரட்சிக்காரர்களை பற்பல முறைமைகளில் கட்சிகட்டும் நியாயத்தை முன்வைத்து இயங்கக் கோருகிறது.

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதன் தொன்மையான புரிதலில்"புரட்சிகர"கட்சியென்ற வடிவத்தில் எதிர்புரட்சிகரக் குழுக்களை உருவாக்கும் அந்நிய சக்திகள் அக் குழுக்களை உண்மையில் தமது எதிரிகளாக இயங்கவே அனுமதிக்கிறார்கள்.இதனால்,இவர்கள் சாரம்சத்தில் அந்நியச் சக்திகளை எதிர்ப்பதையும்,மக்களில் பெரும் பகுதியை மயக்கி அவர்களது எதிர்ப்பு அரசியலையே காலத்துக்கு முந்திக் கட்சிகட்டி எதிரிக்கு ஆட்காட்டிச் சிதைப்பதில் சாத்தியமான சமூக அசைவியக்கம் முகிழ்கிறது.இது செயற்கையான -புரட்சிகர நிலவரத்தை-புரட்சிகரச் சூழலை ஒரு சமூகத்துக்குள் உருவாக அனுமதித்து இயங்கிறது.அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது தமிழர்களைப் பயன்படுத்தி இலங்கையில் மீளத் தகவமைக்கும்இயக்ம்- கட்சிகட்டும் அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.


தொடரும்

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.06.10

Friday, June 25, 2010

தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்...

புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!"


கட்டுரைத்தொடர்: (1)


தனிநபர்கள் அணியுறும் தருணங்கள்:

லங்கையில் இனங்களுக்கிடையிலான மூலதன வளர்ச்சியானது பெரும்பாலும் ஒரு பெரும் வரலாற்று அழிவை இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் ஏற்படுத்தி மேலும் தகவமைக்கும் அரசியல் நெருக்கடிகள், மெல்ல உயர்த்தும் முரண்பாடுகள் , இலங்கையின் அனைத்து இனங்களுக்குள்ளும் குரோதத்தை வளர்த்து இரத்தங்குடிக்கக் காத்திருக்கிறது.இதை ஊக்குவிக்கப் பல தளங்களில் உசாராகும் அந்நிய நலன்கள், இலங்கை மக்களது ஜனநாயக விழுமியங்களைக் காலிற்போட்டுமிதிக்கும் சர்வதேசச் சதிகளை இனங்களுக்குள் இருக்கும் கட்சிகள்-குழுக்களைப் பயன்படுத்திச் செல்லும் அரசியல் திசைவழியானது புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு வகையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

அஃது, இது காலவரையான அனைத்து அரசியல் நடாத்தைகளையும் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயம் முன்னெடுத்த பெரும்பகுதி ஆதரவுக்கான புலிகளது அரசியல் கூச்சல்"தமிழீழத்தை"க் கனவுக்குட்படுத்தியபோது,அதை நோக்கிய எதிர்பார்ப்பு பொருட் செலவில் மையங்கொண்டிருக்க இப்போது, அதன் தொடர் நிகழ்வுகள் அதே"தமிழீழத்தை" ஏலம் போட்டுப் "புரட்சி-கட்சி"என அந்நியத் தெரிவுகளில் இருப்புக்கான போராக விரிகிறது.இது குறித்த சரியான புரிதலின்றி "பேராசிரியர்" சண்முகரெத்தினம்,மற்றும் "புகலிடச் சிந்தனை" மையத்தின் தொடரான புதிய புரட்டுக் குறித்துவொரு தெளிவான நோக்கு நிலைகளை நாம் பெறவே முடியாது.சம்பந்தப்பட்ட நபர்கள்-குழுக்களுக்கான அந்நியத் தெரிவுகள்"விடுதலை-புரட்சி"எனத் தொடராகப் புனையும் கருத்தியல் யுத்தத்தில் மக்களது அடிமை வாழ்வு மேலும் இருப்புக் குள்ளாகிறது.

இதுவரை, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களது எந்த வாழ்வியற்றேவைகளையும் நிறைவு செய்ய முடியாத தமிழ் அதிகார மையங்கள் அம் மக்களது உயிர்வாழ்வைக் குறித்துப் புதிய புனைவுகளது தெரிவில் பேசுகிறார்கள்.இவர்களது சுய தெரிவு அவ் மக்களது எதிர்ப்புக் கூறுகளைத் தமது வரும்படிக்கான-பதவிக்கான உந்துதலாகக் கனவு காண்கிறது.

இது குறித்து நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.


பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.புலிகள் அழிந்த கையோடு அவர்களது உப பிரிவுகள் தனித்தியங்க அனுமதிக்கப்பட்டு,புலிகளது தொடர் இருப்புக்கான பல் முனை நகர்வுகள் ஒழுங்கு படுத்தப்படுகிறது.அந்நிய சக்திகளிடம் கட்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது .இது,புதிய இலங்கையின் புரட்சிக்கு எதிரான கூறுகளைக் கொண்டியங்குகிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இதன், மறு விளைவாகத் தமிழ்க் குறுந்தேசியவாதம் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் நிரந்தரமாகப்படுகிறது. புலிகள் அழிந்தாலும் அவர்களது எச்சங்கள் பல வடிவங்களில் புதிய மாதிரிகளை உருவாக்கிக் கட்சி-அமைப்பாகுதலெனக் குமுறுகின்றனர். இவர்களில் பற்பல குள்ள நரிகள் "பேராசிரியர்களாகவும்-போராசிரியர்களாகவும்" ஏலவே அறியப்பட்ட தமது பிம்பங்களுக்கு நடுவே கோலமிடும் அரசியல் நகர்வானது, எமது மக்களுக்கு மேலும் அரசியல் நெரிக்கடிகளைச் செய்யக் கூடியவை.இந்தப் புள்ளியை இலக்குப் படுத்தும் இக் கூட்டம் பரந்துபட்ட மக்களது எதிரிகளாக இனங்காணப்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.இது தொடராக என்னால் வலயுறுத்தப்படும் வெகுஜனக் கருத்தின் தெரிவாகவே இருக்கிறதென நம்பிக் கொள்வதில் எந்தக் குறைபாடும் இருக்க முடியாது.

மக்கள்:

ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களை மேலும் இது குறித்துச் சிந்திப்பாயாகவென எவரும் வற்புறுத்த அவசியமில்லை.தற்போதைய கட்சிகட்டும் கிறுக்குப் புத்திக்கு ஒப்பாரி வைக்க தெரியுமளவுக்கு உலக அரசியல் வியூகம் தெரிந்திருக்கவில்லை! அதைத் தெரியவேண்டுமென எவரும் வற்புறுத்தத் தேவையில்லை.ஏனெனில்,"ஏன்-எதற்கு"என்ற கேள்விகளைக் கேட்காது தலைமை வழிபாட்டில் புலியைப் பீடத்தில் ஏற்றிய தமிழ் மனதுக்கு எல்லாஞ் சரிதாம்."ஆரு குத்தியும் அரிசி ஆனால் சரிதாம்"என்ற மிகக் கெடுதியான சுய நலப் புத்திக்கு இன்றைய அரசியலையும் அதுசார்ந்து இயங்கும் தமிழ் கபடவாதிகளையும் அறிய முடியாதுதாம்.இந்த நிலையில் அன்றைய சரித்திரம் மீள முடிகிறது...

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று, ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள் இன்று!. இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு புலம்பெயர் "புரட்சி"க் குழுக்கள் தமது இருப்புக்காக-அந்நியத் தொழுகைக்காக நம்மை ஏமாற்றச் சமர்ப்பிக்கும் கட்சி-அமைப்பாகும் ஆலோசனைகள் அதுசார்ந்த அலகுகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம். இதைப் பேதமையான புரிதல் "புரட்சியின்"இடி முழக்கமாக இனங்கண்டால் அது,புலித் தலைமைக்குக் கட்டிய ஒளிவட்டத்தின் தொடர்ச்சியாகவே வரலாற்றில் பதியப்படும்.


கட்சி கட்டும் அவசரம்:

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான "கட்சி"கட்டுவதற்கான ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.பிணம் தின்னிகளான இந்த மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, தம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.நமது மக்களது உரிமைசார் கோரிக்கைகளைக் குலைக்க முனையும் சக்திகள், எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு ஐக்கிய இலங்கைப் புரட்சிகர அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில்,இலங்கையில் இனங்களுக்குள்பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி ,நமது இறைமையைச் சிதைப்பதில்இலங்கை மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.

ஐக்கிய இலங்கை, புரட்சிகரமாக மாற்றப்பட்டு மக்களுக்கான அரசு-கட்சி ,அதிகாரத்துக்கு வருவதற்கான தொடர் நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதார நகர்வுகளோடு தன்னை இணைப்பதென்பது இந்திய-சீன மற்றும் மேற்குலக அரசுகளுக்குக் காவடி தூக்குவதென்ற அர்த்தமாக முடியாது!இது வழமையான பூர்ச்சுவா அரசு குறித்த புரிதலை விட்டகன்று , புதிய தெரிவுகளின்வழி இன்றைய பொருளாதாரவியக்கத்தில் அரசுக்கும் மக்களுக்குமான பங்கு என்னவென்ற புரிதலின்வழி ,அவ்வரசைத் தூக்கியெறியும் மக்களது தர்க்காலிகச் சமூகவியக்கம் தன்னையொரு மக்கள்சார் அலகாகக் கண்டு,அரசுக்குரிய பண்பை கருத்தளவில் வைத்து முன்னெடுக்கப்படவேண்டும்.இதுவே, இன்றைய பூர்ச்சுவாக் கட்சிகள்-அரசுகளுக்கான மாற்றாக மக்கள் தமது உரிமைகளைக் கையிலெடுப்பதென்பதன் நோக்காகும்.இந்த நோக்கே புரட்சகரகட்சியின் தெரிவில் ஒருகட்டத்தின் முன் நிபந்தனையாகும்.இது,முழுக்க-முற்றாக, மக்களது சுய ஆளுமையில், அவர்களது மண்ணிலிருந்தே எழ முடியும்.இதைப் புலம் பெயர் மண்ணில் பெயர்த்தெடுக்க விரும்புபவர்கள் அன்றைய இந்திய மண்ணிலிருந்து இயக்கங்கட்டிப் போரிட்டவர்களது கால் அடிகளை மறந்துவிட முடியுமா?

ஆழ்ந்து யோசித்தால்,இவர்களின் வரலாறு நமக்கு எதிரானதாகவே இருக்கிறது!தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.இத்தகைய வரலாற்றுத் தொடர்ச்சி இன்னொரு முனையில் புரட்சிகர வேடம் பூணும்போது, அதையும் மக்கள் நலனினது தெரிவில்"புரட்சிகரக் கட்சி"யாக எவரும் குறித்துரைக்கலாம். எனினும்,அது கெடுதியான முகவுரை எழுதும்போது புலிகளது அழிவுக்குக் கூறிய காரணத்தால் மீள நம்மைத் தேற்றியுங் கொள்ளலாம்.

இலங்கையில் கட்சி-இயக்க அரசியலானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே நகர்கிறது.


தொடரும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.06.2010

Sunday, June 20, 2010

கட்சிகட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

"கட்சி" கட்டும் அவலத்தின் மீதான கண்ணோட்டம்.

க்களின் எதிரிகள் யார்,நண்பர்கள் யார்? என்ற கேள்விக்கு நாம் நமது கடந்தகால இயக்கங்களது தோற்றுவாயையும்,அவ்வியக்கங்களது போராட்ட செல் நெறியையும் பகுத்தாரயவேண்டும். அவர்களது அந்நியவுறவுகள் மற்றும் அவர்களது,அரசியல் பாதையும் அவசியமான இருவுண்மைகளை நமக்குள் இன்னும் பகர்பவை.

ஒன்று:இன்றும் அந்நியச் சேவைக்காக விலைபோகின்றவர்கள் கடந்தகால இயக்க எச்சங்கள்.

இரண்டு:அதை அடைவதற்காக ப்"புரட்சி-விடுதலை"பேசி மக்களைக் இனியும் கொல்வார்கள்.
- என்பதே அவ்விருவுண்மையும்!

இலங்கையையும்,அந்தத் தேசத்து மக்களையும் அடிமைப்படுத்தித் தமது புவிகோள அரசியலை முன்னெடுக்க விரும்பும் ஆதிக்க சக்திகளோ இன்றைய சூழலைப் பயன்படுத்தி, புரட்சிகரமான அமைப்பைக் காட்டிக் கொடுக்கும் ஒட்டுண்ணிகளைப் புரட்சிகர வாதிகளாக்கி , ஒடுக்கப்படும்இலங்கை மக்களைக் காவு கொள்கிறது.இங்கே,புலம் பெயர்ந்து, நாம் வாழும் மேற்குலகத் தேசங்களில், யாரு உண்மையாகப் பேசுகிறார்கள் என்பதே புரியாதிருக்கும்போது-எவரோடிணைந்து காரியமாற்றுவது,தோழமையைப் பெறுவது?

சமூகத்தின் பெரும்பகுதி மக்களது விடுதலையில் தங்கி இயங்காத எந்த மனிதரும் தனது அரசியற்செயலூக்கத்துக்கு தன்னையறியாமலே ஒரு எல்லையை வைத்திருப்பார்.அந்த எல்லை உணரப்படும்போது இதுகால வரையான அனைத்துப் பரிமாணங்களும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறது.இத்தகைய சூழலில் அவநம்பிக்கையும்,இயலாமையும் புலம் பெயர் சமூகத்தின் பொது எண்ணவோட்டமாக நிலைகொண்டு, தம்மை அந்நியச் சக்திகள் காவுகொள்ள இடமளிக்கிறது.

இன்றைய புலம் பெயர் தமிழ்ச்சமுதாயத்தின் அரசியலானது சமூகத்தை வழி நடத்தும் புரட்சியின் முன் நிபந்தனைகளை வெறும் மொழிவுகளாக்கி வீம்பாக வெளிப்படுத்துகிறது,அந்நியச் சேவையில் பண வரும்படிகண்ட தனி நபர் முனைப்போ சகல முனைகளிலும் தனது நியாயப்பாடுகளைச் சட்டதிட்டங்களை உள்வாங்கவேண்டு மென்றும்- தம்மோடு இணையாதவர்கள்"எதிர்ப்புரட்சி"காரர்களெனவும் முன்வைத்துத் தமது அந்நியச் சேவையைப் புரட்சிகர முலாத்துடன் "வற்புறுத்தி ஏற்கவைக்க" முனைவது மிகவும் வருந்தத் தக்கது.

வர்க்க உணர்வானது வெறும் கருத்தாடல்களால் நிர்மாணிக்க முடியாதது என்பதை மற்றவர்களும் அறிவார்கள் என்பதை இக் கள்வர்கள் அறிவதற்கில்லை.

சமூக வாழ் நிலையால் தீர்மானிக்கப்பட்டு, உற்பத்திச் சக்திகளின் உறவோடு அது உணர்வுபூர்வமாக உள்வாங்கப்படுகிறது.இத்தகைய உறவினால் தீர்மானிக்கப்படும் வர்க்கவுணர்வானது குறைவிருத்திச் சமூகத்தில் ஒரு மொன்னைத் தனமான இரண்டுங்கெட்டான் உணர்வாக நிலை கொள்கிறது.வளர்ச்சியுற்ற தொழில் வளமுடைய நாடுகளில் வர்க்கவுணர்வானது காட்டமாக மழுங்கடிக்கப்பட்டு"காயடிக்கப்பட்ட"மனிதக் கூட்டாகத் தொழிலாள வர்க்கம் வாழ்வைக் கொண்டு செல்லும் இந்த மேற்குலகச் சூழலில் இவர்கள் கட்டமைக்கும் "கட்சி-புரட்சி "யாவும் அந்நியச் சேவை என்பது எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்தாம்.

எனவே,இவர்கள் முன்வைக்கும் தம்மைச் சுற்றிய நியாப்படுத்தல்கள்-அர்த்தமற்ற தனிநபர் வாதங்கள், சக மனிதரை அழித்துவிட முனையும் கருத்தாடல்கள் எதிர் புரட்சிகரமாக மாற்றமுற்று,எதிரியிடம் கைகாட்டும் செயலூக்கமாக விரிவடைகிறது. இந்தக் கற்பனாவாதக் கனவுகளை புரட்சியின் மதிப்பீடுகளால் வர்ணமுலாம் பூசும் அட்டகாசமான குறுங் கருத்தாடல்களாக மாற்றும் வெகுளித்தனமான இன்றைய கட்சிகட்டும் நியாயவாதம், மக்களை வெறும் வெகுளித்தனமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறது.இதற்குப் புரட்சிகரச்சூழல் குறித்து என்ன மதிப்பீடிருக்கிறது?

புலியழிப்புக்கு முன்னிலிருந்து இன்றுவரை தமிழ்ச்சமூகத்தின் இயலாமையானது அந்தச் சமூகத்தின் உழைப்பின்மீதான ஒடுக்குமுறையின் அதீத வன்முறையில் முகிழ்க்கிறது. இன்றுவரையான நமது புரிதல்களுக்கு நேரெதிராகக் காரியமாற்றும் இயக்கவாத மாயை-அந்நிய ஏவற் புத்தி,ஏவற்படை நோக்கம் இலங்கை மக்களது பாரம்பரியமான உழைப்பின் மீதான சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டை உடைத்தெறிந்துள்ளது.


உயிராதாரமிக்க உழைப்பைக் கேவலாமாக்கிவிட்டு,அதன் மையமான முரண்பாடுகளைத் தணிப்பதற்கான சாகசங்களில் தமிழருக்கான"விடுதலை-சுயநிர்ணயம்"எனக் கூவிக்கொண்டு உலகெங்கும் திரிகிறது பற்பல கும்பல்கள்.இவர்கள், திடீர் திடீரெனக் கட்டும் கட்சிகள் உருமாறிச் செல்ல முனையும் அந்நியத் தொழுகையின் மீட்சியாக நமது மக்களுக்கு விடுதலையென புலம்பெயர் தளங்களில் வகுப்பெடுக்கமுனையும் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஏதோவொரு மறைமுகமான வருகையின் தெரிவு மெல்லவெழுகிறது.இதைக் குறித்து மிக அவதானமாகக் கணித்து வரவேண்டியுள்ளது.

மறுபுறமோ,தமிழ் பேசும் மக்களது விடுதலைகுறித்து இயங்கும் நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கிறது.இதை ப்பல தளத்தில் பார்க்க முடியும்.குறிப்பாகச் சொல்வதானால்"லும்பினி" இது நோக்கிப் பயணிக்கிறது.

ஆனால்,
இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.என்றபோதும்,இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் இந்த அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.


மனித சமூகத்தின் கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது, எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டு வைத்திருக்கிறது? ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது!இதுதாம்,இன்றைய அந்நியச் சேவைக்கு அவசியமானது.இதன் தொடர்ச்சி கட்சி கட்டுவதில் வந்து நிற்கிறது.

எதேச்சையாக எதுவும் நடப்பதற்கில்லை.

எல்லாமே ஒழுங்கமைந்த முறைமைகளால் திட்டமிடப்பட்டு உறுதிப்படுத்திய இந்தவுலகத்தில்,

தனி நபர்களின் உதிரித்தனமான புரட்சிகரத் தன்னார்வக் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை?

இவர்களுக்குப் பின்னால் கண்ணிகள் வைத்துள்ளவர்கள் எவர்கள்?

மக்களைத் தமது எஜமானர்களுக்காகக் காலாகாலத்துக்கு முட்டாளாக்கிப்" புரட்சி-விடுதலை"யெனத் தலையெடுக்கும் இந்தக் கோஷ்டிகள் யார்?

இவர்களுக்கும் இன்னல்படும் மக்களது சுயாதீனமான செயற்பாட்டுக்கும் என்ன தொடர்பு?

இது குறித்துக் கருத்தளவில் விவாதித்தலுக்கும் மேலாகத் தற்போதைய அரசியற் சூழலில் இத்தகைய கேடிகளை இனம் கண்டாக வேண்டும்.

அந்நியச் சக்திகளது ஏவலாக இயங்கும் தனி நபர்களின் உதிரித்தனமான "புரட்சிகரத் தன்னார்வ"க் கருத்தாடல்கள்-செயற்பாடுகளின் செயலூக்கமானது எதுவரை? இத்தகைய ஒரு சூழலையே விரும்பிச் செயற்படுத்தும் இந்த தமிழ்த்தேசிய "புலி-புரட்சிகர" ஆதிக்க உலகம்,தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லி ஒவ்வொரு திசையிலும் புரட்சிகரமான கருத்துக்களையும்,அதைத் தமது கோஷ்டிகளுக்குள் உள்வாங்கியும்,போராடும் மக்களுக்குள் கலந்து அவர்களது சுயாதீனமான போராட்ட முனைப்பை முளையிலேயே கிள்ளியெறிந்து வருகிறது.இத்தகைய செயற்பாட்டை மக்களது பெயரால்-விடுதலையால் நியாயப்படுத்தும் இத் திடீர் கட்சிகள்-குழுக்கள் தமது ஏவால் நாய் செயற்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துப் பிழைக்க முனையும் செயலாகத் தமது எஜமானர்களிடம் தாம் வலுவாக மக்களைக் கட்டிவைத்திருப்பதாகச் சாட்சி பகரக் கட்சிகளைத் திடீர் திடீரெனக் கட்டுகிறது.அதை நியாயப்படுத்த நகைப்புக்கிடமான காரணங்களை அது அடுக்குகிறது. இந்த தளத்தின் வெகுளித்தனமான நம்பிக்கையை என்னவென்பது?

இத்தகைய பழைய இயக்கங்களது கோஷ்டிகள்-குழுக்கள் முன்வைக்கும் வர்ணமுலாம் பூசப்பட்ட புரட்சிகரச் சவடால்கள் வெறும் கழிப்பறைக் காகிதங்களாகக் கிடக்கின்றன.இவர்களது அடி தொட்டு அலசப்படும் போராட்டச் செல் நெறியும்,யுத்த தந்திரங்களும் இந்தக் கொடூரமான உலகத்தின் ஏதோவொரு ஆதிக்க சக்திகளுக்கானது.அவர்களது நலனுக்கான தெரிவுகளை மக்களது பெயரால் முன்தள்ளித் தமது தொடர் வருமானத்தைக் காக்கும் இத்தகைய குழுக்கள் நவமூலதனச் சுற்றோட்டப் பாதையில் தமிழ்ச் சமூகத்தின் அமுக்கக் குழுவாக மாறுகிறது.இஃது, நல்லதற்கான அனைத்து வாய்பையும் முறியடித்தே மேலெழுகிறது.


இவர்களை வெற்றி கொள்ளத் தக்க எந்தத் தகுதியுமற்று நாம் கிடக்கும்போது,தமிழ் மக்களுக்கு உண்மையாக உழைக்கும் அச் சமுதாயத்தின் உறுப்பினர்களும்-தனிநபர்களும் அதீதமான உணர்வெழுச்சிக்குள் சிக்குண்டு, இத்தகைய போலிகளை-அந்நியச் சேவகர்களை நம்பி,அவர்களை முன்வைத்து மிகையான கனவுகளை விதைப்பதில் காலத்தைக் கடத்துவது நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தவே செய்யும்.

நாம் இது குறித்துச் சிந்திக்கின்றோமா?

புலம்பெயர் தளத்தில் திடீர் கட்சிகட்டும் நபர்களது நோக்கம் என்ன? அறிவின்மீதான நம்பிக்கையானது எந்த அத்திவாரத்தில் கட்டப்பட்டதோ அந்த நம்பிக்கையானது இன்று நமக்குக் கை கொடுப்பதாகவில்லை.அந்த அறிவு மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பதில் தன் சூரத்தனத்தைக் காட்டுகிறது.இது,தனது எஜமான விசுவாசத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தத் தனது இருப்புக்கான போராட்டத்தைப் பல திசைகளில் நடாத்த முனைகிறது.இதன் தொடராகத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அனைத்துப் போராட்ட முனைப்புகளையும் தனக்குள் உள்வாங்க முனைகிறது. இது நடாவத நிலைகளில், அதைத் தொடர்ந்து எதிர்ப்பதிலும்-தூற்றுவதிலும் தன்னைப் புரட்சியின் பெயரால் புனிதப்படுத்திக் கொள்கிறது.தேர்ந்தெடுத்த நபர்கள் இதன் நிரைப்படுத்தல்களைத் திசை புரியாத கருத்துகளால் நியாயப்படுத்தத் தவறுவதில்லை!

இலங்கை மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும்அந்நியச் சக்திகளுக்கு இரையாக்கிவரும் சூழலுக்குள் மாட்டுண்டு கிடக்கும் நாம்,எம்மை மிகைப்படுத்திக்கொண்டு புரட்சி பேசுகிறோம்.இஃது,பொய்யானது.

தமிழ்பேசும் மக்களுக்கு-இலங்கை மக்களுக்கு இவர்களால்-நம்மால் நாசமேயொழிய எந்தப் பயனுமில்லை. புரட்சிகரக்கட்சி-இயக்கம் என்பதெல்லாம் அந்த மண்ணில் அவர்களது போராட்டச் சூழலில் ,அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சிகர நிலைவரங்களுக்கொப்பவே மேலெழமுடியும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்யும் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும்பின்னால் ஏதோவொரு சக்தி மறைந்திருக்கிறது.அஃது,பழைய இயக்கவாதக்காரர்களிடம் பலமாக வேரூன்றியுள்ளது என்றவுண்மையை நாம் தெரிந்தாகவேண்டும்.


மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால்,தமிழ்பேசும் மக்களைக் காவுகொண்ட இயக்கவாதமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் அந்நியச் சக்திகளோடிணைந்து வலுவாகச் செய்து வருகிறது. இது,புலிகளாகவிருந்தாலுஞ்சரி இல்லை மாற்றுக் குழுக்களாகவிருந்தாலுஞ்சரி தொடர்கதையாக நடந்தேறுகிறது. புலிவலுவாக இருந்தபோது புலியே தனித்துத் தமது எஜமானர்களது நோக்கத்தை நிறைவேற்றிப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்கியது.அதன் பாத்திரம் அப்போது மேற்குலகத்தின் அடியாட்பாத்திரமாகும்.

இப்போது,
தென்னாசியப் பிராந்தியத்தில் நிலையெடுத்துவரும் சீனா-இந்திய மூலதனமானது மேற்கைப் பழிவாங்கும்போது,தென்னாசியாவில்-இலங்கையில் மேற்குலக ஆர்வங்களை மீள நிலைப்படுத்தப் புலியில்லாத சூழலில் பல குழுக்கள் அப்பாத்திரத்தை உள்வாங்க முனைகிறார்கள்.இங்கே,பற்பல குழுக்கள் புதிய கட்சிகளைக் கட்டித் தமது எஜமானர்களது செல்லப் பிள்ளைகளாக முனையுந்தருணங்கள் புரட்சிப் பயணமில்லை என்பது எனது நிச்சியமான வாதமாகும்.


இன்று, பற்பல முனைகளில்-தளங்களிலிருந்து ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரிகளை உலகத்தின் முதற்றர எதிரிகளாகக் கண்டு,அவர்களை(தேசங்களை-ஆளும் வர்க்கத்தை) எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அத்தகையச் சூத்திரதாரிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், புரட்சி பேசி எல்லாவற்றையும் மறுப்பதற்கும்(புரட்சியையொடுக்குவதற்கு) உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?

நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இது, குறித்து இலங்கையில்-புலம் பெயர் சூழலில் மக்கள் நலன்சார்ந்து செயற்ப்படுபவர்கள் சிந்தித்தாகவேண்டும்.இன்றைய சூழலில் எவரும் தம்மால்-தமது அமைப்பால் புரட்சி முன்னெடுக்கும் தகுதி குறித்து உரையாட முடியாது.மக்கள்தாம் தமது விடுதலையைக் குறித்து இயங்குபவர்கள்.புலம்பெயர் தளத்தில் கருக்கொள்ளும் கட்சிவடிவங்கள் யாவும் நமது மக்களை மேலும் அடிமைப்படுத்தும் பொறிமுறையோடு புரட்சி பேசுவது அவர்களது எஜமானர்களுக்கானதென்பது புரியப்பட்டேயாகவேண்டும்.

திடீர் கட்சி கட்டும்தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு "பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.
மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. அஃது, "கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி",இன்று, விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.

இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய ஊகவணிகம் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு - உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.எனினும்,தமிழ் மக்களுக்குப் புரட்சிப்படங்காட்டும் மூளையோ அமெரிக்கப் பாணியில் "என்னோடு நிற்பவன் ஜனநாயகவாதி அல்லாதவன் பயங்கரவாதி" எனும் தார்ப்பாரில்"புரட்சி-எதிர்ப்புரட்சி"ப்பாடம் நடாத்துகிறது.இந்த அநியாயத்தை யாரும் கேட்பாரில்லை!

"மே 18 இயக்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"இன்னும் எத்தனை முன் அணிகளும்,இயக்கங்களும் உருவாகுமோ அத்தனையும் உருவாகி விடட்டும்.அப்போதாவது,மக்கள்-நிலத்தில் வாழும் மக்கள் தமது எதிரிகளைத் தமக்குள் இனங்காணும் காலமொன்று உருவாகிறதா பார்ப்போம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.06.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...