Monday, May 24, 2010

புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் ...

புரட்சிரச்சக்தியாக நடிக்கும்
ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.




சிறு கவனக் குறிப்பு.



"குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு
கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்
மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்
தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை
தேசமே விருப்புறுதியாகி
இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது!


புலம்பெயர் நாடுகளில்
சாவோலை படித்துக்கொண்டிருக்கும் சில கிழட்டு நரிகள்
கருப்புத்துண்டை கக்கட்டில் சொரிகியபடி
சில்லறைக்கு மௌனித்துக்கொள்ளும் ஒளிச் சட்டகத்துள்


ஊராரின் உயிர்கள்
தேசமென்ற அரக்கியின் பெயரால் வேள்வியாக்பட்டு புதை குழி நிரம்பியது!
கேட்பாரின்றிக் கோலாச்சிய மொழித் தர்பார்
உயிரினது உச்சந் தலையில் மோதிக்கொண்டது..."



டுக்கப்படும் வர்க்க மனிதரை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள் . நடந்த முடிந்தவை முடிந்துபோனவையாகவும்,முயற்சியில் இது தவிர்க்கமுடியாததாகவும் உரைக்கப்படுகிறது.புலம் பெயர் தமிழர்களுக்குள் கொட்டப்படும் புலிசார் மதிப்பீடுகள் யாவும் பிழையான தெரிவுகளை இளைஞர்களுக்குள் கட்டியமைக்கிறதோ இல்லையோ அவர்களது சுயதெரிவை இது மழுங்கடிக்கிறது.எல்லாப் பொழுதிலும்"தேசியம்-தமிழ்-தேசம்"அவர்களது நியாயவாதமாகப்படுகிறது.


தனக்குச் சம்பந்தமே இல்லாத தெரிவுகளால் பட்டு அவஸ்த்தைப்படும் இலங்கைவாழ் தமிழர்கள்,மீளவும் புதியதைத் தெரிந்துகொள்ளத் தடையாக"நாடுகடந்த தமிழ்த் தேசம்"அவர்களை இராணவக் கெடுபிடிக்குள் முடக்கியுள்ளது.


புலிகள் போரிட்ட இலங்கையின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது. இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு,குறிப்பாக இலங்கையில் இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான புலிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு, மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கிய இழி நிலையில் புலிகள் அழிந்தே போயினர்.எனினும்,களத்துப் புலிகளது மரணத்தில் காசுசேர்த்த சதிகாரக்கூட்டம் மீண்டும்,மீண்டும் பற்பல வேடம் போடுகிறது.


"நாடுகடந்த தமிழீழம்சார்ந்தும்,எதிர்த்தும்,புரட்சிபேசியும்"புலிகள்-புலத்துப் பினாமிகளென ஒவ்வொருவரும் ஏதோ வகையில் இணைந்தபடி புலம்பெயர்தமிழர்களைத் தமக்குள் இணைத்துக்கொள்ளப் பொறிமுறைகளைத் தகவமைக்கின்றனர்.இதில் எவரையும் இலகுவாக இனங்காண முடிவதில்லை!எல்லோருமே புரட்சி-விடுதலையெனத் தத்தமக்குச் சொந்தங்கொண்டாடுவதில் மக்களது தெரிவு என்னவாக இருக்க முடியும்?


புலம்பெயர் தமிழ் மக்கள் பலியாகும் அரசியலானது இதுவரை பல இலட்சம் தமிழ்-முஸ்லீம்,சிங்கள மக்களைப் பலியெடுத்தும் அவர்களது சமூகவாழ்வைச் சிதறடித்துவிட்டும்வியாபாரஞ் செய்வதில் குறியாகவிருக்கிறது. இதற்குப்புலத்து-நிலத்து மக்களது வாழ்வு மூலதனமாக்கப்படுவதில் தமிழ்பேசும் மனிதவுடலானது அந்த அரசியல்- அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத்தமிழ்த் தேசிய நடாத்தையால் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம்" மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.




தேசியம்-தேசம்-பண்பாடு என்ற வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.


தமிழையும்,தேசியத்தையும்,பண்பாட்டையுஞ்சொல்லித் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துவிட்ட தமிழ் மேட்டுக்குடிகள் இப்போது ஒருகிணையுந்தளம் வர்க்க எதிரிகளைத் தீர்த்துக்கட்டும் ஒடுக்குமுறையாளர்களது தளமாகவே இருக்கிறது.இதற்காகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுப்புகளைக் காட்டிக்கொடுப்பதும் அதன்வழி இல்லாதாக்குவதற்கும் அவர்களே"புரட்சிகரமான"அணியாக உருவாகி வருகிறார்கள்.இதை இனங்காணுவதென்பது மிகக்கடினமாகும்.அவர்கள் தமக்கான வரலாறைப் போலிப் புரட்சிகரக் குரல்களின்வழி நிறுவிக்கொண்ட கடந்தகாலம் நம்மையெல்லாம் உதிரிகாளாக்கிவிட்டுள்து.இதில் புலிகளது அரசியல் மிக விவேகமாக அந்நியர்களது பணிப்பின்படி நடந்துள்ளது.இதை இனங்காண்பதும்,அதை முறியடிப்பதென்பதும் இன்னொரு புலிவழிப்பட்ட அல்லது சார்புடைய அணிகளுக்குள் நம்மை விழுத்துவதில் போய் முடியலாம்.அது,ஒரு நெருக்கடியான இன்றைய சூழலில் சாத்தியமாகலாம்.இதைக் குறித்து முன்கூட்டிப் பேசுவது அவசியமானதுதாம்.புலம் பெயர்வுச் சூழலில் ஒவ்வொருவரும் சொந்தங்கொண்டாடும் அரசியலில் மடிந்தவர்கள் பலர்.புரட்சியின் பெயரால் நடந்தேறிய குழிபறிப்பில் புலிகளது இருப்பு நியாயமுற்ற தமிழ்ச் சமுதாயத்தில் இதைவிட மேலான அரசியல் அரும்ப முடியாதுதாம்.என்றபோதும்,இதைக்குறித்த சரியான தேடுதல் அவசியமாகிறது.இங்கே,இனங்காணும் செயற்பாடுகள் அவசியமாகிறது.



புலிகள் என்ற அமைப்பு, முழுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் தம்மைப்போலவே உருவாக்கித் தமது அடியாட்பாத்திரத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்துவிட்ட வரலாற்றுப்பாத்திரத்தில்
புலிகள் உழைக்கும் வர்க்கத்தின் பரம எதிரி-பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களது வர்க்க எதிரி.இதுவேதாம் இன்றைய புலிகளது நிலைக்கான சரியான தெரிவு.இதுவேதாம்,அந்நிய அடியாட்படையென நாம் புலிகளை வரையறை செய்ததற்கான அடிப்படைக் காரணம்.அதன் உச்சபட்ச அரசியலை இன்றைக்குப் புரிவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் சமூக இருப்புப் பலமானதாகவில்லை.புலம்பெயர் சமூகம்மிகவும் முரண்படுதன்மைகளை -பொருந்தாத்தன்மைகளை தன்னகத்தே கொண்டுடியங்குகிறது,இணக்கமற்ற இருவேறு அணுகுமுறைகளின் ஒருமாதிரி சேர்க்கையிலேதாம் புலம் பெயர் தமிழ்மக்களினது இருப்பே தங்கியுள்ளது. இங்கெல்லாம் நாம் நமது வாழ்வை சமூகக்கூட்டாகமைக்க முடியவில்லை .இதனால் சமுதாயரீதியான அணுகுமுறையற்றுப்போவதால் குழுவாரீயான அணுகுமுறையே நிலவுவதால் அஃது ஒன்று,மற்றது: தனிநபர்வாத அணுகுமுறை! குழுவாரியான அணுகுமுறைக்குள் சிறு சுய அமைப்பாண்மையும்,ஆற்றலையும் காணும்போது மறுபுறத்திலோ தனிநபர்வாத அணுகுமுறை எல்லாச்சீரழிவுக்கும் பசளையிடும் காரியத்தில் இயங்கிக்கொள்கிறது.


இத்தகைய தனிநபர்வாத அணுகுமுறை பழைய குட்டிப் பூர்ச்சுவா குணாம்சம் காரணமாக மிகவும் இறுக்கமான மரபுசார்ந்து செயற்படும் தந்திரத்தில் மையங்கொண்டுள்ளது, இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருப்பதற்கேற்வாறு புலிகளினது தளங்கள்செயற்படுகிறது.இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை "ஜனநாயக வாதிகளாக"க்காட்டிக் கொண்டும்,புரட்சிக்காரர்களாகக் காட்டிக்கொண்டும் பல்வேறு முகாங்களாகத் தம்மைத் தகவமைத்து மக்களரங்குக்கு வருகிறார்கள்.இவர்களது வரலாற்றைத் தோண்டி அம்பலப்படுத்தாமல் இலங்கைவாழ்மக்களது விடுதலையென்பது பகற்கனவானது.


புலி அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.களப் புலிகளது அழிவுக்குப்பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில்புரட்சிக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"தமிழ்த் தேசியத்தின்"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்து வருகிறது.சேரன் போன்ற மேட்டுக்குடிச் சிந்தனையாளர்கள் இதையொரு தொழிலாகவே இப்போது செய்து வருகின்றனர்.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த இனவாதப் பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.இதுதாம் தமிழ்சிந்தனை மரபாக இதுவரை செயற்படுகிறது!



நமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமான இந்தத் "தமிழீழ"அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக எவரொருவர் இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே.ஏனெனில்,இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து,மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும்,புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவித்தற்கும்,துரோகிகளாக அழித்தற்கும் இவர்களே உடந்தையாக இருந்தவர்கள்.இவர்களே இப்போது புலியினதும்-புரட்சியினதும் பேச்சாளர்களாக வலம் வருகிறார்கள்.


நாடுகடந்த தமிழீழ அரசுக்காரர்கள் புரிய மறுக்கும் இலங்கைச் சிங்களச் சமுதாயமானது, இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது, இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதையே ஒத்திசைவாகச் செயற்படுத்த உதவிய புலிவழிச் சிந்தனையாளர்கள் இப்போது நாடுகடந்த அரசுக்கு முண்டுகொடுப்பதில் புலம்பெயர்-நிலத்துத் தமிழ் மக்களை அதிகார மையங்களுக்கு அடிமையாக்கின்றனர்.


தமிழ்மக்களை இரசித்துக் கொல்வதற்கு வழிகாட்டிய தத்துவம் என்ன?


அதன் பின்னால் தெரிவுகளாகிய நலன்கள் யாருடையது?

கடந்தகாலப் புலிகளது போராட்ட வரலாற்றில் கொன்று கவர்வது வழமையானதாகவே இருக்கிறது.மிகச் சிக்கலான பொருள் குவிக்கும் புலிப் பினாமிகளின்ஆசையானது பின்னோக்கிய கற்காலத்தைத்தாண்டியும், இன்றைய பின் முதலாளித்துவச் சூழல்குறித்துக் கருத்தாடும் மனிதச் சமுதாயத்தில் மிக நரித்தனமாகவே உரிமை-தேசியம்-சுயநிர்ணயம் குறித்துப் பேசுகிறது.


புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய களத்து-புலத்துப் புலிகள், இன்றும் தமது கைவரிசையை புலத்தில் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின்அணிச் சூழல் நல்ல உதாரணம்.இவர்கள் பேசும் புரட்சிகரச் செயற்பாடு,அணிச் சேர்க்கை,புலிகளுக்குகெதிரான செயற்பாடு,புலிவழித் தேசியத்தை அம்பலப்படுத்தல் என்பதெல்லாம் ஏதோவொரு தளத்துக்குகிசைவானதாகவே இருக்கிறது.அந்தத் தளத்தை அறிவதே இன்றைய மக்கள் நல அரசியலாக இருக்க முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
24.05.2010

Tuesday, May 18, 2010

முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம்

டந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் செய்ய முனைவதில் நாளை மீளவொரு ஈழத்தைக் காணலாம்.இன்று, நாடுகடந்து அதைக்(ஈழத்தை)கண்ட புலத்துப் புலிகள் மக்களது உரிமைக்கான போராட்டத்தில் புதிய திசைவழிகளைக் கண்டதாக "நாடுகடந்த தமிழீழ அரசை"ப் பிரகடனப்படுத்தக் களத்துப் புலிகள் வன்னிக்குள் பலமாக இருந்து, ஒரு பெரும் நிலப்பரப்பைக் கட்டியாண்டபோதுங்கூடச் செய்ய விரும்பாத"தமிழீழப் பிரகடனத்தை"இப்போது தேர்தல்-வாக்கெடுப்பின் மூலம் பிரகடனப்படுத்திய புலத்துப் புலிகள் உண்மையில் "வீரம்"செறிந்த மறவர்கள்தாம்.


அவர்கள் "தமிழருக்கான ஊடகத்தில்"கட்டியமைக்கும் "ஈழம்-தமிழ் மண்"யாவும் அவர்கள்கூறும் பிரபாகரன் வரும் வரை நிலைத்திருக்கும்.அது,எல்லாத் தரப்பாலும் தமிழருக்கான உரிமைக்கான குரலின்-போராட்டத்தின் தொடர்ச்சியெனக் கட்டியமைக்கும் முனைப்பில் பலர் முனைவதும் ஈழத்திற்கான வகைமாதிரிப் போரெனக் கொள்க!




ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு-நாடுகடந்த தமிழீழ அரசு)தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களது குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய "நாடுகடந்த தமிழீழ அரச" நிறுவனர்கள்-உறுப்பினர்கள், நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வெறுத்தொதுக்கத் தக்க கருத்து நிலைக் கதம்ப எழுத்தாகுமா?


"நாடு கடந்த" இவ்வரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒருசில புலத்துப் புலிக்குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும் மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.இது,வருங்காலத்தில் முழுமொத்தப் புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏதோவொரு திசையில் தமது நோக்கிற்கிணங்கப் பயன் படுத்தும்.



"தேசியத் தலைவர்"பிரபாகரன் சரணடைய வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது அவரோடு புதைக்கப்பட்ட"தமிழீழம்"இப்போது நாடுகடத்தப்பட்டு புலத்துப் புலிகளது அனைத்துவகைக் குறுகிய நோக்குக்கும் இசைவாகப் பயன் படுத்தப்படுகிறது.இதன் பயன் இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களது உரிமைக்கான அடுத்த கட்டப் போராட்டத் திசையின்தெரிவாகவும் வலிந்துகூறும் புலிப்பார்வைகள், இதுவரையான புலிவழிப் போராட்டத்தின் அழிவைக்குறித்து மௌனிக்கிறது.அதைத் திரும்பிப் பார்ப்பதற்கு அது மறுத்தொதுக்குவது புலித் தலைவரை உயிர்த்திருக்க வைப்பதன் தொடரில் நியாயமுறுகிறது.இனவாதத்தை உயிர்த்திருக்கவைத்து மக்களை ஏய்த்துப் பலியாக்கும் அரசியலைப் புலிகள் தமிழீழப் போராட்டத்தினூடாக இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான இனஞ்சார் அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது.இஃது, கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு" தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.


இதன்வழி, மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற திட்டமிடப்பட்ட பாசிச இராணுவாதம், இலங்கை அரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, "இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக" ஒரு பகுதி புலிசார் தமிழ்பயங்கரவாத மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி, முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை-இந்திய,சீன ஆளும்வர்க்கங்கள்.இதற்கான அனைத்துவகை இசைவுத் தளத்தையும் செய்வித்த புலிப் போராட்டம், இறுதியில் தமது எஜமானர்களது கையினாலேயே கடந்த வருடம் மே 18 இல் அழித்தொழிக்கப்பட்டது.




இத்தொடரான இன்றைய இலங்கை அரசியலின் போக்கானது, மிகவும் கொடிய இராணுவத்தன்மையிலானவொரு அரசவடிவத்தை, இலங்கைக்குள் நிலைப்படுத்துவதில் போய் முடிந்த துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தை கொண்டு சென்றுள்ளது.இதை மாற்றுவதற்கான எந்த பொருளாதார நகர்வும் தனக்கான பொதுமைப்பட்ட கோரிக்கைகளை முன்தள்ள முடியாதவொரு நிலையில்இப்போது உலகப் பொருளாதார நிலைமைகள் உருவாகியுள்ளபோது, இலங்கையின்பெயரளவிலான ஜனநாயத் தன்மை முற்றிலும் சீரழிந்துள்ளது.இலங்கை அரசினது புலியழிப்பு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து அதன் இறுதி இலக்கு எட்டும்வரை, இலங்கை அரசு சிங்கள அரசாகவே நடந்துகொண்டது.அதன் உண்மையான இலக்கு என்பது சிங்கள ஆதிக்கத்தை இலங்கை வாழ் மற்றைய இனங்கள்மீது திணிப்பதாகவும், அதன் வாயிலாக இனவொடுக்குதலின் உச்சபட்ச சாத்தியத்தை கொண்டியக்குவதாகவும் இருந்தது.இதன் ஊக்கத்துக்கு புலயினது பாசிச அகங்கார நடாத்தை(நான்காம் கட்ட ஈழப்போர் போர் இம் முறை முழு இலங்கையிலும் இரத்த ஆற்றைத் திறக்கும்-தமிழ்ச் செல்வன்) மிக அண்மித்த கருத்தியற்பலத்தை இவ்வரசுக்கு அன்று, வழங்கியிருந்தது.


"தமிழீழத்தனி அரசுக்கான" போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ்உதிரிச் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல்(சம்பந்தன்-சிவாஜிலிங்கம்அரசியல்) முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத சமூக யதார்த்தைக் கோரிக்கொண்டிருக்கிறது. இஃது,முழுமொத்த இலங்கைவாழ் தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கும் முக்கியமான காரணியாக விருத்தியாகியுள்ளது.இதந்த அவலத்தின் தொடராகப் புலத்தில் "நாடுகடந்த தமிழீழ அரசு"அமைக்கப்பட்டு, ஒப்பாரி முள்ளிவாய்க்கால் நினைவாக எமது காதுகளில் கொட்டப்படுகிறது!


இந்த முள்ளி வாய்க்கால்வன்னி மக்கள்- புலிகள் அழிவு குறித்து இன்று நினைவு கூறுவதாகவிருந்தால்"காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில், புலிகளும் தமக்கான பங்கை உயிர்ப்பலிகளினூடே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம்ஆற்றியுள்ளார்கள்" என்று கூறுவதைத் தவிர வேறென்னத்தை நினைத்து உருக முடியும்?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.05.2010

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...