Friday, June 26, 2009

பிரபாகரனுக்குச் சங்கூதிய மகிந்தாவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது.

இலங்கை அரசும்,ஜோதிட நம்பிக்கைக்கு அப்பாலான சில நகர்வும்


சிறு குறிப்பு.


"குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.அது,தமது தலைமையையே காட்டிக்கொடுத்துக் கொன்றதன்பின்னே இப்போது கதைவிடும் அரசியல் வெளியகத் தமிழீழ அரசென்பதாகவும் விரிகிறது.இந்த நிலையில் தமிழ் ஆளும் வர்க்கத்து இன்னொரு பிரிவு புலிகளது ஐரோப்பியத் தலைமைக்கு மாறாக இலங்கை அரசோடு இணைந்த "மகிந்தாவை நம்பலாமா இல்லையாவென"ச் சரடுவிடுகிறது.இவர்களுக்குள் தமது வாழ்வைப் பறிகொடுத்த தமிழ்பேசும் மக்களது வாழ்வில் துரோகத்தலைமைகளது நெருக்குதலே தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது.


தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.



இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.உளவியற் பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.இந்த நிலையாலேதாம் பிரபாகரனது மரணத்தையே புரட்டிப்போட்டுப் பொய்யுரைக்க முடிகிறது.இத்தகையத் தமிழ்ச் சிந்தனைப்போக்கிலிருந்தாம் இலங்கை அரசினது ஜோதிடர் மீதான கைது குறித்தக் கருத்தும் கட்டப்படுகிறது.இலங்கை அரசை மிக நுணுக்கமாக ஆய்ந்து அதன் போக்கை அம்பலப்படுத்த முடியாத தமிழ் ஊடகங்களுக்கு முன்னோடியாக இந்த பீ.பீ.சீ. தமிழ் செய்தியரங்கம் இருக்கிறது.


"இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் ஆட்சிக்கு வருவார் என்று ஆரூடம் கூறிய பிரபல ஜோதிடர் ஒருவர் கைதுசெயப்பட்டிருப்பதை பொலிஸார் உறுதிசெய்துள்ளனர்.
சந்திரஸ்ரீ பண்டார என்ற அந்த ஜோதிடர், எதன் அடிப்படையில் அவ்வாறு ஆரூடம் கூறினார் என்று கண்டறிவதற்காக அவரை விசாரித்துவருவதாக பொலிஸ் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
கிரக நிலை மாற்றங்கள் காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டின் பிரதமர் அதிபராகிவிடுவார் என தனது வாராந்திர சஞ்சிகையில் சந்திரஸ்ரீ பண்டார ஆரூடம் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்ற இராணுவ வெற்றியை அடுத்து அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டில் பெரும் செல்வாக்கு காணப்படுகிற தற்போதைய நிலையில், இந்த ஜோதிடக் கணிப்பு வெளிவந்துள்ளது."

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml


பீ.பீ.சீ.தமிழ, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சாஸ்திரியை முன்வைது இலங்கை அரசியலை மதிப்பிடுகிறது.அதையே சோபாசக்தியிடம்"இலங்கை அரசு ஜோதிடத்தையே சீரியஸ்சாக எடுத்துவிட்டதாக"கேள்வி தொடுக்கிறது.






இங்கே ஒரு அரசினது நடவடிக்கையின் பின்னே உருவாகியுள்ள முரண்பாடுகள்-வியூகங்கள் குறித்துக் கருத்தெழுப்பமுடியாத செய்தியாளர்களுக்குச் சோபாசக்தியாலும் தெளிவான அரசியற்போக்கை-மதிப்பீடுகளைச் சொல்ல முடியவில்லை!


மகிந்தா குடும்பத்தின் ஆதிக்கம்மீதான ஜோதிடரின் எதிர்வுகூறலுக்குள் இயங்கும் சமூக உளவியலில் உணரப்படும் அரசியல் சாணாக்கியம் அதன்மீதான அனைத்து அச்சத்தையும் இனங்காணத்தக்க இன்றைய போக்கில், இலங்கையில் பாசிசத்தின் உச்சக்கட்டம் கோலாச்சுவதை இனங்காணமுடியும்.பாசிஸ்ட்டுக்கள் தமது நிழலைக்கூடக் கண்டு அச்சமுறுபவர்கள்.அதனாற்றாம் பாசிஸ்ட்டுக்கள் கொலைகளைத் தாரளமாகச் செய்து தம்மைக் காப்பதற்கெடுக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுத் தேசத்தில் காட்டாட்சியைத் தொடருகிறார்கள்.இதற்கு உதாரணம் அவசியமில்லை!


இன்றைய இலங்கையைத் தகவமைக்கும் ஆசிய மூலதனத்தின் நகர்வில் மகிந்தாவின் இருப்பு மிகப்பிரதானமானதாக மாறுகிறது.அங்கே, ஜோதிடர் வடிவில் இயங்கும் கருத்து இதற்கு எதிர்மறையாக இயங்குகிறது.இதை அனுமதித்து இயக்கும் மூன்றாந்தரப்பு யாராக இருக்கும்?இதுதாம் இலங்கையினது அரசமட்டத்தில் இப்போதுள்ள கேள்வியாக மாறி ஜோதிடர் கைதுவரை நிலைமை மாற்றமுறுகிறது.மகிந்தாவைப் போட்டுத்தள்ளும் சதி இலங்கையில் நிகழும் என்பதை உறுதிப்படுத்தச் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்குமென இன்றைய அரச-கட்சி ஆதிக்கத்தில் நம்ப முடியும்.அன்று, பண்டாரநாயக்காவைப் படுகொலை செய்த புத்தபிக்கு ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றநிலையில் இன்றைய ஜோதிடருக்குள் புகுந்துகொண்ட பூதம் எது?



புலிகளை வேட்டையாடிய மகிந்தா குடும்பம்,வெறுமனவே ஜோதிடர் கருத்து என்று தமக்கு எதிரான அடுத்த நகர்வை விட்டுவிட அவர்கள் அடிமுட்டாள்களில்லை.திடமான அரசியல் திட்டமிடலுடன் இராணுவச் சர்வதிகாரத்தை ஜனநாயகத்தின் போர்வையில் அனுமதிக்கும் இலங்கைச் சட்டவாத அரசுக்கு இது மிக அவசியமான ஆய்வு-புலனாய்வுத் தேர்வுதாம்.


ஜோதிடர் தனது அரசியல் நடாத்தைகளை அல்லது தனக்குள் கசிந்த செய்திகளை மறைக்கப் "பிரபாவைத் தானே சூனியங் செய்து கொன்றதாக"ச் சொல்லித் தன்னையொரு மெண்டலாகக்காட்ட முனைதலின் பின்னே ஏதோவொரு உண்மை உறங்குகிறது.



இது, அடுத்தடுத்து இலங்கையில் நிச்சியம் குண்டுகளாக வெடிக்கும்.



இக் குண்டுகள் புலிகளது குண்டுகளாக இதுவரை காட்டப்பட்டபோது சிங்களவர்கள் தமிழ்மக்கள்மீது கறுப்படைந்தார்கள்.இனிமேல் புலிகளது இடத்துக்கு இன்னொரு எலிகள்-பூனைகள் வரவேண்டிய தேவை இருக்கிறது இலங்கையில்.உலகு தழுவிய வர்த்தக வலைப்பின்னல்-இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வறிதலையும் காவுகொண்ட நிலைவேறு,நம்மைக் கொத்தடிமைகளாக்கி விட்டபடி.இது,ஒரு அரசின்மீதான அனைத்துக் கேள்விகளையும் வெறுமனவே தமிழர்கள்-இலங்கை மக்கள்மீதான ஒடுக்குமுறையாகவே பார்க்கிறது.



இன்றைக்கு இலங்கையில் ஆங்காங்கே மேலெழும் அனைத்து அரசியல் அமுக்கமும் ஏதொவொரு தேசத்தின் நலனோடு பிணைக்கப்பட்டுளது.இங்கே மூன்றா முலக,வளர்முக நாடுகளின் வர்த்தகக் கூட்டானது தனது(இலங்கை ஆளும் வர்க்கம்) கேவலமான கூட்டுக்களால் மேலைத்தேசங்களின் நலனுக்கேற்றவாறு தமதும்,தமது மக்களினதும் வளங்களைக் கொள்ளையிட அனுமதிக்கின்றது.இந்த அனுமதியில் பழிவாங்கப்படும் ஒரு தேசம் எதிர்வினையாற்றும்போது நிகழும் அரசியல் தெரிவில் ஜோதிடரது குரலும் இணைக்கிறது.இங்கே,அவரைக் கைது செய்து விசாரிப்பது பிரபாகரனுக்குச் சங்கூதிய மகிந்தாவுக்கு நல்ல பாடமாக இருக்கிறது.



இத்தகைய செயற்பாட்டால்-அரசியல்-சமூகவாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்,அதையெதிர்க்கத் திரணியற்ற தமிழ் அமைப்புகள் மற்றும் குழுமம் இலங்கை அரசினது நடவடிக்கைகளை வெறும் மனம்போன போக்கில் கருத்தாடுவது தமிழ்ச் சமுதாயத்தின் பொதுபுத்திக்கிசைவான உளவியலுடன் உறவுடையதாகிறது.முன்னெப்போதையும்விட இன்று நமது தேசிய அலகுகளைக் காப்பதற்கான போராட்டம் அவசியமாகிறது.அதைக் கட்சியரசியலானது தனது நலனுக்கும்,அந்நிய நலனுக்கேற்றவாறும் கையகப்படுத்தி ,ஒரு கட்டத்தில் நீர்த்துப்போக வைக்கத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இதன் உச்சபச்ச வெளிப்பாடுதாம் புலிகளது "ஈழப் போராட்டம்"மற்றும் தலைமையினதும் போராளிகளதும் பூண்டோடான அழிவும் நடந்தேறியது.



வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு இயக்கி வருகிறார்கள்.அவ்வண்ணமே கட்சிகள்-இயக்கங்கள்-தொண்டு நிறுவனங்கள்,பூசாரிகள்,ஜோதிடர்கள்,மசிர்,மண் எனப் பலவும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
27.06.09

Friday, June 12, 2009

பொறுக்கி:ஈழம்,புலி,புலம்.

பொறுக்கி:ஈழம்,புலி,புலம்.

-சில குறிப்புகள் புலிகள் குறித்து...

//இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால்
பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனைய
சிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு
எதிராகவே துப்பாக்கி தூக்கவும், இறுதியில் இன்று அழிந்து போகவும் காரணம் எங்களிடம்
இருக்கின்ற "புலிச்" சித்தாந்தமும்தான். இதிலிருந்து முறித்துக்கொள்ளாதவரை, இந்தச்
சித்தாந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காதவரை இப்போதிருக்கின்ற
சூனியத்தைக் கடப்பதும், அடுத்த நகர்வுக்கும் போவதும் பற்றிப் பேசுவது…//

http://porukki.weblogs.us/2009/06/12/eelam_puli_pulam/




நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் உள்ளத்தை வாசிப்பதில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டேன்.தங்கள் கருத்துக்கள்-புலிபற்றியதும் ஏனைய இயக்கங்கள் குறித்ததுமான பார்வைகள் சரியானது.என்றபோதும்,புலிகளைத் தவறான பாதையோடு(எதிரியை நண்பனாகவும்,நண்பனை எதிரியாகவும்.இது வர்க்க நிலையிலிருந்து பார்க்கும் எதிரி-நண்பன் என்றாகப் புரிக.) நகர்த்திய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கு மிக அண்மைய நடாத்தை(புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்தது)திடீரென உருவாகியது அல்ல.இதை வெறும் வார்த்தையில்"புலம்பெயர் சாவு வியாபாரிகள்"எனச் சொல்லியொதுங்க முடியாது.தமிழ் ஆளும் வர்க்கமானது புலம் பெயர் தேசங்கள்வரை புலிகளிலிருந்தே உருபெற்றுத் தமது இராணுவத் தலைமையை அழித்துவிடுவதற்குத் தமது புதியகூட்டோடு இயங்கியுள்ளனர்.இஃது இப்படி இருக்க,மேலும் புலிகள் இயக்கத்தையும் அதன் கடந்தகாலத் தவறுகளையும் வெறுமனவே புலித்தனத்தின் நிகழ்வாகப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன்-மறுக்கிறேன்.


புலிகளையும்,ஏனைய இயக்கங்களையும் தோற்றுவித்த சக்தி இலங்கை அரசின் இனவொடுக்குமுறைதாம் காரணமாகிறதென்பது ஒரு பகுதி உண்மைதாம்.இதைக்கடந்து இந்திய-மேற்குலக அரசுகளினது நலன்களது எதிர்பார்ப்பில் இலங்கையில் நடாத்தப்பட்ட இனவாத அரசியலின் தொடர்ச்சியில் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் யாவும் ஏதோவொரு அரசை,அதன் நலனுக்குகந்த முறையில் நம்பிக்கொண்டு,அவர்களது கட்டளைக்கொப்பவே"ஈழப் போராட்டஞ்"செய்தன.அந்நிய தேசங்களது முரண்பாடுகள் யாவும் ஒவ்வொரு இயக்கத்துக்குள்ளும் பிரதிபலிக்க,அவை இயக்க முரண்பாடுகளாகப் பரப்புரைக்குட்பட்டு ஒன்றையொன்று அழித்து,எமது விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தன அந்நிய நலன்கள்.


இதன் தொடராகவே, புலிகள் என்றவொரு இயக்கம் தமது அரசியல் நடாத்தையில் ஏகத் தலைமை வாதத்தோடு பிரபாகரனது தலைமையை முதன்மைப்படுத்தி, எமது இனத்தின் புரட்சிகரமான சக்திகளையும்,புத்திஜீவிகளையும் பலியெடுத்தது.இதைப் புலிக்குப் பின்னாலிருந்து நடாத்திய அந்நிய உளவு நிறுவனங்களே இன்று புலியைப் பூண்டோடு அழிப்பதில் தமிழ் ஆளும் வர்க்கத்தோடு பேரஞ் செய்து எமது விடுதலைப் போராளிகள் அனைவரையும் வேட்டையாடியும்,பெருந்தொகையான தமிழர்களைப் படுகொலைசெய்தும் நமது மக்களை அரசியல் அநாதைகளாக்கியது.





புலிகளது தவறுகளை வெறுமனவே அதன் தலைமையினது தவறாகப் பாப்பது மீளவும் தவறிழைப்பதில் முடியும்.புலிகளது தலைமையை வெறும் இராணுவவாதத்துக்குள் முடக்கி அரசியல் போராட்டத்தைப் புரியாதிருப்பதற்கும்,மக்களோடு இணைந்து விடுதலையைச் சாதிக்கும் மக்கள் படையைக்கட்டாதிருப்பதற்கும் பிரபாகரனது நடாத்தை காரணமில்லை.


"புலிகள் கெரில்லா இராணுவ அமைப்பிலிருந்து மரபு இராணுவமாக மாறியதும்,2005 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் இராஜபக்ஷ வெல்லும் நிலைக்காக, அதைப் புறக்கணித்ததும்" பிரபாகரனது வரலாற்றுத் தவறுகளென இப்போது கூறுகிறார்கள்.


இவை இரண்டுமேதாம் புலிகளது இன்றைய தோல்வியாகவும் காட்டப்படுகிறது.ஆனால்,இது ரொம்ப மோசடியான கூற்று.


இன்றைக்குப் புலிகளது தோல்வி பிரபாகரனது தவறல்ல.அவருக்குப் பின்னாலிருந்த தமிழ் ஆளும் வர்க்கத்து நலனே இதை நடாத்தி முடிக்க அந்நியச் சக்திகளது நலனோடு உடந்தையாகிப் புலிகளது போராட்ட முறைமையையே தலைகீழாக மாற்றியது.


இதன் பயனாகப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பகுதிகளை ஒரு தேசத்தின் வடிவாகவும்-கட்டமைப்பாகவும் புலிகள் நிறுவிக்கொண்டனர்.இங்கே,கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமுண்டு.அதாவது, புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலப்பரப்புகளிலிருந்து இலங்கையினது இராணுவ ஜந்திரத்தை அப்புறப்படுத்தினாலுங்கூட, இலங்கை அரசின் ஆதிக்கத்தை உடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.


வியாட்நாம் யுத்ததந்திரத்துக்கு ஒப்பற்ற பணியாற்றிய ஜெனரல் கியாப் சொல்கிறார்:"ஒரு அமைப்பு-விடுதலை இராணுவம் நிலவும் அரச ஆதிக்கத்தை உடைக்காது,எவ்வளவு பெரிய படையணியை வைத்தபடி பெரும் பகுதி நிலப்பரப்பை விடுவித்துக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அது விடுதலையடைந்த பூமியாக இருப்பதற்குத் தகுதியற்றது."இதன்படி புலிகளது தேசவுருவாக்கத்தை நோக்கி அனைத்து நடவடிக்கையையும் உற்று நோக்கினால் அவரது கூற்று உண்மையான மந்திரம் என்று எடுக்க முடியும்.


சமாதானக் காலங்களில் புலம் பெயர் மண்ணில் பரப்புரை செய்த புலிகளது மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினி அப்பப்ப உரையாற்றும் போது,புலிகளது வரிவிதிப்புக்கு நியாயங் கூறும்போது"நாம் ஒரு தேசத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.அதற்குப் பரிபாலனஞ் செய்ய வரிகட்டுவது மக்கள் கடமை"என்றார்.


இதன்படி, புலிகள் தமது அமைப்பை விடுதலைப்படை என்ற நோக்கிலிருந்து விடுபட்டுத் தம்மை ஒரு அரசினது படையணியாக மாற்றிக் கொண்டார்கள்.இந்த அரச மாதிரி அமைப்பாண்மைக்குப் புலிகளுக்குப் பின்னாலுள்ள தமிழ் ஆளும் வர்க்கமானது பாரிய உந்துதல்கொடுத்தபடி தமது பேரங்களை நடாத்தியபடியேதாம் இலங்கை அரசசோடு பேச்சுக்களை நடாத்தியது.இதன் தொடராகப் புலிகள் தமது இராணுவத்தை முப்படைகளாகப் பிரித்து இறுமாந்திருந்தார்கள்.ஒரு சிற்றரசாக இவை பரிணமித்தபோது,அரசுக்குரிய நடாத்தையாக அது மக்களை வர்க்க ஒடுக்குமுறைக்குட்படுத்தியது.இதன்படி புலிப் போராளிகள் மக்கள் படையணியாக மாற்றமடையாது அதுவும் ஒரு கூலிப்படையாக-ஒரு அரசுக்குரிய இராணுவப் பண்போடு ஊதிப் பெருத்தது.இதன் தொடராக மக்களிடமிருந்து அந்நியப்பட்ட புலிகளது படையணியும், அதன் தலைமையும் ஒரு அரசுக்குரிய பண்புகளோடு,தலைமையும் அதன் போராட்டப்படையும் மாற்றுமுற்றிருந்தபோது மக்கள் அவர்களது தேவைக்கு ஏற்ற ஒரு உறுப்பாகவே இருத்திவைக்கப்பட்டார்கள்.


இவை யாவும் திட்டமிட்ட அந்நியச் சக்திகளது ஒப்புதலுக்கு-ஆசை வார்த்தைக்கமையவுமே நடைபெற்றது.புலிகளை ஒரு அரசுக்குரிய முறையில் மாற்றமுறவைத்து அதை மக்கள்படையாக மாறாதிருக்கும் வியூகத்தை ஒழுங்குற நடாத்தியது நோர்வே அரசு என்பது எனது கணிப்பு.இது, அமெரிக்க அரசினது உளவு நிறுவனத்தின் வேண்டுகோளென்பதும் உண்மை.


இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் புலியழிப்புக்கான அனைத்து வடிவமும் திட்டமிடப்பட்டது.


மக்களைச்சார்ந்து,மக்களோடு மக்களாகப் போர் நடைபெறும்போதும்,மக்கள் தயவில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது எந்தவொரு இராணுவப்பலமும் அதை முறியடிக்க முடியாது.ஆனால்,ஒரு சிற்றரசை,இன்னொரு அரசு மிக விரைவாகத் தோல்வியுறச் செய்யமுடியும்.இரு அரசுக்குள் நிலவும் போராட்டத்தில் ஆயுதப்பலம் மிக முன்னணியிலிருந்து போராட்டத்தில்-யுத்தத்தில்"வெற்றி.தோல்வி"என்பதைத் தீர்மானிக்கும்.இங்கே,சிங்கள இராணுவம் ஆயுதப்பலத்தோடும்,ஆட்பலத்தோடும் போராடியதாக எவரும் குறுக்க வேண்டாம்.அவர்களிடத்தில் இன்னொரு நிகழ்வும் மிக உண்மையாக நடந்தேறியது.அது,சிங்களக் கூலிப்படைகள் சிங்களத் தேசத்தினது தேசியவாதத்துள் வார்க்கப்பட்ட தேசபக்தபடையாகவும் மாற்றப்பட்டபின்பேதாம் புலிகளது இராச்சியத்தைத் துடைத்தெறியப் புறப்பட்டது.இதுவே,புலிகளது தரப்பில் அனைத்தும் தலைகீழாக இருந்தது.






அதாவது,


1:புலிகள் மக்கள் படையணியாக-விடுதலைப்படையாக இல்லாதிருந்தார்கள்,


2:ஒரு தேசத்துக்குரிய கூலிப்படையாகவே அவர்களது உறவு மக்களோடிருந்தது,


3:புலிகளது நிர்வாக ஜந்திரம் தமிழ் மக்களை வர்க்க ஒடுக்குமுறைக்குட்படுத்தித் தமக்குப் பின்னாலிருந்த ஆளும் வர்க்கத்தை காப்பதற்கான முனைப்பில் நிர்வாகத்தைக்கொண்டியங்கினார்கள்,


4: வர்க்க ஒடுக்குமுறைக்கிசைவாக தமது நீதி பரிபாலனத்தை,நீதி மன்றம்,பொலிஸ்,சிறைக் கூடங்களென வகுத்திருந்தார்கள்,


5: தாம் கொண்டியங்கிய நிர்வாக ஜந்திரத்துக்குத் தோதான முறைமைகளுக்கு முன்னுரிமைகொடுத்து, மக்களது அடிப்படைவுரிமைகளை ஆயுத முனையில் பறித்தார்கள்-சர்வதிகாரத் தன்மையோடு மக்களைக் கட்டாயப்படுத்தித் தமக்கு அடிபணிய வைத்தார்கள்.


6:தமது ஆட்சியின் கீழ் சிவில் நடாத்தைகளைக் குறுக்கியபடி தம்மை அரசினது அலகாகவும், அதன் பரிபாலனர்களாகவும் புலித் தலைமை உருவாக்கிக் கொண்டது.


7: எந்தச் சந்தர்ப்பதிலும் புலிகள் தம்மை விடுதலைப்படையணிக்குரிய குணாம்சத்தோடு விடுதலைப்போரை முன்னெடுப்பதை மறுத்துத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் காக்கும் படையணியாகவே மட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர்.


இத்தகைய ஒரு குறுநில ஆட்சி அந்நிய உளவு நிறுவனங்களின் திட்டமிடலுடன் நடந்தேறியது.இதை மேலும் நம்பகத்தன்மையோடு நடாத்தவும் அதைத் தொடர்ந்து விடுதலைப்படைக்குரிய அனைத்து நடாத்தைகளையும் சிதைப்பதற்காகவே மேற்குலகத்தவர்கள்,குறிப்பாக நோர்வே தொடர்ந்து வன்னிக்குப் பறந்து சந்திப்புகளை நடாத்திப் புலிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.இதைக்கூட அறிய முடியாதளவுக்குப் புலம்பெயர் தமிழர்கள் இறுமாந்திருந்தார்கள்.


புலித்தலைமையும்,அதன் ஊழியர்களும் சொல்லித் திரிந்த"தேசவுருவாக்கம்-ஈழத்தேசம்"இந்தவகைக் காரிணியின்-வியூகத்தின் உண்மையாக விரிந்திருந்தது.இதை உடைத்துப் புலிகளை அழிப்பது பெரிய விடயமில்லை இலங்கை அரசுக்கு.ஏனெனில்,அவ்வரசின் ஆதிக்கமேதாம் வன்னிக்குள் நிலவியது.


இலங்கை அரசினது ஆதிக்கத்தை உடைக்காமால், இராணுவ ஜந்திரத்தை அகற்றியவுடன்"தேசத்தை"நிர்ணயித்த புலிகள் சாரம்சத்தில் ஒரு கூலிப்படையாகவே மாறியிருந்தார்கள்.இவர்களை அழிப்பதற்குப் பிரபாகரனது தவறு காரணமில்லை.ஏனெனில், பிரபாகரன் என்பது ஒரு பொம்மை.அவரால் எதுவுமே நிகழவில்லை.அவருக்குப் பின்னாலிருந்தாவர்கள் அனைத்தையும் நடாத்தி முடித்தனர்.


புலிகளது அழிவு குறித்து நீண்ட ஆய்வு அவசியமானது.இதை செய்து முடிக்கும் காலம் இப்போது நெருங்குகிறது.இதன்படி சரியான முறையில் இந்த ஆய்வு சென்றடைந்து புலிகளது பாத்திரம் புரியப்பட வேண்டும்.இதன் வழியேதாம் அடுத்தவொரு நகர்வு,அது போராட்டமாகவிருந்தாலுஞ்சரி அல்லது சமாதானச் சகவாழ்வாகவிருந்தாலுஞ்சரி தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமான தெரிவுகளைச் செய்ய வழிவகுக்கும்.


இன்றைய நமது நிலைக்கு,புலித்தலைமை மற்றும் இயக்கங்களது தலைமைகளது தவறாகப் புரிந்துவிடுவது பாரிய அபத்தம்.


நமது சமுதாயத்தின் ஆளும் வர்க்கத்தின் நடாத்தையை மிக நேர்மையோடு ஆய்ந்து புரிந்துகொள்ளும் மனதுக்கு அந்நியச் சக்திகளுக்குப் புலிகள் அடியாளாகவிருந்துகொண்டு, நடாத்திய தேச பரிபாலனம் புரிந்துவிடும்.


இதுவே,நமது இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.


இதன் தெரிவில் புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இருக்கிறது.


இதுள் அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில் அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.


ப.வி.ஸ்ரீரங்கன்
12.06.2009

Wednesday, June 10, 2009

ஜனநாயகத்துக்குத் தகுதிபெற்ற முதற்றமிழர் அழகலிங்கம்!

"தமிழர்கள் ஜனநாயகத்துக்கான தகுதி பெறு வேண்டும்"என்று இப்போது அழகலிங்கம் கம்பனி தீர்ப்பெழுதுகிறது.இதன்மூலம் இலங்கையின் இன்றைய அரசும்,அதன் பின்னாலுள்ள சிங்கள ஆளும் வர்க்கமும் ஏலவே ஜனநாயகத்துக்கான"தகுதியில்"தேறியுள்ளதன் பயனாகப் புலியழிப்பினூடாகக் கொல்லப்பட்ட தமிழ் மனிதவுயிர்கள் ஜனநாயகத்தைக் காப்பதற்கென்றதான அரசியலில் சாகடிக்கப்படவேண்டியவர்களாகிறார்கள்.மகிந்தாவும் அவரது தம்பி கோத்தபாயவும் இதையேதாம் உரைக்கின்றனர்.இந் நிலையில் அழகலிங்கமும் இவர்களது கூற்றுக்கொப்பச்"சோசலிசம்"பேச நாம் கட்டுப்பெட்டியானோம்.இவர்கள் பெரும்பாலும் இலங்கை அரசுக்கு ஜனநாயகம் கற்பித்துத் தேசியவொடுக்குமுறைக்குத் துணைபோவதைப் புரட்சியின் பெயரால் செய்வதுதாம் இன்றைக்குப் பெருந் தீங்காக இருக்கிறது.புலிகள் மேற்குலகத்துக்கு அடியாளாக இருந்து நமது மக்களைக் காட்டிக்கொடுத்து அடிமைப்படுத்தியதுபோன்று, அதே இடத்தில் இவர்கள் ஆசிய மூலதனத்துக்கு அடியாளாக இருக்கும் மகிந்தா குடும்பத்துக்குக் கூஜாத் தூக்கிக் காட்டிக்கொடுக்கும் அரசியலுக்கு"ஜனநாயக"முகமூடி தயாரிக்கின்றார்கள்?


இந்த வகையில் அழகலிங்கம் தமிழரெனும் முறையில் அவரது கருத்துக்கொப்ப-நியாயத்தின்படியான "ஜனநாயகத்தில்"மகிந்தா குடும்பத்துக்கு இணையாகவே ஜனநாயகத்தில் தகுதி பெற்றுள்ளார் என்பது அவரது கட்டுரையூடாக நாம் அறியும் நல்லதொரு செய்தி.இதையிட்டுத் தமிழ்பேசும் நான் பெருமை அடையலாம்-நம்மிடமும் ஒருவர் "ஜனநாயகத் தகுதி பெற்று"வாழ்வதையிட்டு!

இன்றையபொழுதில்,நமது அரசியல் முன்னெடுப்புகளை நாமே தீர்மானிக்க முடியாதவகையில் அந்நிய ஆதிக்கங்களிடம் நமது அரசியல் திட்டமிடல்களையும் அது சார்ந்த வியூகங்களையும் பறி கொடுத்துவிட்ட இந்தப் பயங்கரமான புலியழிப்புக்குப்பின்பான சூழலில் எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் "அதிகாரப் போட்டி அரசியல்"எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.இந்தவொரு அறுதியான சமூகச் சூழல் பற்றிய கணிப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சிங்கள அரசியல் நகர்வு இப்போது எமக்குள் திணிக்கும் கருத்தியல் "வாழ்வதற்கான இயல்பு நிலை"என்பதாகவும்,அதைக் குழப்பும் "புலிப் பயங்கரவாதம்"முற்றாக அழித்தொழிக்கப்பட்டுத் தேசத்தில் அனைவரும் "தேசமகளது குழந்தைகளே-ஒருதாய் பிள்ளைகளே"என்பதாகவும் திட்டமிட்ட வகையில் மக்களின் தேவையை அறிந்து பரப்பப்பட்டு, கருத்தியல் ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது.இது ஆசிய மூலதனத்தை இலங்கைக்குள் பிணைத்து அறுவடை செய்ய முனையும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் கோசம்.இது முற்றுமுழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது அடையாளங்களையும் இல்லாதாக்கும் முயற்சியின் ஆரம்பத் தொடர்.இதையே அழகலிங்கம் கம்பனி "தமிழர்கள் ஜனநாயகத்துக்குத் தகுதி பெறத் தயாராகவேண்டும்"என்று கூறிச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது கயமைமிகு இனவொடுக்குமுறை அரசியல் நகர்வுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் முயற்சி.நமது அரசியல் நடாத்தையில் இவ்வளவு அழிவுக்கும் புலிகளுக்குள் காரணந் தேடுபவர்கள், புலிகளுக்கு அப்பால் விரிகின்ற மூலதனத்துக்குச் சோரம் போகும் அரசியலை-இனவழிப்புத் தொடரைத் தமிழ்பேசும் மக்கள் அடிபணிந்து ஏற்பதற்கு"ஜனநாயகத்துக்குத் தயாராகும் தகுதி"என்கின்றனர்.

தமிழ்பேசும் மக்கள் மட்டும்தாம் ஜனநாயகத்துக்குத் தகுதி அற்றவர்கள் எனும்போது,இலங்கையில் சிங்கள அரசும் அதன் ஆதிகத்துக்குள் வாழும் அனைத்து மக்களும் தகதியுடையவர்களாகவே இருக்கிறார்கள் என்றாகிறது.இதன் தொடரில்தாம் கோத்தபாய மக்களது உரிமைகளைக் காலில் மிதித்தபடி அவர்களைக் கிள்ளுக் கீரையாகக் கிள்ளுறான்.இது,ஜநாயகத்தின் பெயரால் நடாத்தப்படுவதில் அழகலிங்கம் தமிழ் மக்களுக்குச் சோறுபோடும் அரசு அதுவென்று அடித்துச் சொல்லி-சோறு போடும் அரசுகள் "ஜனநாயக அரசு"என்ற புதிய இலக்கணத்தை ஒடுக்குமுறை வர்க்கத்துக்குக் கற்பிக்கும்போது"அழகலிங்கம் ஜனநாயகத்துக்குத் தயராகி"விட்டதன் இயக்கப்பாடு அவருக்குள் விரிகிறது-அது,தேர்தலில் புரட்சிகரமாகச் சிவில் உரிமைகள் காணும்போது, புதிய புரட்சிப்பாடமொன்று அன்னார் அரசியலில் மகிந்தாவே மானுடத் தேவன் என்பதாக...

கடந்த முப்பதாண்டு புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள்.இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மகிந்தா அரசு மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கிறது.இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் "புரட்சி"கரமாகவும் இதை நியாயப்படுத்துவதற்கு அழகலிங்கம் "தமிழர்கள் ஜனநாயகத்துக்குத் தகுதி" பெற வேண்டுமென்றொரு போடுபோட்டுக் கருத்தியல் ஆயுதந்தாங்கிய கோத்தபாயவாக நம்முன் வருகிறார்.விட்டால் தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள்தான் என்றுஞ் சொல்லிவிடுவார்.இதன் தொடராகவோ என்னவோ அவர் புரட்சிகரமானவொரு கட்சியைக் கட்டும்"ஜனநாயக மறுப்பிலிருந்து"விடுதலையாகி இலங்கையில் பெரும் கட்சியில் சேர்ந்து புரட்சியைத் தோற்றுவிக்கும் புறநிலைகளை உருவாக்க முனைகிறார்.இதன் தொடரில் தமிழ்க் கட்சிகளையும் சிங்களப் பெருங்கட்சிகளுக்குப் பின்னாலுள்ள மூலதனத்தொடு இணைய வற்புறுத்துகிறார்.இனம்-இனத்தோடு சேர்வதில் வியப்பில்லை!


இந்த நோக்கத்திலான இலங்கை அரச விய+கம் மென்மேலும் மேல் நோக்கி உந்தப்பட்டு,மக்களின் சுயவிருப்பாக மாற்றப்பட்டும் வருகிறது.இதனால் நமது மக்களின்மீது இயக்கங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த பலாத்தகரமான அதிகாரத்துவ மேலாண்மை மெல்ல உடைபட்டு வருவதும் கூடவே அந்தவொரு சந்தர்ப்பத்தை மக்களே மேலும் வலுப்படுத்தும் தருணத்தில் "தேசிய விடுதலைப் போரை" பிற்போக்கான வகையில் முன்னெடுத்த இயக்கவாத மாயை தகர்ந்து தவிடுபொடியாகும் தருணம் புலிகளது அழிவோடு நெருங்குகிறது.இதை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிப் புறச் சக்திகள் மெல்லத் தமது நலன்களை மையப்படுத்திய அரசியற் கருத்தாக்கங்களையும்,அதுசார்ந்த பொருளாதாரத் தாக்குதல்களையும் எமது மக்களின்மீது திணித்து நமது மக்களை நவீனமான முறையில் அடிமை கொள்கிறார்கள்.இதற்கான நியாயப்பாடுகளை அழகலிங்கம் போன்ற மேதைகளுடாகச் செவ்வனே செய்யும் இலங்கை-ஆசிய மூலதனக்கூட்டு,தமது இன்றைய இனவழிப்பு அரசியல் நடாத்தையை "ஜனநாயகம்"என்ற முகமூடியினது துணைகொண்டு தமிழ்பேசும் மக்களைக் காட்டுமிராண்டிகளாக்குவதில் அனைத்து வழிகளையும் பாவிக்கின்றது.இந்தவொரு வழியில் சிக்குண்ட அழகலிங்கம் கம்பனிக்குச் சிங்கள மூலதனம் போடும் இலாப நட்டக்க கணக்குத் தமிழர்களின் தலைகளைக் கொய்தால் அது"ஜனநாயகம்" பிறப்பிக்கும் முறைமையாகிறது!


இத்தகையவொரு நிலையை இலங்கை இனவாத அரசு முன்னெடுக்குமென்பதை நாம் பல முறைகள் கட்டுரைகளுடாகப் பேசியுள்ளோம்.இந்தவொரு மையப் பிரச்சனையில் மக்கள் கிடந்து அல்லலுறும்போது எந்தத் தியாகமும்,தீரமும் கருத்தில் கொள்ளப்படாது போகும்.இந்தச் சூழலே இலங்தை மற்றும் அந்நியச் சக்திகளுக்கு மிக உறுதியானவொரு அரசியல் நகர்வையும்,அந்த நகர்வுக்கேற்ற வகையான கருத்தியல் வெற்றியையும் தமிழ்பேசும் மக்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இதை இனங்காணமுடியாதவொரு தரித்திரமான அரசியல் வெறுமையோடு நமது "இனவிடுதலைப் போராட்டம்"தொடர்ந்து யுத்தத்துள் மூழ்கடிக்கப்பட்டு,அதன் அரசியல் விய+கம் முற்று முழுதாக முடமாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது.அநுராதபுரத்தில் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டிய "தமிழ்-பிரபாகர" வீரத்துக்குச் சிங்களக் துட்டக்கைமுனு வன்னிக்குள்-நந்திக் கடற்கரையில் பிரபா உச்சி பிளந்து காட்டிய துட்டக்கைமுனு நமது மக்களது அடிமை சாசனத்தை உறுதிப்படுத்தும் சிங்கள உளவியலாக வெளிபட்டது.ஆனால்,இதையெல்லாம் அழகலிங்கம் புலிப் பாசிசத்தின் மடியில் கணக்கு வைத்துச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் மடியில் "ஜனநாயக"க் குழந்தையைப் போட்டுக் கொலைகளை அதன் உணவாக ஊட்டும்போது அழிவது அப்பாவித் தமிழர்கள்தானே-அதில் அழகலிங்கத்துக்கு என்ன வந்துவிடப்போகிறது?


இந்தச் சந்தர்ப்பத்தில்மேலுஞ் சிலதைச் சொல்வது பொருத்தம்.அதாவது, இலங்கை அனைத்து இனமக்களின் மொத்த எண்ணவோட்டமானது ஒருகிணைந்த ஒரு கட்சிக்கு-அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.தொடர் துன்பங்கள்,பசி,பட்டுணி,சாவு,பொருளிழப்பு,வாழ்விடங்களைவிட்டு ஒதுங்குதல்,அகதி வாழ்வு,இத்தகைய சமூகச் சீர் குலைவு மக்களிடத்தில் ஆத்மீகப் பலவீனத்தையும்,அது சார்ந்த மதிப்பீடுகளையும் வேறொரு பாணியில்(உயிர் வாழ்வதே சாத்தியமில்லாத தேசத்தில் அதைச் சாத்தியப் படுதும் அவா)உருவாக்கும்.இப்போது விடுதலை,சுதந்திரம் என்பதெல்லாம் மக்களின் வாழ்வோடு சம்பந்தப்படாத விஷயமாக மக்களே உணரத்தலைப்படும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.இதை இனம் கண்டவர்கள் எமது மக்களின் எதிரிகளே!நம்மைச் சுற்றி மதில்களை உருவாக்கிய விடுதலை இயக்கங்கள், நமது மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாது அவர்களையே ஆயுதப் பலாத்தகாரத்தால் ஒடுக்கித் தமது ஆதிகத்தை நிலைப்படுத்த முனைந்த இந்தக் கேடுகெட்ட அரசியலுக்குப் புலிகளையோ அல்லது மற்றைய இயக்கங்களையோ காரணம்காட்டிப் பேசுவதைவிட,நமது மக்களின் அரசியல் அறிவு நிலை சார்ந்து சிந்திப்பதே சாலச் சிறந்தது.இன்றோ புலிகளது தோல்வியிலிருந்து பாடங்கற்க வேண்டியவொரு ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனமாக நாம் இருந்தும் அது குறித்து மேம்போக்கான மனநிலையோடு மிகக் கெடுதியாக வீராப்புப் பேசுகிறோம்!இலங்கை அரசவரலாற்றில் தமிழர்களை வெற்றிகொண்ட சிங்கள இராணுவ மாயை சிங்கள மக்களைத் தமிழ்பேசும் மக்களுக்கான எஜமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.இது,இனவாத அரசியலில் பின் தொடரும் பொருளாதார இலக்குகளோடு முற்றிலும் தொடர்புடையதாக மாறியுள்ளநிலையிலும் சிங்கள எஜமான உளவியலானது எந்தவிதப் பண்பு மாற்றத்தையும்கொள்வதற்குச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இலக்குகள் இடங்கொடுக்கவில்லை.அது,தொடர்ந்து இன மேலாதிக்கத்தைக் கடைப்பிடித்தபடியேதாம் ஆசிய மூலதனத்தோடான தனது உடன்பாடுகளைக் கொண்டியங்குகிறது.இது,அழகலிங்கம் போன்றவர்கள் கனவு காணும் "முதலாளித்துவ ஜனநாயக"நிலையை இலங்கையின் இராணுவ வாதத்துக்குள் என்றும் ஏற்படுத்தும் சுயகௌரவ-சுய மேல் நிலைப்படுத்தல்கள் இடமளிக்கப் போவதில்லை.தேர்தல்கள்-மாநகரசபைத் தேர்தல்களெனப் பங்குகொண்டு,அவைக்கான அதிகாரத்தின் பலனாகச் சிவில்-குடிசார்வுரிமைகள் கைகூடுமெனவும் சொல்லப்படும் இன்றைய மேம் போக்கான கருத்தாடலை உயர்த்தும் அழகலிங்கம் அவர்கள் ஒரேயடியாக இலங்கை அரசிடம் சரணாகதி அடையும் நிலைக்குத் தனது நிலையை எட்டுகிறார்.


எமது சமூகத்தின் உயிர்த்திருப்பே மாற்று இனத்திடம் அல்லது மாற்றார் தயவில் பொருளாதார நலன்களைக் கனவுகண்டது.இது முற்றிலும் சுய விருத்திக்கான எல்லாவகையான கதவுகளையும் இறுக மூடிவிட்டு மாற்றாரில் தங்கி வாழும் ஒரு உதவாக்கரை,கையாலாகாத இனமாக நமது மக்களை மெல்ல உருவாக்கிய சிங்கள மற்றும் அந்நியச் சக்திகள் இன்று நமது மக்களைப் படு குழியில் தள்ளிவிட்டுப் புலிகளைப் பயங்கரவாதிகளாக்கித் தமது வெற்றியை அரசியல் ரீதியாகப் பெற்று நிலைப்படுத்துகிறார்கள்.இதைத் தடுப்பதற்கு வக்கிலாத ஆயுதப் போராட்டம் எமது மக்களிடமும்,போராடும் போராளிகளிடமும் அந்நியப்பட்டுக்கொண்டே சென்று,இறுதியில் சிங்கள இராணுவத்திடம் படுதோல்வியடைந்து தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் சிங்கள மற்றும் உலக முலதனத்திடம் காட்டிக்கொடுத்து அடிமையாக்கிச் சென்றுள்ளது.இந்த அடிமை வாழ்வை மேலும் தீவிரப்படுத்த அழகலிங்கம் கம்பனி போடும் திரை மறைவு அரசியல், தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகத் தகுதி குறித்துப் பேசுவதில் தமது ஈனத்தனத்தை மூடிமறைக்கிறது.


இங்கேதாம் ரொக்சிச வாதிகளின் கனவுகள் முழுமொத்த இலங்கை மக்களையும் ஏமாற்றும் தந்திரத்தோடு ஒரு சரணகதி அரசியலை ஜனநாயகத்தின்பெயரில் ஒப்பேற்றுகிறது.புலிகளது தகர்வுக்குப் பின்பான அரசியலில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகிப் தேசியவிடுதலைப் போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறதாகவும்,அதன்படி இலங்கைப் பெரும்பான்மை மக்களோடு கைகோர்க்கும் முதல் நடவடிக்கையாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பெரும்கட்சிகளோடு இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் கலந்து காணாமற்போவது ஜனநாயகத்துக்குத் தோதானதாகவும் கற்பிக்கப்படுகிறது.


இதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்கள் பாரிய அபிவிருத்திகளைத் தமது பிரதேசங்களில் எட்டுவதற்கு இந்தப் பெரும் கட்சிகள் வழிசமைப்பதாக இன்னொரு கனவுக்குடத்தைத் தமிழ் பேசும் மக்களின் தலையில் சுமக்க வைக்கும் அழகலிங்கம்கம்பனி, அரசியல் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட கருத்தியலாக விரிகிறது.இதை நியாயப்படுத்தத் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை காங்கிரசு-காமராசார் ஊடாக எழுத முற்படும் ரொக்சிசக் கண்ணுக்குக் கட்சிகளுக்குப் பின்னாலுள்ள சக்திகளது நலனை அண்மித்த ஏதோவொரு உறுவு இருக்கவேண்டும்.இது,உலக நடப்பில் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதை மறுத்துச் சரணாகதியடைந்த ரொக்சியின் அரசியலோடு மீளவரும் ஒரு கபட நாடகம்தாம்.என்றபோதும், இவர்கள் குறித்துரைக்கும் காரணங்களால் இலங்கையில்"அவசரகாலச் சட்டம்"ஒருபோதும் எடுப்பதற்கான சூழலை உலகப் பொருளாதாரப் போக்குகள் தரப்போவதில்லை.


அழகலிங்கம் அவர்கள் வாழுகின்ற ஜேர்மனிய மண்ணில் உச்சமான முதலாளியப் பொருளாதார வளர்ச்சி நிலவுகிறது.அங்கே இவர்காணும் "ஜனநாயக-குடிசார்"பண்புகள் நிறையவே உருவாகியுள்ளது.எனினும்,சமீபகாலமாக நடைபெறும் விவாதமானது ஜேர்மனுக்குள் குறுகிவரும் ஜனநாயக விழுமியத்தை இனங்காணத்தக்கபடி "ஜேர்மனிய இராணுவத்தை உள்நாட்டுக்குள்-சிவில் பாதுகாப்புக்குப் பயன்படுத்தவேண்டுமெனும் அரசியல் கோரிக்கையை எந்த வர்க்கஞ் செய்கிறது-ஏன் செய்கிறது"-என்பதற்குப் பதில் என்ன?இலங்கை அரசியலை இத்தோடு தொடர்புப்படுத்தும் எல்லாவகைப் பண்பும் இன்று அத்தேசத்துள் மலிந்துகிடக்கிறது.அந்நிய மூலதனத்துக்கு வேட்டைக்காடாக மாறிய இலங்கை முதலில் தமிழினத்தை வேட்டையாட முனைந்த ஆசிய மூலதனத்துக்கு அடியாளாக இருந்தது மகிந்தா இராணுவமாகும்.இதை ஓரங்கட்டிவிட்டு,இந்த மகிந்தாவின் காலடியில் ஜனநாயகம் பிறந்து வளர்வதாகச் சொல்லிச் சரணடையும் ரொக்சியத்தை எங்கே வைத்துக் கணிப்பிடுவது?



இது,அரசியல் மோசடி!

புலிகளின் தோல்வி,ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது புலிகளின் அழிவுதரும் வலி.இந்த வலிமிக்க வரலாற்றுப் பாத்திரத்தில் புலிகள் இல்லாத இன்றைய சூழலில், இன்னும் எத்தனை அழகலிங்கங்கள் இலங்கை அரசினது திட்டமிட்ட இனவழிப்பை ஜனநாயகத்தின் பெயரால் தமிழ்பேசும் மக்களைக்குட்டியபடி, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு முண்டுகொடுப்பார்களோ அவ்வளவு பேரும் இனிப் "புரட்சி" பேசுவார்கள்.இவர்களை இனங்கண்டு அம்பலப்படுத்தாதுபோனால் தமிழ்பேசும் மக்களைச் சிங்கள-ஆசிய-மேற்குலக மூலதனத்துக்குத் தத்துக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக்குவதில் வெற்றி கண்டுவிடுவார்கள்.தமிழ்பேசும் மக்களுக்கு விடிவுவேண்டிச் சிந்திப்பவர்கள் இவ்வகைப் போராட்டத்தைக் கருத்தியல் தளத்தில் எதிர்கொள்வது அவசியமான பணி.


ப.வி.ஸ்ரீரங்கன்.
11.06.2009



P/S:

தேசம் நெற் வாசகர் ஒருவர் அழகலிங்கத்தின் கருத்துக்கு இங்ஙனம் விமர்சனம் வைத்திருக்கிறார்.அவரது கருத்தும் நியாயமானது:

//கட்டுரையாளர் (அழகலிங்கம்) இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான். அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப்போராட்டம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளிவர்க்கம் அதன் பக்கத்து மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்து விட்டு அரசு அதிகாரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். " இந்த அடிப்படையில் இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்த தோழர் சண்முகதாசன் அவர்களின் கூற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக்கட்சியும் அல்லது எந்தக் கூட்டனிகளும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல்நாயாக செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையும் தீர்க்கமுடியாது."தமிழ்க்கட்சிகள் அரசாங்கக்கட்சியுடன் சேரவேண்டும் என்ற கருணாவின் விருப்பத்தை கட்டுரையாளர் கொண்டிருப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அதை கருணாபோல் வெளிப்படையாக சொல்வதை விடுத்து தயவு செய்து மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மக்களையும் மார்க்சியத்தையும் ஏமாற்ற முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.-kannan on June 10, 2009 7:39 am // (தேசம் நெற் வாசகர் ஒருவரது கருத்து இது.)

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...