Sunday, May 24, 2009

தவறிலிருந்து மேலெழு,நயவஞ்சகத்தை அடியோடுசாய் இளைஞோரே!

ந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்:ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ...என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த முறையில் வந்துள்ளது.அவர் எமது கையறு நிலையிலும் சளைக்காது எழுதுகிறார்.

என்னால் முடியவில்லை!


புலிகளின் தலைமையை நயவஞ்சகமாகச் சரணடையவைத்துக் கொன்றவர்கள் நமக்குள்ளேயே மீளவும் சதி அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம் தமது குழந்தைகளையும், வாழ்விடங்களையும் பறிகொடுத்து அநாதைகளாகிறார்கள்-இப்போராட்டம் நயவஞ்சகமான அரசியலின் அதே தொடர்ச்சியால் புலிகளைப் பூண்டோடு அழித்துத் தலைமையே காட்டிக்கொடுத்துக் கொலை செய்துள்ளது.நெஞ்சே அடைக்கும் துக்கம்,நமது மக்களது இந்த அநாதையான நிலையால் உருவாகிறது!


இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு வெளிவிவாகரப் புலித்தலைமை தாம்கொண்டுள்ள மக்களது நிதிக்களைத் தமதாக்கும் முயற்சியில் நம்மை ஏமாற்றச் செய்யும் கபட அரசியலுள், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கருத்துரைத்து நமது மக்களை அந்நியச் சக்திகளுக்கு முற்றுமுழுதாக அடிமைப்படுத்திவிடத் துடிக்கிறது.இது கடைந்தெடுத்த துரோகம்!இதுவரை போராடிய தலைவனுக்கே ஒரு அஞ்சலி செய்ய முனையாத கயவர்களைத் தண்டித்தே ஆகவேண்டும்.


இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் விய+கத்தைக் கொண்டிருக்கிறது.தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.இவர்களே இறுதிவரைப் புலித்தலையை வன்னிக்குள் முடக்கிப் பிரபாகரனது குடும்பத்தையே முற்றாகக் கொன்று குவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும், அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.கடந்த சில மாதங்கள்முன் புலித்தலைவர் பிரபாகரனால் முன்மொழியப்பட்ட இன்றைய வெளியுலகப் புலிப் பொறுப்பாளர் குறித்து நீண்ட கேள்விகளை நாம் ஏலவே எழுப்பியிருக்கின்றோம்.


நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை, தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் சுயசார்பு அரசு ஒன்றால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இதன் காரணத்தால் தேசியத்தின் குறியீடாகப்பட்ட பிரபாகரனை நயவஞ்சக வலையில் வீழ்த்திக் கொன்றதன் தொடர்ச்சியில் இவ்வர்க்கம் வெற்றியீட்டியுள்ளது.


இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்!


அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.சர்வேதேச மனிதவுரிமை-போராட்ட நெறிகளுக்கு எதிராகச் சரணடைந்தவர்களை இரகசியமாகக் கொலை செய்த இந்திய-இலங்கை அரசகூட்டை அம்பலப்படுத்திச் சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளிகளாக்க வேண்டும்.இதற்காகக் கொல்லப்பட்ட புலித்தலைமைகளது நிலைமைகள்-எங்ஙனம் ஏமாற்றப்பட்டார்களென்பது அவசியமாகத் துருவி ஆராயப்படவேண்டும்.

தமிழ் இளையோரே,
எம் ஆற்றலைவிட
ஆயிரம் மடங்கு ஆற்றலுடைய
அமீபாக் குஞ்சுகளே!
வெளியே வாருங்கள்,
எம்மை வேரோடு சாய்த்த
நயவஞ்சகர்களை இனங்காணுங்கள்.
வஞ்சகத்தால் வீழ்ந்த புலித்தலைமைக்கு
நேரடியாக அஞ்சலியைச் செய்யுங்கள்


இதிலிருந்து உணர்வோடு
ஒன்றித்துப்போகாதே!
தவறுகளைக் கற்பதற்கு
உண்மையோடு உறவாடுங்கள்.
போராட்டம் தோற்றதன் தவறுகளை
மீளாய்வு செய்யுங்கள்.
நாம் இதுவரை சொன்னவற்றை கிண்டிக்கிளறுங்கள்.


புலிகளது போராட்ட முறைகளை மதிப்பிடுங்கள்.
இப்போது தலைமையை அழித்த
புலிக்குள் இருக்கும் நயவங்சகக் கூட்டையும்
அதன் பின் அணிவகுத்து
மக்கள் சொத்தை-புலிகள் நிதியைக் கொள்ளையடிக்க முனையும்
வர்க்கத்தைக் கண்காணியுங்கள்
உங்களால் இது முடியும்.


யாரது உயிரையும் யாரும் எடுக்க வேண்டாம்.நிமலன் என்ற ரீ.ஆர்.ரீ.வானொலி நேயரது கருத்தை மறுதலித்து முன்னேறுங்கள்.நாம் கொலைகாரர்கள் இல்லை-விடுதலைப் போராட்ட வீரர்கள் என்பதை நிரூபியுங்கள்.நீங்கள்தான் புலிகள் என்பதை பிரகடனப்படுத்தும் நீங்கள்,புரட்சிகரமாகச் சிந்திக்க முனையுங்கள்.உணர்ச்சிகரமான அரசியலைவிட்டு உண்மைகளைக் காணுவதற்காக வன்கொடுமை யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கும், நயவங்சகத்தனமாகக் கொல்லப்பட்ட புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பல்லாயிரம் போராளிகளுக்கும் அஞ்சலியைச் செய்யுங்கள்.




மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது, நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம், நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துப் புலிகளின் தவறுகளையும்,புலித் தலைமையைக்கொன்று அத்தலைமையைக் கைப்பற்றியச் சதிகாரக்கூட்டத்தையும் இனங்கண்டு முறியடித்தாவேண்டும்.இதனூடகப் புதிய முறையில் போராட்டபாதைகளைத் தகவமைத்துப் புரட்சிகரமாக இளைய தலைமுறை அணிதிரளவேண்டும்.இவர்களை வழிநடாத்தும் புரட்சிகரத்தலைமை உருவாகவேண்டும்.இது,காலத்தின் தேவையாக நம்முன் இருக்கிறது.போராட்ட அணிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.


வரலாறு காணாத துரோகத்தைச் செய்வித்த உலகத்தை இனம்காண்பதும், அவர்களைப் புரட்சியின்-ஈழவிடுதலையின் எதிரிகளாகப் புரிந்துகொள்ளுங்கள்.இந்தப் புரிதலில் புலிகள் உருவாகியுள்ள நயவஞ்சக வெளிவிவாகாரத் தலைமையை இனம்கண்டு அம்பலப்படுத்துங்கள்.இது, அவசியமானவொருபணியாகவே இப்போது உங்கள்முன் இருக்கிறது.

உங்கள் போராட்டவுணர்களோடு தமது இருப்பை உறுதிசெய்ய முனையும் இத்தலைமை உண்மைகளைமறைத்துத் தமது துரோகத்தை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் சொல்லி மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளைத் தோற்கடியுங்கள்.இதிலிருந்து புரட்சிகரமானவொருபணியாகப் புலிகளது தோல்விக்கான காரணிகளைக் கண்டடையும் ஆய்வுகளை செய்யுங்கள்.அதற்கான தகமை உங்களுக்கு உண்டு.

நமது மக்களது சாவில் அரசியல் செய்ய முனையும் இந்தியக் கைக்கூலி கருணாவையும்,டக்ளசையுமே சுற்றித் துரோக அரசியலைப் புரிவதைவிடப் புலித் தலைமைக்குள் புதிதாகவுருவாகிய ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளை முதலில் இனங்காண்பதற்கான தேடுதலில் இறங்குங்கள்.அதற்காக நயவஞ்சக வலையில் வீழ்ந்து மரணித்த உங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனது மறைவுக்கும் நேர்மையோடு அஞ்சலிக்க முனையுங்கள்.

பிரபாகரன் உயிரோடிருப்பதாகக் கட்டுரை எழுதிப் புதிய நயவஞ்சகர்களைக் காப்பதற்கு முனையாதீர்கள்!

இதுவரையான வெளித் துரோகங்களை இனம் காணும் நீங்கள், உட்துரோக அரசியலது தலைமையை இனங்காண்பதில் தவறிழைத்துள்ளீர்கள்!எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலில் எமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியுள்ளது.கடந்த ஒருசில வாரத்தில்மட்டும் பல பத்தாயிரம் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்துள்ள இந்திய-இலங்கை அரசுகள் புலிவழிப்போராட்டத்தை முழுமையாக அழித்துள்ளது.


இந்நிலையில்,புலித்தலைமை எங்ஙனம் காட்டிக்கொடுக்கப்பட்டதென்பதை முதலில் புரிவதற்கு,அவரது மரணத்தை மறைக்க முனையும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.இனிமேலும் மறைப்பு அரசியலில் மறைந்திருந்து துரோகத்தைத் தியாகமாக்க முனைவது, எமது மக்களது முற்றுமுழுதான அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தும் அரசியலாகவே மாறும் அபாயம் உண்டு.இதைக் கணக்கிலெடுங்கள்.


புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!பிரபாகரனது உடலத்தை அடையாளங்காட்டும் தமிழினத்துரோகி கருணா சிரித்தபடி இராஜபக்ஷவுக்குப் புகழாரஞ் செய்கிறான்,மக்களைப் பூண்டோடு அழித்துப் புலித் தலைமையைக் கொன்றதற்காக.

புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புதிய புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.பிரபாகரனை நம்ப வைத்துக் கழுத்தறுத்தவர்களது கனவு இங்ஙனமே அவரது சரணடைவை வற்புறுத்தி,அதை மக்களுக்கு தெரியாதபடி மறைத்து அவரை ஈனத்தனமாகக் கொன்றுள்ளது.இந்தத் துரோகத் தலைமையை நாம் இனம் காணவேண்டாமா?

அன்பு வாசகர்களே,எமது பரம எதிரியான சிங்கள அரசு-இந்திய அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,புலம்பெயர் புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.இயக்கம் தனது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும்.இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளின் தலையை நயவஞ்சகமாக அழித்துவிட்டதுபோன்று, நமது குழந்தைகளின் கைகளிலுள்ள சரியான போராட்ட உணர்வையும் அவர்களது அறிவையும் பறித்துவிடப் போகிறது.அவர்களது சிந்தையை வேறு பக்கம் திருப்பவே மறைப்பில் பற்பல வியூகங்கள் அமைக்கப்படுகிறது.


அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வகை;கப்படுகிறது.இதைப் பிரபாகரனது மரணத்தில் வெடிகொளுத்தி ஆனந்தக் கூத்தாடும் மக்களிடமும்,பிரபாகரனது உயிரற்ற உடலத்தைத் தோளில் வைத்துக் கூத்தாடும் சிங்கள இராணுவத்தின் அகவிருப்பிலிருந்தும் நாம் முழுமையாக இனங்கண்டாக வேண்டும்.


ஓணானை அடித்துக் கயிற்றில் கட்டியிழுத்து விளையாடும் சிறார்களது நிலையில்,சிங்கள இளைஞர்கள் கூத்தாடுகிறார்கள்!இது,இனவாதக்கூத்து.தமிழர்களை வென்றதற்கான கூத்து!!


இதற்குப் பதிலுரைக்கும் கடமை தமிழ் இளைஞர்களுக்குண்டு.அதை அவர்கள் செய்தே தீருவார்கள்.எம் சிறார்கள் மூடர்களில்லை.அவர்கள் போராட்ம் என்றால் என்னவென்று புரட்சியைக் கற்றுத் தமது வரலாற்றுக் கடமையைத் தொடருவார்கள்.அப்போது, எந்தப்பெரிய இந்திய-உலகச் சதியும் அவர்களிடம் தோற்கும்.இந்த நம்பிக்கையில் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட மக்களுக்கும்,போராளிகளுக்கும்,புலிகளது தலைவர்களுக்கும் எமது புரட்சிகரமான வீர வணக்கம்!


என் இனத்தின் அழிவில் நின்று
களிநடனமிடும் சிங்களத்து விருப்பு இருக்கும்வரை
நீ தமிழ்த் தேசியத்தின் குறியீடே பிரபா!

என் மக்களுக்கும்,
உன் சேனைகளுக்கும்,
உனக்கும் அஞ்சலிப்பது மட்டுமல்ல
எம்மை வீழ்த்திய
உனக்குள் மறைந்திருந்த நயவஞ்சகத் தலைமையையும்
இனங் காண்பதும் எனக்கும்
என் அடுத்த தலைமுறைக்கும் அவசியமானதே!


ப.வி.ஸ்ரீரங்கன்
24.05.09

Tuesday, May 19, 2009

பிரபாகரன் நிச்சியம் வீடியோவில் உரை தருவார்

திரு.பிரபாகரன் குறித்தான மரணவோலம் நம்மை வருத்துகிறது.ஓவென்று அழுதும் பார்த்தாச்சு.பிரபாகரன் குறித்த கணிசமான விமர்சனத்தில் அவர் பாசிச வாதி என்றும் நான் சொன்னேன்.இவையெல்லாம் அவரைக் குறித்தான விமர்சனங்களைவிட அவருக்குப் பின்னாலுள்ள வர்க்கத்துக்கான விமர்சனம்.அவர் தமிழ்த் தேசியக் குறியீடாக இருப்பதென்னவோ உண்மைதாம்.விதேசியக் கொள்கையுடைய அவருக்குப் பின்னாலுள்ள வர்க்கம், அவரையும் அதையொட்டியே தகவமைத்தது.இது கடந்து, சிங்களத்துக் களிநடனத்தில் நாம் தாயைத் தொலைத்த பிள்ளைகளாகவே அழுது வடிகிறோம்.என்றபோதும், திரு.பிரபாகரன் குறித்தான கருத்தாடல் அவசியமானது.


நேற்று வேலை முடிந்த கையோடு வீடுதிரும்பியபோது, எனது வீட்டு நிலைமை இங்ஙனம் இருந்தது:




"காவலன் காதை.


இது வார்த்தை உதிராப் பொழுது
வீட்டில் துணைவி எரிந்து விழுகிறாள்
அப்பப்ப அவள் விழி பனிக்கத் தீபம் ரீ.வீ.
பி.பி.சீ.யெனத் தொலைக் காட்ட தாயிழந்தவள் போல்...


செய்திதாம்
உண்மையற்றுப் போனால்...
மகிழ்வுதொலைத்த நெஞ்சோடு
"சந்தோசந் தானே என" ஏளனங் கலக்க அவள் மொழி
என்னைக் கொன்று வினாவுகிறது!


இனவாதத் தேசத்தில்
எமக்கு அவன் காவற்காரன் என்ற
அவள் நம்பிக்கை என்னைச் சுட்டெரிக்கிறது
எதை எடுத்துரைக்க?


சிங்களத்துக் களிப்பில்
எல்லாமே சிறுத்தைகளாப்போன
துருவத்தின் மத்தியில் நான் அநாதையாகப் விடப்படுகிறேன்."


என எழுதினேன்.இப்போதும், சில கேள்விகள் எழுகிறது.பிரபாகரன் குறித்துப் பற்பல செய்திகள் கசிகிறது.அவர் உயிரோடு இல்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப் பாடுபடும் இலங்கை அரசு ஒருபுறம்.மறுபுறமோ, அவர் உயிருடன் சுகமாகவே இருப்பதாக ஐரோப்பியப் புலிகளுமாக நம்மைக் கொன்று வருகிறார்கள்.

இங்கே சில சந்தேகங்கள் என்னுள் எழுகிறது.



ஜோர்தானில் வைத்து"இலங்கையில் பூரணமாகப் பயங்கரவாதத்தை"அழித்துவிட்டாதாக இராஜபக்ஷ கொக்கரித்தார்.பிரபாகரன் இல்லாதபோதுமட்டுமே இவ்வார்த்தை அர்த்தம் பெறும்.பிரபா தப்பி உயிருடன் இருக்கும்போது அவரால் மீளப்படைகட்ட முடியும்.அது ஒரு தார்மீக நிலை.அவர்மீதான ஒரு உளவியற் குறியீடாக இவ்வினை நடந்தேறும்.


இதன்படி அவர் கொல்லப்பட்டிருந்தால்-சனியன்றே கொல்லப்பட்டிருக்கவேண்டும்!


சனிக்கிழமை 16.05.09 கொல்லப்பட்டிருந்தால், பத்தமநாதன் எங்ஙனம் ஞாயிற்றுக்கிழமை பிரபாகரனுடன் தொலை பேசியிருக்க முடியும்?


என்றுமில்லாதவாறு இங்கே,ஞாயிறன்று சூசை குரல்தரவல்ல புலி ஜெனரலாக மேற்குலகங்களால் மேலெழுகிறார்.அவரை ஜெனரலாகவே ஜேர்மனிய ஊடகங்கள் வர்ணித்தன.


சூசை தன் மனைவி பிள்ளைகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.


அவர் இன்னும் உயிருடன் இருப்பார்.


பிரபாகரனைச் சுற்றிய தலைகள் எல்லாம் உருண்டுள்ளன.இதுள் சூசையின் பெயர் இல்லை.


கருணா பிரிவுக்கு முன், ஐ.பி.சீ.யில் குரல்தரவல்லவராகச் சிலதினம் வலம் வந்தார்.அதன் பின் பிளவு.இப்போது, சூசை வந்தார்.


சனியன்று கொல்லப்பட்ட பெருந்தொகைப் புலித் தளபதிகள் எங்ஙனம் கொல்லப்பட்டார்கள்.இதுள் பிரபாகரன் அடக்கமா?


உள்ளிருந்து துரோகத் தலைமை பிறப்பெடுக்குமா?


இப்போது, பிரபாகரன் காதைக்காட்டாத(காது-செவிகள்) உயிரற்ற உடலம் அவராகவே காட்டப்படுகிறது.இங்கே என்ன நடக்கிறது?



பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்துப் பத்மநாதன் வலுவாக மறுக்கிறார்.

இவர் ஞாயிறன்று பிரபாகரனுடன் தொலை பேசியதாகவும் கூறுகிறார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது இலங்கையில் "தனிநாட்டுப் பயங்கரவாதப்போரை" வென்றதாகச் சனிக்கிழமை இராஜபக்ஷ கூறமுடியாது.


பிரபாகரனின் ஒரு சொல் நிச்சியம் ஓராயிரம் படையைத் திரட்டும்.இது,வெறும் நம்பிக்கை அல்ல.உளவியற் செயல்-குறியீடு.


இங்கு,துரோகத் தலைமை ஒன்று பிறப்பிடுக்கிறதா?


அது எவர் பெயரில்?


இதை முறியடிப்பதாக இருந்தால்,இன்றைய தொழில் நுட்ப வசதியில் திரு.பிரபாகரன் பின்லாடன் மாதிரி ஒளியுரை செய்தாகவேண்டும்.அது, இன்றைய தனது மரணம் குறித்த உரையாகவும் இருக்கவேண்டும்.வீடியோ வந்தால் பல தமிழர் வீடுகளில் விடியும்.


பொறுத்திருந்து பார்ப்போம்.


சிங்களக் களிப்பு நம்மை ஒடுக்குகிறது.பிரபாகரன் உரை நிச்சியம் மீளத் தலை உயர்த்தும் தமிழர்களை!



தமிழர்கள் கண்ணீரோடு விளையாடும் இந்திய இலங்கை இராணுவக்கூட்டு பிரபாகரன் உயிருடன் இருந்தால் நிச்சியம் இன்னொரு புதியவரவில் புரட்சிகரமான போரைச் சந்திக்கும்.இது, மிகவிரைவில் நிகழும்.

இன்றைய தவறை விமர்சனபூர்வமாக விளங்கிக்கொண்டு மேலெழும் பிரபாகரன் தலைமை இன்னொரு ஈனத்தனத்தை செய்யாது-பார்ப்போம்!


பிரபாகரன் நிச்சியம் வீடியோவில் உரை தரலாம்.


நம்புவோம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.05.09











Monday, May 18, 2009

Death ... the beginning of the end.

No longer know where

Looks ... who say it is not anymore.
Feelings ... are difficult to be described.
Moments ... in which the grief is the worst.
Moments ... us to come back to you remember.
Thoughts ... no longer know where to.
Mourning ... very deep in us is sitting.
Farewell ... the heavier than anything else.
Knowledge ... it is over and will never come again.
Death ... the beginning of the end.






A single tear from my eye is looking his way,
it drips into a lake from already cried tears.


Another tear,
flowing behind him,
they drip on a picture of yourself.


The world blurred before my eyes,
more and more tears pour down my cheeks,
destroy the image.




But not the picture in my heart,
I will never lose that image,
The image of a warm, loving, young people
Of this life far too early to be terminated has seen.


The tears, the pain of
Rinse the fear in my soul.
You simply swimming away the grief.


Survivors pure emptiness.
In accordance with the time elapsed
Perhaps happiness can grow again.

Saturday, May 16, 2009

பிரபாகரன் இல்லாப் பிரமை.

"பயங்கரவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள்,இப்போது அதை
முடித்துவைத்ததாகச் சொல்வதிலும்("with the total commitment of the armed forces",
the Tamil rebels in an unprecedented humanitarian operation finally defeated
militarily ")பயங்கரவாதத்தைக் கைக்கொண்டு, மக்களை அழித்தபடியே இன்னொரு
பயங்கரவாத்தைச் சட்டபூர்வமாக இயக்குகிறார்கள்.அதைப் பெரும்பாலும் பாதுகாப்பு என்ற
போர்வையில் வைத்திருக்கும் ஆளும்வர்க்கம், இன்னொரு இனத்துக்குள் ஆதிக்கஞ் செய்ய
முனைந்த ஆளும்வர்க்கத்தையும் அதன் ஆயுதச் சர்வதிகாரத்தையும் அழித்துவிடப்
பல்லாயிரம் அப்பாவி மக்களை வேட்டையாடுவதை எதன் பெயராலும் நியாயப்படுத்த முடியாது."


இக் கட்டுரையூடாக நான் "புலிகளது இறுதிவரையான போரடிச் சாதல் குறித்தோ அல்லது பிரபாகரன்-புலிகள் இல்லாத இலங்கையில் புரட்சி செய்வது குறித்தோ" பேசமுனையவில்லை.ஆனால், அந்நிய நலன்களுக்கான இலங்கையைத் தகவமைக்கும் மகிந்தாவின் அரசியல் இலக்கை,அவர் அடைந்துவிட்டதில் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள்தம் அவலத்தைப் பேசுவதில் எனது தன் முனைப்பைக் கச்சைக்குள் திணிக்க முனைகிறேன்.-அவ்வளவுதாம்!மேலே தொடர விரும்புகின்றவர்கள் தொடர்க.



மகிந்தா இராஜபக்ஷ ஜோர்தானிலிருந்து புலிகளது இறுதிமுடிவுகுறித்துக் இங்ஙனம் உரைக்கிறார்:"My return will be back to a country free of terrorism"இந்தப் பார்வையினூடாகத் தமது இராணுவவெற்றியை உலகுக்கு நியாயப்படுத்தும் இலங்கை அதிபர்,இதுவரையான தனது இராணுவவாத அரசியலையும் முற்று முழுதாகத் துறந்துவிடவேண்டிய இன்னொரு வினையையும் இத்துடன் உரைப்பதாகவே உலகங் கருத்தாற் காணவேண்டிய நிலையில்,இதுவரை புலித்தலைவர் பிரபாகரனோடு பயணித்த போராளிகளின் நிலைகளையும்,அவர்களது தலைவரது நிலையையும் குறித்தெதுவும் உரைக்கவில்லை.It is unclear whether the government troops, rebel chief Prabhakaran Velluppilai have arrested or killed. He had, according to the military in the combat zone be halted.இதை,நான் மிகவும் அவதானத்தோடேதாம் கூறுகிறேன்.பிரபாகரனது தலைக்கு இந்தியா விலைகூறிக்கொண்டிருக்கும்போது,அவரது தலைவிதியை அவரே தீர்மானித்தாரா அல்லது அடுத்தவரிடம் கையளித்தாராவென்பது தமிழ்பேசும் மக்களுக்கு இதுவரை தெரியாது.

இவருக்காகப் பல பத்தாhயிரம் இளைஞர்களைப் பலிகொடுத்த தமிழ்பேசும் மக்கள் இறுதியில் பிரபாகரனின் உயிருக்காகச் சில தினங்களுக்குள்ளேயே பல்லாயிரம் தமது உயிர்களைக் கவசமாக்கி அழிந்தார்கள்.இது,தமிழர்களது உரிமையின்வழி நியாயப்படுத்தப்பட்ட கொலைகள்.மக்களது அழிவில் இலங்கை அதிபர் "பயங்கரவாதத்தை வென்றதாகவும்,புலிகள் சரணடையாது போராடித் தியாகிகளாவதும்" இதன் அர்த்தமாக விரிகிறது.

இங்கே,எவரும் வெற்றிகள் குறித்துப் பரப்புரை எழுதும் இந்தத் தருணத்தில் நாம் இலங்கையில் தமிழ்பேசும் மக்களது சமூகசீவியத்தைக் குலைத்த அரசியல்,பொருளாதாரப் போக்கில் புலிகளையும்,இலங்கை அரசையும் குறித்துத் தீர்ப்பெழுதுவதல்ல இன்றைய பணி.எமது மக்களது வாழ்வைத் தமிழீழத்தின் பெயரால் கருவறுக்க உடந்தையாகவிருந்த அனைவரையும் குறித்துக் கேள்வியொன்றை எழுப்புகிறோம்.அதாவது,"இன்றுவரை கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"இந்தச் சாமானியக் கேள்வியைமட்டுமே கேட்கின்றோம்.இதுதாம் இன்றைய அடிப்படையான அரசியலைப் புரிவதற்கான மாற்று.இக் கேள்விக்குப் பதிலாக இனவாத அரசியலில் உரைத்துப் பார்க்கும் தமிழ் அரசியல் நடாத்தைகள் மிக விருத்தியாகப் பேசப்பட்டாகவேண்டும்.




"I am happy to observe that the need to combat terrorism comprises an important element of the G11 White Paper. We must work closely with the G8 to have co-ordinated and concerted global action in combating terrorism in all its manifestations. Enactment of appropriate legislation and intelligence sharing must comprise the core of this exercise. "-Mahindha.உலகத்தின் முன் இலங்கை அதிபர் மகிந்தா நடாத்தும் அரசியல் மிகத் தெளிவான பொருளாதாரப் போக்குகளை நமக்கு உரைக்கிறது.இதன் தொடராகத் தான் நடாத்திய போரினது இலக்கைத் தான் அடைந்துவிட்டாதாக ஜோர்தானிலிருந்து அறைகூவிலிட்டுச்சொல்லித் தமது எஜமானர்களைக் குதுகாலத்தில் ஆழ்த்துகிறார்.அவர்,பல்தேசியக் கம்பனிகளின் தேவைக்காக இலங்கையைத் தயார்ப்படுத்திய நிலையில்,தொழில்வள நாடுகளோடு பயங்கரவாதத்துக்குமட்டுமல்ல அவர்களது பொருளாதார இலக்குகளோடும் இணைவதாகவே ஊர்ஜிதப்படுத்திக் குறிப்பெழுதுகிறார்.

வருங்கால இலங்கையில் அந்நிய மூலதனம் தங்குதடையின்றிப் பாய்வதற்காகப் பணயக் கைதிகளாக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவரும் மகிந்தாவின் முன் பெருமைகொள்ள எதுவுமில்லை.அவர் புலிகளை வென்றதான இன்றைய அரசியலுக்கு வாரீசுமட்டுமல்ல மாறாக மாறிவரும் இலங்கை அரசியலுக்கும் அவரே வாரீசாகிறார்.இந்த இலங்கை நிச்சியம் அந்நியத் தேசங்களது வேட்டைக்காடவே இருக்கும்.இது,உலக ஏகாதிபத்தியங்களின்வழியில் "இனச் சேர்க்கை-ஒன்றித்தல்"என்றவரையறையுள் இலங்கையிலுள்ள மக்களினங்கள் யாவையும் ஒரு தேசியவினவுருவாக்கத்துள் இட்டு நிரப்பும் காரியத்தை பூகோளமயமாகும் பொருளாதாரப் போக்குள்; அசைவியக்கங்கொள்ளும் இலங்கையை உருவாக்கும்.

மக்களினங்களின் அடையாளங்கள் இலங்கைத் தேசியத்துள் மெல்ல உள்வாங்கப்பட்ட இலங்கையை, அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தும் அரசியலைப் புறந்தள்ளமுடியாதபடி இலங்கை ஆளும்வர்க்கம் தமது பொருளாதார இலக்குகளை இலங்கையின் தேசிய எல்லைக்குள் நிறுவமுடியாதிருக்கும் இன்றைய இலங்கைப் பொருளாதாரப் போக்குகள், மிக வன்மையாக இலங்கையினது சுய பொருளாதார இலக்குகளை மட்டுமல்ல அந்தத் தேசத்தினது மக்கனிங்களையே வர்த்தகச் சமுதாயத்துக்கேற்றபடி தகவமைக்கும் நிலைக்குள் உந்தித்தள்ளப்பட்டுள்ளது.இது,இலங்கையில் உருவாக்கி வைத்துள்ள அரசியலில் முதலில் பலியாக்கிய இனம் தமிழினமாகும்.இந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுத்த அரசியலை முன்னெடுத்தவர்களே தமிழர்கள்தாம்.இந்த இலக்கில் வீழ்த்தப்பட்ட தமிழினம் உலகெங்கும் அகதியாகக் குடியேறித் தனது தலைமுறையையே அந்நியத் தேசத்துக்கு அடிமையாக்கிய நிலையில், இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் மிக யதார்த்தமாகப் பெரும்பான்மை மக்களது உறுப்புச் சமுதாயமாக மாற்றப்பட்டு காலவோட்டத்தில் தனது காலடித் தடத்தை அழியவிடும்.இது,இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கிசைவான இலங்கையின் தேவையுள் ஒன்று.


மகிந்தா இதைக் கெட்டித்தனமான மொழியினூடாக உலகத்துக்கு உணர்த்துகிறார்.


அவரது காலத்து அரசியல்-பொருளாதாரப் போக்கில் அவர் செய்யவேண்டிய அரசியலின் இந்த இலக்கு வேறானவொரு தடத்தை இனிமேல் உருவாக்காது.இது,தமிழுக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் சங்கு ஊதும்.தமிழகத்தை இந்த இலக்கில் பார்ப்பவர்களுக்கு அது உருவாக்கும் இளைய தலைமுறையைத் தமிழாக இனங்காணவா முடியும்?-இலங்கைமட்டும் இதலிருந்து தப்ப முடியுமா?


இந்த நிலையில்,இலங்கை அரச அதிபர்மீது போர்க்குற்றுஞ் சுமத்தும் எந்தத் தார்மீகவுரிமையையும் எவரும் கொள்ளமுடியாதவொரு அரசியலை இலங்கைக்குக் கற்பித்த உலகப்பொருளாதார நிறுவனங்கள், மிகந்தாவினது அரசியல் நடாத்தையை"இலங்கையர்கள்"என்ற பொதுமைக்குள் கட்டிக் காத்துவிட்டது.இது,இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான முதல் அரசியல்-இராணுவ முன்னெடுப்பை மக்களது அழிவில் கட்டியமைக்க ஒப்புதல்கொடுத்த ஆசியாவினது வர்த்தக நடாத்தைக்கு உந்துதலாக இருப்பவர்கள் மகிந்தாவை எந்தச் சட்டத்துமுன்னும் கொணரமுடியாத முட்டுக்களை ஐ.நா.சபையிலிருந்து தொடங்கியுள்ளனர்.இதன் விருத்தியான இன்னொரு அரசியல், ஆசியா-ஐரோப்பா எனும் பொருளாதார வியூகங்களுக்கமைய இலங்கைமீது ஆதிக்கஞ் செய்ய முனையுந் தருணங்களில் இருஷ்சியாவும்,சீனாவும் மட்டுமல்ல இந்தியாவும் இலங்கையைக் காத்து வருவதாகவே இருக்கும்.

பிரபாகரன் இல்லாதவொரு இலங்கையில் பயங்கரவாதம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் பட்டுணியும் பாராமுகமும் அனைத்து மக்களினங்களுக்குள்ளும் நிலவும்.இது,இலங்கையைமட்டுமல்ல அதை வேட்டையாடும் கம்பனிகளையும் நிச்சியம் பதம் பார்க்கும்.பல் தேசிய மக்களினங்களை ஒன்றித்த தேசத்துக்குள் முடக்கிய பொருளாதாரம், அதன் ஒன்றித்த எதிர்ப்புக்கூறுகளையும் மறுமுனையில் வளர்த்தபடிதாம்"புலிப் பயங்கரவாதத்தையும்"அடக்கியுள்ளது.அங்கே, செத்தவர்களது கணக்கு வெறும் எழுபதாயிரம் என்று உலகஞ் சொல்லும்.புலிகளது வால்களுக்கோ அதுள்"துரோகிகள்-தியாகிகள்-மாவீரர்கள்-நாட்டுப்பற்றாளர்கள்"என்று பற்பல பிரிவுகளுடாகச் சாகடிக்கப்பட்டவர்களுக்குக் குறிப்பெழுதுதல் பிரபாகரனோடு முடிந்துவிடாது.


ஆனால்,நாம் இவர்கள் எல்லோரிடமும் இப்போது கேட்கும் கேள்வி இதுதாம்:


"இன்றுவரை இலங்கைத் தேசத்துள்ளும்,வெளியிலும் கொல்லப்பட்ட மக்களுக்கு எந்த அரசியல் பொறுப்பு?"


I will return to a land that, of the barbaric acts of the LTTE is totally free.



ப.வி.ஸ்ரீரங்கன்
16.05.09

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...