Sunday, August 31, 2008

உவற்புடை ஊனீழம் சிந்தையுள் எரிய

குருதி மழை
கோலமிழந்த ஈழ முற்றம்
நெடும்போர்ப் புயற் பொழுது
நெற்கதிர் தலை வீழ்த்திய குருதி வெள்ளம்






கடும் பசி கண்டகம் சுடலைக் கோலம்
வீடுடை குருதியுறை பிணம்
காடுடையான பிஞ்சுகள்
கேடுடையானார் ஈழத்தவர்



புண் உற்ற போர் நெறியுள்
மண் தின்ன மனங்கள் அழிய
உடலமும் எலும்பும் ஊழியுள் மருவ
உவற்புடை ஊனீழம் சிந்தையுள் எரிய

தீயடைந்த விதியெனத் தேறிய போர்வாய்
மாயும் வகை இதவென்றாகப் போயின உயிரும்
பிணமென வீழ்ந்தன பிஞ்சுகள் இதயம்
பேயடைந்த ஸ்ரீலங்கா போரிடும் புலி என

உடலால் நிலம் தடவிக்
குருதியால் மெழுகினாயா தமிழமுதே?
பின்னயர் அனைவரும் அழிய
அறுந்தது கனவுடன் காலமும் நீயாய்!

Sunday, August 17, 2008

ஜோர்ச்சிய,இருஷ்சிய யுத்தம்

உலகத்தைக் கவ்வும் மூலவளத்துக்கான யுத்தம்.

(3)


உலகத்தில் சமாதானம்,அமைதி,ஜனநாயகம் மற்றும் ஸ்திரமான அரசியல் நிலவும்போது அமெரிக்கப் பூகோள வியூகமும் அதன் வாயிலான அதன் கேந்தர அரசியல் ஆதிக்கமும் இல்லாது போகும் என்பது உலகறிந்த அரசியல் அறிவாகும்.இன்று, இடம் பெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் அடாவடித்தனமான ஆட்சி மாற்றங்கள், நாடு பிடித்தல்கள் யாவும் உலகத்தில் அதீதமாகத் தேவைப்படும் மூலப்பொருள்களுக்கான அரசியலாக விரிகிறது.இதன் தொடர்ச்சியாக நாம் பல் வகையான யுத்தங்களைப் பார்த்துவிட்டோம்.


இருஷ்சியாவுக்கும் ஜோர்ச்சியாவுக்குமான தற்போதைய யுத்தத்தில் அந்நியச் சக்திகள் யாவும் அறம் பற்றியும்,மக்களால் தோர்ந்தெடுத்த ஜனநாயகம் குறித்தும் தர்மம் பேசியபடி, உடனடி சமாதானம்-ஒப்பந்தமென அரசியல் அரங்கைக்கூட்டிப் பேசுவதன் தொடர் நிகழ்வில் அரங்கேறும் பூகோள வியூகம் என்பது தத்தமது தேசங்களுக்கான மூலவளங்களைக் கொண்டிருக்கும் தேசங்களையும், அதன் ஆட்சியையும் தமக்குச் சார்பானதாக மாற்றவும் அதன் வாயிலாக மூலவளத்தைத் தங்குதடையின்றி பெறுவதற்குமான அரசியல் நாடகத்தில், அப்பாவி மக்களை அழித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் யுத்தத்தைத் தொடக்கிக் குருதியாறைத் திறந்தபின்பு உணவுப் பொட்டலத்துடன் தமது நோக்கங்களைப் பெறுவதற்காக இயங்கும் தேசங்களையும் நாம் இலகுவாகப் பார்க்கின்றோம்.என்றபோதும், அமெரிக்க அரசியலானது மிகவும் இக்கட்டானவொரு சூழலுக்குள் வந்துவிட்டது.இதன் ஆதிக்கம் தொடர்ந்து நிலவுவதற்கானவொரு உலக அரசியல் பதட்டம் மிக அவசியமானது.இதன் தொடர் நிகழ்வார்ந்த வியூகத்தில் அமெரிக்க அரசானது புதிய பனிப்போரை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுப்பதற்கேதுவானவொரு வெளியை போலந்தில் நிறுவும் ஏவுகணைப் பாதுகாப்புத்திட்டத்துள் வகுத்துள்ளது.போலந்தில் வரும் 2011 க்குள் பத்து ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை அது நிறுவவுள்ளது(Ground−Based Midcourse Defense System" (GMD) இதைக்கடந்து செக் குடியரசுள் நிறுவப்படும் ராடர் கருவியூடாகப் புதிய பனிப்போரை மிக இலகுவாக இருஷ்சிய ஆதிக்கத்தின்மீது திணிக்கும்போது, இருஷ்சியாவின் மக்கள் நலக்கட்டுமானங்கள் பலவீனம் அடையும்.தொடர்ச்சியான இரணுவவாதப் பொருளாதாரமானது மக்களை-மக்கள நலக் காப்புறுதிகளைக் கேள்விக்குட்படுத்தும் இதன் வருகையோடு மிக இலகுவான கொந்தளிப்பு-குழறுபடி அரசியல் போக்கை இருஷ்சியாவுக்குள் தொடர்ந்து நிலவச் செய்யும்போது,இத்தகைய தேசத்தால் அமெரிக்க ஆதிக்த்தை எதிர்க்கும் வலுவில்லாதுபோகிறது.


இன்றைய பொருட்குவிப்பின் தொடர்ச்சியில் உலகத்துள் நிலவும் எரிபொருள் இருப்பைத் தமதாக்கும் முழுமுயற்சியில் அமெரிக்க வல்லாதிக்கும் முனையும் ஒவ்வொரு நகர்விலும் ஐரோப்பாவினதும், குறிப்பாக ஜேர்மனியினதும் ஒத்துழைப்பு அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கிசைவாகவே இருந்துவருகிறது. இதன் தொடர்ச்சியான உலகப் பங்கீட்டு அரசியல்-போர் வியூகங்களுக்கு மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவையும் மிக அவசியமான அமெரிக்க சார்பு அரசியலை மிகக் கண்ணியமானவொரு மக்கள் நல அரசியலாக ஐரோப்பாவுக்குள்ளும் அதன் மக்கள் கூட்டத்துள்ளும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் திணித்து வருகின்றன.இவை, மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் குழிதோண்டிப்புதைக்கின்றது.இதுன் மறு விளைவானது ஐரோப்பியக் கண்டத்துள் புலம் பெயர்ந்த மக்கள்மீதான இனவாத அரசியலாகவும் விரிந்து தொடர் இனவாதத்தை உற்பத்தி செய்கிறது.


இருஷ்சியாவுக்கும்,ஜோர்ச்சியாவுக்கும் இடையிலான முரண்பாடுகளின் விருத்தியானது ஐரோப்பிய எரிபொருட்கட்டுப்பாட்டை இருஷ்சியாவின் அரசியல் ஆதிகத்துள் கொணர்ந்திருப்பினும் போலந்துடனான நட்புறுவு ஒப்பந்தத்தின் வாயிலாக அமெரிக்காவானது இருஷ்சியாவின் அரசியல் வியூகத்தை உடைப்பதற்கானவொரு மிக நுட்பமான போர்த்தந்திரோபாயத்தை உலகத்தின்மீது திணித்திருக்கிறது.இங்கே,எண்ணைவள நாடுகளுக்கிடையிலான எல்லாவகைத் தார்மீக உறவுகளும் சிதலமடைய அமெரிக்க பூகோள அரசியல் வியூகம் தூபமிடுகிறது.இதன்வாயிலாக இருஷ்சிய அரசியல் வியூகமானது தனது தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தொடர்ந்து நகர்த்தமுடியாது அந்நிய நிதிநிறுவனங்களை அல்லது உலக நாணயச் சபையை,உலக வங்கியை நாடவேண்டியதும்,தங்கியிருக்கவேண்டியதுமானவொரு சூழல் ஏலவே இருஷ்சியாவுக்கு வந்துவிட்டது.இது இறுதியில் போர்முனைப்படையவும் அதன் தொடர்பான அரசியலால் இருஷ்சிய மேலாதிக்கம் தன்னளவில் தகர்வதற்குமானவொரு யுத்தமாக முனைப்பெறும் உள்நாட்டு யுத்தம் ஒன்று இருஷ்சிய மக்களால் முன்னெடுக்கப்படும்.அப்போது பூட்டின்-மெட்வேடெவ் கூட்டு அரசியல் ஆளுமையை இழக்கும் ஒரு கனவை அமெரிக்க-நேட்டோக் கூட்டுக்கள் திட்டமிட்டபடி தரிசித்துவருகின்றன.


ஜோர்ச்சியாவென்பது கௌவ்கசுஸ் பிரதேசத்தின் எண்ணைவள அரசியலில் மிகப்பிரதானமானவொரு பாத்திரத்தை வகிக்கின்றது.இது இருஷ்சியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலானவொரு பாரிய கேந்திர முக்கியத்துவத்துக்கான சதுரங்க அரசியலை விரித்துள்ளது.இந்தக் கேந்திர முக்கியத்துவமே அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளின் இருஷ்சியாமீதான ஆட்சேபமாகவும்,யுத்த எதிர்ப்பாகவும் இன்னொரு கட்டத்தில் ஜோர்ச்சியாவின் இறைமையாகவும் இவர்களின் வாயிலிருந்து வருகிறது.இது எப்பவும் தமது வளத்தையும்,அதன் வாயிலாகத் தமது நிதி முதலீட்டையும் முன்வைத்த அரசியலாக இருக்கும் என்பதை இவர்கள் மறைத்தபடி உலகுக்கு ஜனநாயகம் பேசுகிறார்கள்-ஜோர்ச்சிய அப்பாவி மக்களை காப்பதாகவும் நாடகம் போடுகின்றனர்.இங்கே,நமது கண்முன்னால் நடந்தேறும் ஈராக் யுத்த அழிப்பு-அராஜக யுத்தம் நமக்குக் கற்பிப்பது ஈராக்கு ஜனநாயகம் என்பதையே.ஆனால்,அமெரிக் அட்டூழியம் ஈராக்கை தாக்கும் எந்த இறையாண்மைத் தனக்குள் கொண்டிருந்ததென்பதை இதுவரை இவர்கள் கேள்விக் குட்படுத்தவில்லை.


ஜோர்ச்சியாவுக்கூடாக கட்டப்படும் நபுக்கோ புரஜெட்(Nabucco Projekt und das Projekt Kaspisches Erdoel Pipeline Odessa-Brody und auch der BTC Pipeline)(எரிவாயு மற்றும் எண்ணைக் குழாய்கள்)இந்த இருஷ்சிய யுத்தத்தால் மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது.கஸ்பிஸ் எண்ணையூற்றைத் தொடர்ந்து ஐரோப்பாவுக்குக் காவிவரும் மேற்காணும் குழாய்கள் யாவும் ஜோர்ச்சியாவினூடாகவே அதன் நிலத்தைப் பிளந்தபடி துருக்கியின் செய்கான்;(Ceyhan) துறைமுகத்தை வந்தடைகின்றன.இதைக்கடந்து நபுக்கோ குழாய்கள் துருக்கியை ஊடறுத்து பல்கேரியா மற்றும் போலந்துவரை நீண்டுவரும் ஒரு திட்டம் இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தால் கேள்விக்குறியாக மாறியது மேற்குலக ஆளும் வர்க்கங்களின் மனதில் யுத்த வெறியாகவும் அதை இருஷ்சியாவோடு செய்வதிலுள்ள அழிவுச் சிக்கலாலும் ஆறு அம்ச ஒப்பந்தமாக இன்று வருகிறது.இதன்படி இருஷ்சியா தனது படைகளை ஜோர்ச்சியாவிலிருந்து விலக்குவாதாக வாக்களித்தாலும் இந்தப் பிரதேசம் இருஷ்சிய மற்றும் அமெரிக்க வல்லூறுகளின் வேட்டைக்காடாகவே இருக்கும்! இதுவே, அமெரிக்க அரசின் உலக ஆதிகத்துக்கானவொரு அரசியல் சூழலை மிகவும் அர்த்தபுஷ்டியாக ஆக்கித் தருகிறது.அமெரிக்க இராணுவவாதம் மேலும் விரிவடைய-விரிவடைய அதன் ஆதிக்கம் தொடர்ந்து அந்தத் தேசத்தை கடன் நிலைக்குள் தள்ளும். இது, உலகத்தை இன்னும் வேட்டைக்குட்படுத்தும் அரசியலையே அமெரிக்க ஆளும் வர்க்கத்துக்கு வழங்கும்.எண்ணைவளத் தேசங்களைக் கொள்ளையடிப்பதால் வரும் உபரியைக்கொண்டு தனது இராணுவத்துக்குத் தீனீபோடும் அமெரிக்க அரசானது உலகத்தைத் தனது ஆதிகத்துக்குள் இருத்தும் குறைந்த காலவகாசத்தையாவது இந்த அமெரிக்காவுக்கும் அதன் ஆளும் வர்க்கத்துக்கும் வழங்கிவிடுகிறது.இது தற்காலிகமானதுதாம்.எனினும்,இன்றைய எண்ணைவளத் தேசங்களின் கையாலாகாத அரசியற்றலைமைகளால் யுத்தமென்பது தவிர்க்கமுடியாதபடி உலகத்தில் பலகோடி மக்களை அழித்துவருகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.08.2008

Monday, August 11, 2008

ஜோர்ச்சியாவில் குண்டுகள் ஆதிக்கத்துக்காக வெடிக்கின்றன

உலகத்தைக் கவ்வும்
மூலவளத்துக்கான யுத்தம்:(2)



இன்று ஒரு பக்கச் சார்வான யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி மேற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எஜமானர்களை அறைகூவி அழைக்கிறார்.தனது தேசத்தின் தலை நகரான Tiflis நோக்கி நகரும் இருஷ்சியப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக ஒரு அரசியல் நாடகத்தில் அமிழ்ந்துபோகிறார்.இவர் ஒரு "அப்பாவி-தனது அரசியல் கணிப்பின் தவறினால்" தனித்துப்போன அரசியல் வாதியாகவும்,அந்தக் காரணத்தால் தவறான மதிப்பீடுகளால் பிரிந்துபோன தென் ஒசாத்தியாவை மற்றும் அப்சாசியன் மாகாணங்களை ஜோர்ச்சியவோடு இணைக்கும் இராணுவ நடவடிக்கையில் இறங்கியதாகவும் மேற்குலக ஊடகங்கள் காதினில் பூ வைக்கும் காரியத்தில் இறங்கியுள்ளன.நாமும் போதாதற்கு இவ் நிகழ்வுகளின் பின்னே அலைகிறோம்.இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் துவக்கி வைத்தவர்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிப்பதாக நாடகம் போடுகின்றனர்.தமக்கும் ஜோர்ச்சிய இராணுவ நடவடிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்பதாகவும்,தாம் இருஷ்சியாவைக் கண்டிப்பதாகவும் ஓலமிடுகிறார்கள்.இதுவொரு பரீட்சார்த்த யுத்தம்.இங்கே,இருஷ்சியா தனது இறையாண்மையைக் காப்பதற்கானவொரு போராட்டத்தில் தன் இருப்பை நிலைநாட்டுகிறது.

நாம் இது குறித்துக் கருத்துச் சொல்வதைவிட இந்த யுத்தத்துள் நிலவும் கேந்திர-புவிகோள நலன்கள் குறித்துக் கருத்துகள் முன்வைப்பதில் கவனத்தைக் குவிக்கிறோம்.எங்கள் வாழ்வும்,சாவும் ஏன்-எதற்கு என்றே அறியாதவொரு நிலையில் நமது தேசம் உருக்குலைகிறது.இந்தச் சூழலில் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இருஷ்சியப் பொருளாதார நலன்களின்வழி நகரும் அரசியல்-பூகோள வியூகங்கள் உலகை யுத்த நெருக்கடிக்குள் தள்ளித் தத்தமது நலன்களை அடைய முற்படும் தருணங்களில் அப்பாவிச் சிறுபான்மை இனங்கள் அழிந்துபோகிறார்கள்.இதன் தொடர்ச்சியில் ஒடுக்கப்படும் இனங்களின் தேசிய எழிச்சிகள் யாவும் வல்லரசுகளின் அரசியல் இலாபங்களுக்காகப் பலிகொள்ளப்படும் இந்த நூற்றாண்டில்,நாம் வந்தடையும் அரசியல் என்னவென்பதும்,எம்மிடம் எஞ்சம் விடுதலை எதுவென்பதும் கேள்வி.


இதைக்கடந்து,கடந்த சில தினங்களாக நடைபெறும் யுத்தத்தின் மூலம் என்ன?இவ் யுத்தத்தைக் கொண்டு நடாத்த முனைந்த சக்தி எது? சாகஸ்வல்லி என்பவர் உண்மையில் தனது அப்பாவித்தனமான கணிப்பினால் இவ் யுத்தத்தை ஆரம்பித்தாரா? என்பதற்கு ஓரளவு விடை தேடுவதில் கவனத்தைக் குவிப்போம்!

"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று ஓலமிடுவதிலும் மத்திய ஆசியாவிலும்,ஐரோசியவிலும் நிகழும் அமெரிக்க நலன்கள் நமக்குப் புலப்படுகிறது.

"ஜோர்ச்சியாவின் சுயாதிபத்தியத்தை மதிக்க வேண்டும்"என்றும் "உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சு வார்த்தை மேசைக்கு வரவும்"என்று ஜேர்மனிய அதிபரான அம்மணி மேர்க்கல் அங்கேலா அழுது வடிகிறார்.

ஐயா சார்க்கோசி ஆடிப்போய் உடனடியாக ஜோர்ச்சிய விரைகிறார்.

உலகத்துக் கிறித்தவர்களின் தேவ தூதன் போப்(பு)பாண்டையர் இந்த நூற்றாண்டின் ஈராக் அவலத்தைத் தன் அங்கிக்குள் மறைத்தபடி இருஷ்சியாவுக்குக் கட்டளையிடுகிறார்:"கிறிஸ்தவத்தின் பெயரால் யுத்தத்தை நிறுத்தி முடிவுகாணவேண்டுவது உலகக் கிறித்துக்களின் பெரு விருப்பம்"என்று கிறித்துவம் அகிம்சையைப் பேணுகிறது.

ஜேர்மனிய வெளிநாடடமைச்சர் ஸ்ரையின் மாயர் தனது உலகக் கூட்டாளிகளான அனைத்து நாடுகளினதும் வெளித்துறைமந்திரிகளுக்கும் ஓய்வின்றித் தொலைபேசுகிறார்.ஜோர்ச்சிய யுத்தத்தால் அழியும் மக்களைக் காப்பதற்காகக் கடும் பிரயத்தனஞ் செய்கிறார்களாம்.நல்லது!

இந்தக் கௌகசுஸ் யுத்தம் (KaukasusKrieg) அண்மித்துவரும் அணுவாயுதத் தாக்குதலுக்குக் கட்டியம் கூறுகிறது.இது,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து பூகோள அரசியல் வியூகத்தினது மிகப் பெரியவொரு வெளியைத் தாங்கியுள்ளது.ஈரானைச் சாட்டுவைத்து,போலந்து மற்றும் செக் குடியரசுள் நிறுத்தப்படப்போகும் அமெரிக்க ஏவுகணைத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்துக்கும் இவ் வலயத்துக்கும் அதிகம் தொடர்புகளுண்டு.இதன் தொடராக இருஷ்சியாவின் முதுகெலும்பை உடைக்க முனையும் அnமிரிக்கக் கூட்டணிக்கு-நேட்டோக்கூட்டணிக்கு மிக அவசியமானவொரு அரசியல் சதுரங்கக்காயாக ஜோர்ச்சிய இருக்கிறது.கௌகசுஸ் வலயமானது புவியற்படி 1100 கிலோமீட்டர் நீளமான மடிப்பு மலைத்தொடர்களைக்கொண்டு கருங்கடலிலிருந்து கஸ்பிஸ்சன் கடல்வரை விரிந்து கிடக்கிறது.இவ் மலைத்தொடரின் உச்சியானது 5642 மீட்டர் உயரத்தில் கம்பீரமாகக் கொலுவற்றுள்ளது.இந்த மலைத்தொடர்களினது பிராந்தியம்(Territorium)இருஷ்சியா,ஜோர்ச்சியா,ஆர்மேனியன்,அசர்பைட்சான் வரை விரிந்து மேவிச் சிறியவொரு பகுதி துருக்கிவரை நீண்டுகிடக்கிறது.இங்கே,(ஐம்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்வதால் அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பல்மொழி-பண்பாடுகளுடையவர்களாகவும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்பவர்களுமாக இருக்கிறார்கள்.இங்கே,புவிப்பரப்புள் நிலைபெற்றுக்கிடக்கும் கனிவளங்களே இவ்பிரதேசத்தின் கேந்திர அரசியலைத் தீர்மானிக்கிறது.அமெரிக்காவுக்கோ அன்றி மேற்கு ஐரோப்பாவுக்கோ இப்பிரதேசம் ஒரு முக்கியமானவொரு அரிய உயிர்வாழ்விக்கும் வலயமாக இருக்கிறது.400.000.ஆயிரம்(நான்கு இலட்சம்)சதுரக்கிலோமீட்டர் உடைய இந்தப்பிரதேசத்தில் நடந்தேறும் அரசியல் முழு உலகத்தையும் வேட்டையாடும் அரசியலாக விரியும் பொருளாதார இலக்குகளைக்கொண்டியங்குகிறது.

இந்த இலக்குகளை அறியாதவர்கள் ஜோர்ச்சியவென்பது அமெரிக்காவுக்கும் இருஷ்சியாவுக்குமிடையிலான பனிப்போரை ஆரம்பித்து வைத்ததாகச் சொல்வதில் இப்பிரதேசத்தில் ஜோர்ச்சியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார-நிதியீடுகளையும் அதன் கேந்திர ஸ்த்தானத்தில் தொடர்ந்து புதைத்துத் துருக்கிவரை வரும் எண்ணைக் குழாய்க்குமான இருப்புக்குறித்து மௌனித்தல் புரிந்துகொள்ளத் தக்கதல்ல.

தொடர் யுத்தம் நிச்சியமாகக் கடைப்பிடிக்கப்படும் தருணத்தில் இருஷ்சியா தான் விரும்பியவொரு இலக்கை அடைவதென்ற வியூகத்தின்வழி போராடுவதென்பதில் எனது கணிப்புத் தவறாகாது.இவ்யுத்தத்தின்மூலமாகத் தொடர்ந்து பற்றியெரியும் காடுகள்,நிலங்கள்-கட்டிடங்கள் இன்னொரு இலக்கைக் குறிவைக்கும்.அதுவேதாம் அமெரிக்க-ஐரோப்பிய உயிர்வாழ்வோடு அரசியல் செய்வதாக இருக்கும்.

உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரும் எண்ணைக் குழாய்"Baku-Tabilisi-Ceyhan-Pipeline(BTC)"என்பது அசைர்பைட்சான்,ஜோர்ச்சியா ஊடாகக் கருங்கடல் ஆழ்ந்து துருக்கிவரை மத்தியகடலூடாக ஐரோப்பாவை அண்மிக்கக் காத்திருக்கிறது.இதை நெருப்பிலிடும் அவலத்தை எதிர்கொள்ளும் தகமை யாருக்குண்டு?
இக் குழாயின்வழியாக அரேபிய மற்றும் இருஷ்சிய எரிபொருள் ஆதிகத்தில் ஐரோப்பா தங்கியிருப்பதைத் தவிர்க்க முடியும்.இதன் மிகப்பெரும் நன்மையாகவும் இருஷ்சியாவின் பொருளாதார ஆதிகத்தை முறியடிப்பதுமாக இருக்கும் இவ்வலயத்தின் மதிப்பு உலகத்தின் முன் மிக அதிகம்.


"நாங்கள் அலார்ம் செய்கிறாம்,இறையாண்மை உடைய ஜோர்ச்சியாவை இருஷ்சியா தாக்குவது ஜனநாயக விரோதம்"-அமெரிக்காவும் அதன் அதிபர் புஷ்சும் ஓங்கி ஒலிக்கையில்"தனியாட்சியுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின்மீது தாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது!"என்று அமெரிக்கா கத்துவதில் அதன் அரசியல் புரியத் தக்கது.1998 ஆம் ஆண்டு ஜேர்மனியச் சைற் பத்திரிகை ஈராக் யுத்த முன்னெடுப்பின் அடவாடித்தனமானது ஐ.நா.எல்லைகளை-சட்டத்தை மீறுவதாகவும்,ஐ.நா.ஒப்புதல் தரவில்லையென்றும் வாதாடியபோது -அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர் திருவாளர் Brzezinski யிடம் கேட்கப்பட்ட நேர்முகத்தில் அவர் உதித்த முத்துக்கள் மிக அலாதியானது:

//zeit: Es gab dennoch keine offizielle Zustimmung der Vereinten Nationen zu Luftangriffen ...


Brzezinski: Es gab keine offizielle Ablehnung. Und es herrschte viel schweigende Zustimmung.//-
http://www.zeit.de/1998/48/ein_ende_finden




>>>சைற் பத்திரிகை: ஈராக்மீதான அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்கான அனுமதியை ஐ.நா.சட்டபூர்வமாக-உத்தியோக பூர்வமாக அனுமதிக்கவில்லை...

ப்பிறசின்ஸ்கீ: ஐ.நா.உத்தியோக பூர்வமாக விமானத்தாக்குதலை நிராகரிக்கவில்லை.அதாவது,மௌனமாக நமது திட்டத்தை-தாக்குதலை அனுமதித்துவிடுகிறது... <<<


இத்தகைய சூதாட்டத்தில் பூட்டின் கூறும் சதாம் இன்றைய ஜோர்ச்சிய அதிபர் சாகஸ்வில்லி.அடிப்படையில் வல்லாதிக்கம் வைத்த சட்டத்தை கையிலெடுக்கும் பூட்டின் தரப்புக்கு அரசியல் பாடம் நன்றாகவே புரிகிறது.


தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.08.2008.

Sunday, August 10, 2008

ஜோர்சியாவில் குண்டுகள்...

உலகத்தைக் கவ்வும் மூலவளத்துக்கான யுத்தம்.



இரண்டாவது வாய்ப்பைக் குறிவைக்கும் அமெரிக்காவும்,பழைய
பனிப்போரை சாத்தியமாக்கத்துடிக்கும் இருஷ்சியாவும்
போடத்துடிக்கும் கோல்கள்
நிச்சியம் உலகத்தினது குடிகளுக்கு விரோதமானது-உயிர்ப்பலிகளை இலட்சங்களிலிருந்து
மீளவும் மில்லியன்களாக்கும்.



நாம் தமிழீழத்தைக் கனவினில் தாங்கியபடி புலிகளுக்குள் முகத்தைப் புதைக்கிறோமா?இது அபத்தமான கேள்வியாக இருக்கிறதா?இருக்கணும்-இருந்தால் நிச்சியம் நமது அரசியற்பார்வையின் தரிசிப்பு நம்மை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லப்போகிறது.நமது விடுதலைக்காக நாம் செலுத்திய விலை அதிகமானது.இன்று உலகைப் பங்கீட்டுக்கொள்ளும் அரசியலுக்கு நமது வாழ்வும்-உயிர்ப்பும் பலிகடாவாக்கப்பட்டுவருகிறது.இந்த "நமது"க்குள் உலகத்தின் பல பாகத்திலுமுள்ள தேசங்களின் கனவுகளும் அடங்க நாம் என்று பட்டியலிடும் நமது அரசியல் புரியத் தக்கதே!இது,மிகத் தெளிவானது.



கடந்த சில தினங்களாக இருஷ்சிய மேலாதிக்கம் ஜோர்சியாவில் குண்டுகள் போடுகிறது.படையை நகர்த்திச் சில ஆயிரம் மக்களைப் பலிகொண்டு வருகிறது.கிட்டத்தட்ட 2000 மக்கள் ஜோர்ச்சியாவில பலியாகியுள்ளார்கள் என்று ஜேர்மனிய ஸ்பீகல் பத்திரிகை எடுத்துரைக்கிறது.ஒரு பக்க யுத்த நிறுத்தத்தைச் செய்து இருஷ்சியாவின் தாக்குதலிலிருந்து அமெரிக்க நிறுவனங்களின் சொத்துக்களைப்பாதுகாக்கும் அரசியலை ஜோர்ச்சியா முன்னெடுக்க அமெரிக்காவால் வற்புறுத்தப்பட்டு, அதன் விருப்புக்காக யுத்த நிறுத்தம் அமுலாக்கஞ் செய்யப்படுகிறது.கருங்கடலில் மையங்கொண்ட பூகோள அரசியல் யுத்தம் இன்னொரு தெரிவை உலகுக்கு வழங்கும் அமெரிக்காவின் இரண்டாவது வாய்ப்பை அடியோடு அழிக்குமா?அல்லது அமெரிக்காவின் தந்திரத்தை நிலைப்படுத்தும் சூழலை மத்திய ஆசியாவில் ஏற்படுத்துமா?இதற்கான தெரிவாக ஐரோஆசியாவின் முனைகளில் தவங்கிடக்கும் அரசியலை விளங்கும் ஒரு அவசியம் நமக்குண்டு.


கடந்த ஈராக் யுத்தம் பற்றிய கேள்வியை அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஆலோசகர் திருவாளர் ஸ்பீக்கினீவ் ப்பெர்சின்கீ (Zbigniew Brzezinski) அவர்களிடம் கேட்கப்பட்ட அன்றைய ஸைற் பத்திரைகயானது 1998 ஆம் ஆண்டு ஒரு சந்திப்பை அவரோடு செய்துகொண்டது.அங்கே கேட்கப்பட்ட கேள்வியானது அமெரிக்க அரசியலில் பூகோள அரசியலின் வியூகத்தைப்பற்றிய தெளிவை நமக்கு மிக இலகுவாக ஏற்படுத்தக்கூடியளவு போதுமான தகவல்களைக்கொண்டிருக்கிறது.இன்று ஜோர்ச்சியாவில் இருஷ்சிய இராணுவத் தாக்குதல்களைப்பற்றி மேற்குலகமும்,திருவாளர் போப்பாண்டவரும் அமெரிக்க ஆதிக்க வெறியர்களும் சொல்லும் புதிய தத்துவத்தை இருஷ்சிய மேலாதிக்கம் கிஞ்சித்தும் செவிமடுப்பதற்கில்லை.நாம் இந்த அரசியல் குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்பது அவசியம்.


ஈழம் என்ற கோதாவில் இழந்துவரும் மானுட அழிவில் நமது பூகோள அரசியல் அறிவு கேள்விக்குரியது.இதை மேலும் விரிவாக்கிச் செல்வதற்கு நாம் இன்று நடைபெறும் ஜோர்சிய மற்றும் ஈராக் யுத்தங்கள் பற்றிய சரியான புரிதலை உட்கொள்வது அவசியம்.

//die zeit: Die Welt stand am vergangenen Wochenende nahe vor einem Krieg. Die Vereinigten Staaten drohten den Irak anzugreifen, weil Saddam Hussein den Waffeninspektoren der Vereinten Nationen den Zutritt zu seinen Militäranlagen verweigert hatte. War diese militärische Eskalation nötig?


Zbigniew Brzezinski: Saddam hat uns keine andere Wahl gelassen. Seine einsame Entscheidung verlangte nach einer entschiedenen Antwort. Der Verzicht auf eine Reaktion hätte die Glaubwürdigkeit gekostet - und zwar nicht nur die der USA, sondern auch die der Vereinten Nationen. Aus diesem Grunde waren übrigens auch die Staaten, die zuvor militärische Angriffe immer abgelehnt haben, in der vergangenen Woche eher schweigsam - oder sie stimmten ihnen sogar zu.//
http://www.zeit.de/1998/48/ein_ende_finden





"ஸைற் பத்திரிகை:கடந்தவார இறுதியில் உலகம் ஒரு யுத்தத்தைத் தரிசிப்பதற்கு அண்மித்து வருகிறது.ஐக்கிய அமெரிக்கா யுத்தம் ஒன்றைச் செய்வதற்கான அச்சத்தை ஈராக்மீது திணிக்கிறது.ஏனெனிலில், சதாம் ஐ.நா.வினது ஆயுதப் பரிசோதகர்களைத் தனது தேசத்தினது இராணுவ நிலைகளுக்குள் விடுவதற்கு மறுத்து வருவதால்.இதற்கு இராணுவ விஸ்தரிப்பு அவசியமா?


ஸ்பீக்கினீவ் ப்பிறஸ்சின்கீ:சதாம் எங்களுக்கு வேறொரு தெரிவை விட்டுவைக்கவில்லை.அவருடைய தனித்த முடிவானது முடிந்த முடிவான பதிலைத் தருகிறது.தவிர்த்துக்கொள்வதூடான மறுவிளைவு நம்பிக்கைக்கு உலை வைக்கிறது.அது,ஐக்கிய அமெரிக்காவுக்கு மட்டுமல்ல,ஐ.நா.வுக்கும்தாம்.இக்கராணத்தால்,உலக நாடுகள் இதற்குமுன் இராணுவத்தாக்குதலை மறுத்தவர்கள்கூட கடந்த கிழமைக்குபின் மௌனித்துகிடக்கிறார்கள்.அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவை வழங்கிக் கிடக்கிறார்கள்."


மேற்காணும் நேர்முகத்தை 1998 ஆம் ஆண்டு எடுத்த ஸைற் பத்திரிகையானது இன்று இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தத்தை மிகவும் மலினப்படுத்தப்பட்ட வார்த்தைகளோடு வர்ணிக்கிறது."அழிவு.அவலம்,இடப்பெயர்வு" என்று கூறும் இந்த ஊடகங்கள் அன்றைய அடாவடித்தனமான அமெரிக்காவின் ஈராக்மீதான யுத்தத்தை அடக்கி வாசித்தவர்கள்.இவர்களின் அரசியலோடு மத்திய ஆசியாவின் எண்ணை மற்றும் எரிவாயு அரசியல் இருக்கிறது.உலகத்தைப் பங்குபோடும் யுத்தங்கள் அப்பாவி மக்கள்மீது திணிக்கும் வன்யுத்தங்களை இன்றைய வல்லரசுகள் தத்தமது அரசியல் பூகோள நலன்களின் வழிக்கேற்றவாறு நடாத்தி முடிக்கின்றன.இங்கே, ஐனநாயகம்,மானுட நேயம் என்பதெல்லாம் வெற்று வார்த்தைகள்தாமென்பதை அன்றைய அமெரிக்க ஜனாதிபதி காட்டாரின் அரசியல்-பாதுகாப்பு ஆலோசகரும் இன்றைய அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமான திரு.ப்பிறன்சிஸ்கீ Zbigniew Brzezinski ஊடாக நாம் இனம்காணமுடியும்.


அமெரிக்காவினது உலக மேலாதிக்க வெறியானது இருஷ்சியாவை நான்கு துண்டுகளாக்கும் திட்டத்தை வகுக்கக் காரணமான இந்தப் பேராசிரியர் Zbigniew Brzezinski இன்றைய ஒபாமாவின் அரசியல் ஆலோசகரும் வெளியுறவுக்கொள்கை வகுப்பாளருமாக இருந்தபடி சமீபத்தில் ஒபாமாவை நேட்டோ அணியின் பங்குதார நாடுகளுக்கு அனுப்பிய பின்னணியோடு இந்த இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம் நடைபெறுவதன் உட் பூசலை நாம் விளங்கிக்கொள்வதன் தொடராக இந்தக்கட்டுரை விரிந்து செல்லும்.

தொடரும்.

ப.வி.ஸ்ரீரங்கன்.
10.08.2008.


மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

  // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!) அரங்கனார...